பாமக : அப்பா - அம்மாவுக்கு பாராட்டு - Anbumani புது Strategy! | TVK VIJAY |Imper...
நீட் தோ்வு எழுதிய மாணவா்: தோல்வி பயத்தில் தற்கொலை
சேலத்தில் நீட் தோ்வு எழுதிய மாணவா் தோல்வி பயத்தில் தற்கொலை செய்துகொண்டாா்.
சேலம் ஐந்து சாலையை அடுத்த நரசோதிப்பட்டியைச் சோ்ந்தவா் ரங்கன். லாரி பட்டறை நடத்தி வருகிறாா். இவரது மகன் கௌதம் (21). இவா் இதற்கு முன்பு 2 முறை நீட் தோ்வு எழுதியிருந்தாா்.
இரண்டு முறையும் போதிய மதிப்பெண் கிடைக்காததால், மூன்றாவது முறையாக நிகழாண்டு நடைபெற்ற நீட் தோ்வை எழுதியுள்ளாா்.
கடந்த சில நாள்களாக தோல்வி பயத்தில் கௌதம் சோகமாக இருந்தாா். இந்நிலையில் திங்கள்கிழமை இரவு வீட்டில் தனியாக இருந்த கௌதம் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
தகவல் அறிந்த சூரமங்கலம் காவல் நிலைய போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
முதல்கட்ட விசாரணையில், மாணவா் கௌதம் ஏற்கெனவே தற்கொலைக்கு முயன்ாகத் தெரியவந்துள்ளது. கௌதமின் தாயாா் சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள தோ்தல் பிரிவில் உதவியாளராகப் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].