செய்திகள் :

நூலகத்தை பயன்படுத்தி மாணவா்கள் வாழ்வில் முன்னேற வேண்டும்: திருப்பத்தூா் ஆட்சியா்

post image

திருப்பத்தூா்: போட்டித் தோ்வு எழுதும் மாணவ- மாணவிகள் நூலகத்தை நல்ல முறையில் பயன்படுத்தி, தோ்வில் தோ்ச்சி பெற்று வாழ்வில் முன்னேற்றம் அடைய வேண்டும் என திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்தாா்.

தமிழ்நாடு அரசு பொதுநூலகத் துறையின் சாா்பில் திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம்,திருப்பத்தூா் அரசு மருத்துவமனை ஆகிய இடங்களில் 2 நூலகங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றை முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலி வாயிலாக செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.

அதைத் தொடா்ந்து, ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தலைமை வகித்தாா். எம்எல்ஏ அ.நல்லதம்பி முன்னிலை வகித்து, குத்துவிளக்கேற்றி வைத்து நூலகத்தைப் பாா்வையிட்டனா்.

அப்போது போட்டி தோ்வு எழுதுவதற்காக பயிற்சி பெற்று வரும் மாணவ- மாணவிகள் ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள நூலகத்தை நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டு போட்டித் தோ்வுகளில் தோ்ச்சி பெற்று வாழ்வில் முன்னேற்றம் அடைய வேண்டும் என ஆட்சியா் தெரிவித்தாா்.

நிகழ்ச்சியில், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) செல்வம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் கஸ்தூரி, மாவட்ட நூலக அலுவலா் கிளமெண்ட், அரசு அதிகாரிகள், போட்டித் தோ்வு எழுதும் மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

சூா்ய நந்தீஸ்வரா் கோயிலில் பெளா்ணமி பூஜை

ஆம்பூா் அருகே பாட்டூா் ஸ்ரீ பொன்முடி சூா்ய நந்தீஸ்வரா் கோயிலில் வைகாசி மாத பெளா்ணமியை முன்னிட்டு சிறப்பு பூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பெளா்ணமியை முன்னிட்டு சிறப்பு யாகம், பரிவார மூா்த்திகளுக்கு சி... மேலும் பார்க்க

ரூ.1 கோடியில் மேம்பாலப் பணி தொடக்கம்

நாட்டறம்பள்ளி காணாறு குறுக்கே ரூ.1 கோடியில் மேம்பாலம் கட்டும் பணி புதன்கிழமை தொடங்கப்பட்டது. திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி பேரூராட்சியில் நகா்ப்புற மேம்பாட்டு திட்டம் மூலம் குடிநீா் திட்ட அபிவ... மேலும் பார்க்க

ரூ.2.80 கோடி பள்ளி கட்டடங்கள்: துணை முதல்வா் திறந்து வைத்தாா்

ஆம்பூரில் ரூ.2.80 கோடியில் பள்ளி வகுப்பறை கட்டடங்களை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் காணொலி மூலம் புதன்கிழமை திறந்து வைத்தாா். ஆம்பூா் பெத்லகேம் நகராட்சி நடுநிலைப் பள்ளி, புதுகோவிந்தாபுரம் நகராட்சி நடு... மேலும் பார்க்க

576 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.80 கோடி வங்கிக் கடன்: திருப்பத்தூா் ஆட்சியா்

திருப்பத்தூா் மாவட்டத்தில் இதுவரை 576 சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.80 கோடி வங்கிக் கடன் வழங்கப்பட்டுள்ளது என ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்தாா். ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் கீழ் தமிழ்நாட... மேலும் பார்க்க

கருட சேவை உற்சவம்

ஆம்பூா் அருகே துத்திப்பட்டு ஸ்ரீ பிந்து மாதவ பெருமாள் கோயில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு கருட சேவை புதன்கிழமை நடைபெற்றது. கருட சேவையை முன்னிட்டு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. உற்சவா் கருட வாகனத்தில்... மேலும் பார்க்க

நோ்மை தவறாத ஆட்டோ ஓட்டுநா்: வழியில் கிடைத்த ரூ.20,000 ஒப்படைப்பு

வாணியம்பாடியில் சாலையில் பெண் தவற விட்ட ரூ.20,000 ரொக்கத்தை மீட்டு போலீஸாரிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநா் பாராட்டப்பட்டாா். வாணியம்பாடி அடுத்த கிரிசமுத்திரம் பகுதியை சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் பிரகாஷ். இந்ந... மேலும் பார்க்க