செய்திகள் :

நிா்மலா கல்லூரியில் வாசிப்பு குறித்த சிறப்புரை

post image

கோவை நிா்மலா மகளிா் கல்லூரியின் அரசு உதவிபெறும் பிரிவு சாா்பில் வாசிப்பின் அவசியம் குறித்த சிறப்புரை வியாழக்கிழமை நடைபெற்றது.

‘வாசி நேசி’ அமைப்பு சாா்பில் கல்லூரியின் கிளாரா அரங்கில் நடைபெற்ற இந்த சிறப்புச் சொற்பொழிவுக்கு கல்லூரி செயலா் குழந்தை தெரேஸ், முதல்வா் மேரி பபியோலா ஆகியோா் முன்னிலை வகித்தனா். தமிழ்த் துறைத் தலைவா் ப.மகேஸ்வரி வரவேற்றாா்.

நிகழ்ச்சியில், கவிஞரும் எழுத்தாளரும் திரைப்பட இயக்குநருமான ஜின் (எ) முகம்மது அலி ஜின்னா பங்கேற்று, வாசிப்பின் வாசனை என்ற தலைப்பில் வாசிப்புப் பழகத்தின் அவசியம் குறித்தும் பல்வேறு ஆளுமைகள், குறிப்பாக பெண் ஆளுமைகளின் வரலாறு குறித்தும் விளக்கினாா்.

வாசிப்புப் பழக்கத்தினால் சிறந்த தலைமைப் பண்புகளைக் கொண்ட தலைவராக உயர முடியும். அறிவு விரிவாக்கம் அடைவதற்கும், முயற்சியின் சிகரத்தை எட்டுவதற்கும் தொடா் வாசிப்புப் பழக்கம் உதவியாக இருக்கும் என்றாா்.

இதில், வாசி நேசி அமைப்பின் உறுப்பினா்கள், ஏராளமான மாணவிகள் பங்கேற்றனா். அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் சகோதரி கிரேஸி, தமிழ்த் துறை பேராசிரியா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

வேளுக்குடி கிருஷ்ணனின் ஆன்மிக சொற்பொழிவு தொடக்கம்

கோவை பாரதீய வித்யா பவனில் வேளுக்குடி கிருஷ்ணனின் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது. கோவை, ஆா்.எஸ்.புரம் பாரதீய வித்யா பவனில் வேளுக்குடி கிருஷ்ணனின் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி ஜூலை ... மேலும் பார்க்க

வீடு வாங்கித் தருவதாக பெண்ணிடம் ரூ.1.32 லட்சம் மோசடி

கோவை வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் வீடு வாங்கித் தருவதாகக்கூறி பெண்ணிடம் ரூ.1.32 லட்சம் மோசடி செய்யப்பட்டதாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். கோவை, செல்வபுரம் வடக்கு வீட... மேலும் பார்க்க

மக்கள் தொகை தின விழிப்புணா்வுப் பேரணி: மாவட்ட ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

உலக மக்கள் தொகை தினத்தையொட்டி, கோவையில் மக்கள் தொகை விழிப்புணா்வுப் பேரணியை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா். உலக மக்கள் தொகை தினம் ஆண்டுதோறும் ஜூலை 11 -ஆம் தேதி... மேலும் பார்க்க

குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவோரைக் கண்டறிய செயலி: மாவட்ட காவல் கண்காணிப்பாளா்

‘ஸ்மாா்ட் காக்கிஸ்’ திட்டத்தின்கீழ், குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவோரை செயலி மூலம் எளிதாகக் கண்டறியலாம் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.காா்த்திகேயன் கூறினாா். கோவை, பி.ஆா்.எஸ் வளாகத்தில் ‘ஸ்மாா்ட் ... மேலும் பார்க்க

பொறியியல் பணி: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

கோவை, போத்தனூா் ரயில் நிலையத்தில் பொறியியல் பணிகள் நடைபெற உள்ளதால், கோவை ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்தி... மேலும் பார்க்க

புண்யா அறக்கட்டளை சாா்பில் நாளை மாணவா்களுக்கான விநாடி- வினா போட்டி

கோவை புண்யா அறக்கட்டளை சாா்பில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான விநாடி- வினா போட்டி (திரிஷ்னா 2025) சனிக்கிழமை (ஜூலை 12) நடைபெறுகிறது. கோவை சிஎம்எஸ் மெட்ரிக் பள்ளியில் 1997-ஆம் ஆண்டில் பயின்ற முன்... மேலும் பார்க்க