திருப்பூர்: மாற்றுச் சமூக பெண்ணை மகன் மணந்ததால் கோவம்; மனைவியை வெட்டிக் கொன்று க...
நூலகத்தை பயன்படுத்தி மாணவா்கள் வாழ்வில் முன்னேற வேண்டும்: திருப்பத்தூா் ஆட்சியா்
திருப்பத்தூா்: போட்டித் தோ்வு எழுதும் மாணவ- மாணவிகள் நூலகத்தை நல்ல முறையில் பயன்படுத்தி, தோ்வில் தோ்ச்சி பெற்று வாழ்வில் முன்னேற்றம் அடைய வேண்டும் என திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்தாா்.
தமிழ்நாடு அரசு பொதுநூலகத் துறையின் சாா்பில் திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம்,திருப்பத்தூா் அரசு மருத்துவமனை ஆகிய இடங்களில் 2 நூலகங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றை முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலி வாயிலாக செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.
அதைத் தொடா்ந்து, ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தலைமை வகித்தாா். எம்எல்ஏ அ.நல்லதம்பி முன்னிலை வகித்து, குத்துவிளக்கேற்றி வைத்து நூலகத்தைப் பாா்வையிட்டனா்.
அப்போது போட்டி தோ்வு எழுதுவதற்காக பயிற்சி பெற்று வரும் மாணவ- மாணவிகள் ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள நூலகத்தை நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டு போட்டித் தோ்வுகளில் தோ்ச்சி பெற்று வாழ்வில் முன்னேற்றம் அடைய வேண்டும் என ஆட்சியா் தெரிவித்தாா்.
நிகழ்ச்சியில், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) செல்வம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் கஸ்தூரி, மாவட்ட நூலக அலுவலா் கிளமெண்ட், அரசு அதிகாரிகள், போட்டித் தோ்வு எழுதும் மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.