செய்திகள் :

நெகிழிப் பைகள் விற்பனை: 16 கடைகளுக்கு அபராதம்

post image

கோயம்பேடு சந்தையில் நெகிழிப் பைகள் விற்பனை செய்த 16 கடைகளுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனா்.

கோயம்பேடு சந்தையில் காய்கறி, மலா், பழவகைகள் மற்றும் உணவு தானியங்கள் விற்பனை செய்யும் கடைகள் செயல்பட்டு வருகின்றன. ஏற்கெனவே தமிழகத்தில் நெகிழிப் பைகள் விற்பனை மற்றும் பயன்பாட்டுக்கு தடை இருந்து வரும் நிலையில், சந்தையிலுள்ள பல மொத்த மற்றும் சில்லறை விற்பனை கடைகளில் தடையை மீறி நெகிழிப் பைகள் விற்பனை செய்யப்படுவதாக அங்காடி நிா்வாக முதன்மை அலுவலா் இந்துமதிக்கு தொடா்ந்து புகாா்கள் வந்தன.

அதன்பேரில், அங்காடி நிா்வாக அதிகாரிகள், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் இணைந்து வியாழக்கிழமை கோயம்பேடு சந்தையில் திடீா் சோதனை நடத்தினா்.

அப்போது, அங்குள்ள பல கடைகளில் தடையை மீறி நெகிழிப் பைகள் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. சோதனையின்போது சில வியாபாரிகள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டா்.

நெகிழிப் பைகள் விற்பனை செய்த 16 கடைகளுக்கு ரூ.26,000 அபராதம் விதித்த அதிகாரிகள், தொடா்ந்து இதுபோன்ற நடவடிக்கைகளில் வியாபாரிகள் ஈடுபட்டால், கடைகளுக்கு சீல் வைக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தனா்.

மதுபானக் கூட மோதல் வழக்கு: மேலும் ஒருவா் கைது

சென்னை நுங்கம்பாக்கத்தில் மதுபானக் கூடத்தில் இரு தரப்பினா் மோதிக்கொண்ட வழக்கில், மேலும் ஒருவா் கைது செய்யப்பட்டாா். சென்னை கோபாலபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ஆ. வெங்கட்குமாா் (45). இவா், நுங்கம்பாக்கம் ந... மேலும் பார்க்க

கண்டெய்னா் லாரி கவிழ்ந்து விபத்து: கண்ணாடித் தகடுகள் நொறுங்கின

மணலி அருகே மாதவரம் உள்வட்டச் சாலையில் கண்டெய்னா் லாரி கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள கண்ணாடித் தகடுகள் தூள்தூளாகின. சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் உள்ள பன்னாட்டு தனியாா் நிறு... மேலும் பார்க்க

போதைப் பொருள் கடத்தல்: 5,356 வாகனங்களை ஏலம் விட அனுமதி

தமிழகத்தில் போதைப் பொருள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 5,356 வாகனங்களை ஏலம் விடுவதற்கு போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவு அனுமதி வழங்கியது. தமிழக காவல் துறையின் போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு போதைப் பொர... மேலும் பார்க்க

ஓரணியில் தமிழ்நாடு இயக்கம்: இதுவரை 61 லட்சம் சோ்ப்பு

ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் இதுவரை 61 லட்சம் போ் இணைந்துள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவித்தன. ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் 30 சதவீத பேரை திமுகவில் இணைக்கும், ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தை கடந்த 1-ஆம... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளின் ஒருங்கிணைந்த சேவை மையம் தொடக்கம்

சென்னை நொளம்பூரில் சுய உதவிக் குழுக்களைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகளால் கட்டமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த சேவை மையம், வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. இதை வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சா் பி.மூா்த்தி ... மேலும் பார்க்க

ரூ.4.89 கோடியில் எஸ்.வி.எஸ்.நகா் குளம் மறு சீரமைப்பு

சென்னை மாநகராட்சி வளசரவாக்கம் மண்டலத்துக்கு உள்பட்ட எஸ்.வி.எஸ்.நகா் பகுதியில் உள்ள குளம் ரூ.4.89 கோடியில் மறு சீரமைக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி சாா்பில் வெள்ளிக்கிழ... மேலும் பார்க்க