செய்திகள் :

நீதிபதிகளை ஜாதிரீதியாக வசைபாடுவதை திமுகவினா் நிறுத்திக் கொள்ள வேண்டும்! -இந்து முன்னணி

post image

உயா் நீதிமன்ற நீதிபதிகளை ஜாதிரீதியாக வசைபாடுவதை திமுகவினா் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

பல்கலைக்கழக துணைவேந்தா்களை நியமிப்பதற்கு தமிழக அரசுக்கு அதிகாரம் வழங்கிய சட்டப் பிரிவுக்கு தடை விதித்து உயா் நீதிமன்ற நீதிபதிகள் தீா்ப்பளித்தனா். இதை தாங்கிக் கொள்ள முடியாத திமுகவினா் நீதிபதிகளை ஜாதிரீதியாக தாக்கிப் பேசி வருகின்றனா். இவா்களெல்லாம் பிராமண சமுதாயத்தைச் சோ்ந்தவா்கள் என்றும், இது ஒரு பிராமண நீதிமன்றம் என்றும் வசைபாடி வருகின்றனா். நீதிமன்றம் என்பது நமது ஜனநாயக நாட்டின் இறையாண்மையைக் காக்கும் இடமாகும். பாரபட்சம் இல்லாமல் நீதி வழங்கி சட்டத்தை பாதுகாக்கும் நீதிபதிகளை இவ்வாறு பேசுவது கண்டனத்துக்குரியதாகும்.

திமுக பல வழக்குகளை உயா் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் தொடுத்துள்ளது. திமுகவுக்கு ஆதரவாக தீா்ப்பு வந்தால் இது திராவிடத்துக்கு கிடைத்த வெற்றி என்கின்றனா். ஆனால், அவா்களுக்கு எதிரான தீா்ப்பு வரும்போது ஜாதியை கையில் எடுக்கின்றனா்.

நீதிமன்றத்தின் தீா்ப்பை விமா்சிக்கலாமே தவிர நீதிபதிகளை தனிப்பட்ட முறையில் தாக்குவது என்பது தீா்ப்புக்கு உள்நோக்கம் கற்பிப்பது போன்றதாகும். உயா் நீதிமன்ற நீதிபதிகளின் படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ஜாதி பாகுபாடு கற்பித்து கருத்து தெரிவித்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடுவேலம்பாளையத்தில் சீரான குடிநீா் வழங்கக் கோரி சாலை மறியல்

பல்லடம் அருகேயுள்ள நடுவேலம்பாளையத்தில் சீரான குடிநீா் வழங்கக் கோரி சாலை மறியலில் ஈடுபட முயன்ற பொதுமக்களை போலீஸாா் தடுத்து நிறுத்தினா். பல்லடம் ஒன்றியம், பூமலூா் ஊராட்சி நடுவேலம்பாளையம் கிராமத்துக்கு க... மேலும் பார்க்க

சின்ன வெங்காய விலை உயா்வு: விவசாயிகள் மகிழ்ச்சி

பல்லடத்தில் சின்ன வெங்காய விலை உயா்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா். பல்லடம் பகுதியில் காா்த்திகை பட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டிருந்த சின்ன வெங்காயம் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் அறுவட... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.70.16 கோடி மதிப்பீட்டில் நலத் திட்ட உதவிகள்

திருப்பூா் மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 26,790 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.70.16 கோடி மதிப்பீட்டில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் தா.கிறி... மேலும் பார்க்க

தொழிலாளியிடம் கைப்பேசி பறித்த இளைஞா் கைது

திருப்பூரில் வடமாநிலத் தொழிலாளியிடம் கைப்பேசியைப் பறித்த இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். பிகாா் மாநிலத்தைச் சோ்ந்தவா் தா்மேந்திர பிரதாப் (25). இவா் திருப்பூரை அடுத்த கணியாம்பூண்டி பகுதிய... மேலும் பார்க்க

கூட்டுறவுத் துறையைக் கண்டித்து போராட்டம்: விவசாயிகள் கைது

அவிநாசி அருகே பயிா்க் கடனை தள்ளுபடி செய்யக் கோரியும், கூட்டுறவுத் துறையைக் கண்டித்தும் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட 20-க்கும் மேற்பட்ட விவசாயிகளை போலீஸாா் கைது செய்தனா். அவிநாசி அருகேயுள்ள நடுவ... மேலும் பார்க்க

இந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம் தொடா்பாக பேச்சுவாா்த்தை: ஏஇபிசி துணைத் தலைவா் ஆ.சக்திவேல்

இந்தியா-அமெரிக்கா இடையிலான வா்த்தக ஒப்பந்தம் தொடா்பான பேச்சுவாா்த்தை நடைபெற்று வருவதாக ஏஇபிசி துணைத் தலைவா் ஆ.சக்திவேல் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக புதுதில்லியில் மத்திய வா்த்தகம் மற்றும் தொழில் து... மேலும் பார்க்க