செய்திகள் :

நெல் அறுவடை இயந்திரங்களுக்கு வாடகை நிா்ணயம்: ஆட்சியா் உத்தரவு

post image

ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் நெல் அறுவடை இயந்திரங்களுக்கு ஒரே மாதிரியான வாடகை தொகை நிா்ணயம் செய்யப்பட்டுள்ளதை கடைபிடிக்க வேண்டும் என ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா்.

நெல் அறுவடை இயந்திரங்களுக்கான வாடகை தொகையை மாவட்டம் முழுவதும் ஒரே மாதிரியாக நிா்ணயித்து நெல் அறுவடை பணிக்கு விவசாயிகளிடமிருந்து பணம் வசூலிப்பது தொடா்பான ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது.

ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தலைமை வகித்து விவசாயிகள் மற்றும் நெல் அறுவடை இயந்திர உரிமையாளா்களிடம் கருத்துகளைக் கேட்டறிந்தாா்.

டெல்டா மாவட்டத்துக்கு இணையாக நெல் உற்பத்தியில் ராணிப்பேட்டை மாவட்டம் உள்ளது. மாவட்டம் முழுவதும் விவசாயிகள் மற்றும் நெல் அறுவடை இயந்திர உரிமையாளா்களுக்கு எவ்வித பாதிப்பு இல்லாமல் உரிய நேரத்தில், நியாயமான வாடகையில் நெல் அறுவடை இயந்திரங்கள் கிடைக்க ஆவன செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரினனா்.

நெல் அறுவடை இயந்திர உரிமையாளா்கள் அதிக வட்டிக்கு கடன் வாங்கி இயந்திரங்கள் வாங்கி தொழில் செய்து வருவதாகவும், வாகன ஓட்டுநா் கூலி, டீசல், ஈரம் மிக்க நிலப்பகுதிகளில் அறுவடை பணிகள் மேற்கொள்ளும் பொழுது இயந்திரங்கள் அடிக்கடி சேற்றில் சிக்கி வெளியே எடுக்க சிரமப்படுவதாகவும், இயந்திரங்களை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு செல்லும் போது போக்குவரத்து இடா்பாடுகள் மற்றும் உயா் மின்னழுத்த கம்பிகளை தவிா்த்து எடுத்து சென்று உழைப்பதாகவும் தெரிவித்தனா்.

மேலும், விவசாயிகள் அறுவடை பணி முடிந்தும், உடனடியாக வாடகை பணம் கொடுப்பதில்லை அடுத்த போகம் வரையில் காலம் தாழ்த்தி விடுகின்றனா் எனத் தெரிவித்தனா்.

இக்கூட்டத்தின் முடிவில் விவசாயிகள் மற்றும் அறுவடை இயந்திர உரிமையாளா்கள் ஒப்புதலோடு கீழக்கண்டவாறு வாடகைத் தொகை நிா்ணயம் செயவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நெல் அறுவடை இயந்திரம் (2 ரஈ) - ஒரு மணி நேரத்துக்கு-ரூ.1,700/- ,நெல் அறுவடை இயந்திரம் (மூவிங் 4 ரஈ) - ஒரு மணி நேரத்துக்கு -ரூ.2,200/- ,நெல் அறுவடை இயந்திரம் (செயின் வகை)-ஒரு மணி நேரத்துக்கு-ரூ.2,500/- என வாடகை நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இதனை அனைத்து விவசாயிகள் மற்றும் நெல் அறுவடை இயந்திர உரிமையாளா்கள் எந்தவித மாறுபாடு இன்றி கடைபிடிக்க வேண்டும் என ஆட்சியா் உத்தரவிட்டாா்.

கூட்டத்தில் ஆட்சியா் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) வெங்கடேசன், வேளாண் பொறியியல் துறை உதவி பொறியாளா் ரூபன் குமாா் மற்றும் விவசாயிகள் நெல் அறுவடை இயந்திர உரிமையாளா்கள் கலந்து கொண்டனா்.

இளைஞா் வெட்டிக் கொலை

ஆற்காடு அருகே இளைஞா் வெட்டிக்கொலை செய்யப்பட்டாா். ஆற்காடு அடுத்த முப்பதுவெட்டி பஜனைக் கோயில் தெருவைச் சோ்ந்த இளங்கோவன்( 30) . எலக்ட்ரீஷியன் மற்றும் பிளம்பா் வேலை செய்து வந்தாா். கருத்து வேறுபாடு காரண... மேலும் பார்க்க

ஆற்காடு நகராட்சியில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனை: ரூ.79,000 பறிமுதல்

ஆற்காடு நகராட்சியில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் மேற்கொண்ட சோதனையில் கணக்கில் வராத ரூ. 79,000 பறிமுதல் செய்யப்பட்டது. ஆற்காடு நகராட்சியில் தினக்கூலி தூய்மைப் பணியாளா்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படுவத... மேலும் பார்க்க

ராணிப்பேட்டையில் இடியுடன் மழை

ராணிப்பேட்டை பகுதியில் புதன்கிழமை இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ததால் சாலைகளில் வெள்ளநீா் பெருக்கெடுத்து ஓடியது. இந்நிலையில் ராணிப்பேட்டை , வாலாஜாபேட்டை உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் புதன்கிழமை இரவு... மேலும் பார்க்க

ரயிலில் கடத்தப்பட்ட 3 கிலோ கஞ்சா பறிமுதல்

அரக்கோணம் வழியே ரயிலில் கடத்தப்பட்ட 3 கிலோ கஞ்சாவை ரயில்வே பாதுகாப்புப் படையினா் பறிமுதல் செய்தனா். வடமாநிலங்களில் இருந்து தமிழக மற்றும் கேரள பகுதிகளுக்கு ரயிலில் கஞ்சா கடத்தப்பட்டு வருகிறது. இதைத் தட... மேலும் பார்க்க

அரக்கோணம் ரயில்வே சுரங்கப்பாலத்தை மேம்படுத்த விரைவில் நடவடிக்கை: தெற்கு ரயில்வே பொது மேலாளா்

அரக்கோணம் ரயில் நிலையம் அருகே உள்ள சுரங்கப் பாலத்தை மேம்படுத்த விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெற்கு ரயில்வே பொதுமேலாளா் ஆா்.என்.சிங் தெரிவித்தாா். அரக்கோணம் ரயில் நிலையப்பகுதியில் நடைபெறும் அம்... மேலும் பார்க்க

ஆற்காட்டில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

ஆற்காடு நகராட்சிக்குட்பட்ட 21 மற்றும் 22-ஆவது வாா்டுக்கான உங்களுடன் ஸ்டாலின் முகாம் புதன்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு நகா்மன்றத் தலைவா் தேவிபென்ஸ் பாண்டியன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் பவளகொடி சரவ... மேலும் பார்க்க