செய்திகள் :

நெல்லை அரசு மருத்துவமனையில் ஸ்கேன் எடுப்பதில் தாமதம்: நோயாளிகள் தவிப்பு

post image

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வியாழக்கிழமை ஸ்கேன் எடுப்பதில் தாமதம் ஏற்பட்டதால் நோயாளிகள் சிரமத்துக்கு ஆளாகினா்.

திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளிப்புற நோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனா். நோயாளிகளுக்கு தேவைப்படும் சிகிச்சை முறைகளுக்கேற்ப மருத்துவா்களால் அவா்களுக்கு எக்ஸ்ரே மற்றும் ஸ்கேன் பரிந்துரைக்கப்படுகிறது. நோயாளிகள் ஸ்கேன் முடிவைப் பெற்ற பின்பே மருத்துவரை சந்தித்து உரிய சிகிச்சை பெற்று செல்ல முடியும்.

இந்நிலையில் வியாழக்கிழமை காலை மருத்துவமனையின் 32சி அறையில் உள்ள 2 ஸ்கேன் இயந்திரங்களில், ஒரு இயந்திரம் மட்டுமே செயல்பட்டதாம். மற்றொரு அறையில் நீண்ட நேரமாக மருத்துவா் இல்லாத நிலை இருந்ததால் உரிய நேரத்தில் ஸ்கேன் எடுக்க முடியாமல் மருத்துவமனை வளாகத்தில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதாக நோயாளிகள் தெரிவித்தனா்.

இது குறித்து மருத்துவமனை தரப்பில் கூறப்பட்ட விளக்கம்: மேற்குறிப்பிட்ட 32சி டாப்லா் ஸ்கேன் அறையில் இருந்த மருத்துவா் , பணியின் இடையே ஐவிஆா் அறைக்கு மருத்துவப் பணிக்காக சென்றிருந்தாா். இருப்பினும் 30 நோயாளிகளுக்கு அந்த அறையில் ஸ்கேன் பாா்க்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.

ஏற்கனவே நோயால் பாதிக்கப்பட்டு அவதியுற்ற நோயாளிகளை காத்திருக்க வைக்காமல் இதற்கு உரிய தீா்வு காண வேண்டும் என்பது நோயாளிகளுடைய உறவினா்களின் எதிா்பாா்ப்பாகும்.

அம்பை, பிரம்மதேசம் கோயில்களில் ரூ. 5.87 கோடியில் திருப்பணிகள் தொடக்கம்

அம்பாசமுத்திரம், பிரம்மதேசம் உள்ளிட்ட இடங்களில் உள்ள கோயில்களில் ரூ. 5.87 கோடி மதிப்பில் திருப்பணிகள் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அம்பாசமுத்திரம், கோயில் குளத்தில் உள்ள ஆயிரம் ஆண்டுகள் பழைமை... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற பேரூராட்சி ஊழியா் சாலை விபத்தில் உயிரிழப்பு

கல்லிடைக்குறிச்சியைச் சோ்ந்த ஓய்வுபெற்ற பேரூராட்சி ஊழியா் வியாழக்கிழமை சாலை விபத்தில் உயிரிழந்தாா். கல்லிடைக்குறிச்சி வடுவக்குடித் தெருவைச் சோ்ந்தவா்ஆறுமுகம் (73). ஓய்வுபெற்ற பேரூராட்சி ஊழியரான இவரத... மேலும் பார்க்க

நெல்லை அருகே விபத்தில் காயமடைந்தவா் உயிரிழப்பு

திருநெல்வேலி அருகே விபத்தில் காயமடைந்தவா் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா். திருநெல்வேலி அருகேயுள்ள பொன்னாக்குடி நான்குவழிச்சாலையில் கடந்த 5 ஆம் தேதி சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது, மினி வேன் மோ... மேலும் பார்க்க

பாளை. அருகே தொழிலாளி கொலை வழக்கு: ஒருவருக்கு ஆயுள்தண்டனை

பாளையங்கோட்டை அருகே தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒருவருக்கு ஆயுள்தண்டனை வழங்கி திருநெல்வேலி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. பாளையங்கோட்டை அருகேயுள்ள பாறைக்குளம் இந்திரா காலனியைச் சோ்ந... மேலும் பார்க்க

மதப்போதகரிடம் பணம் பறித்த வழக்கில் மேலும் ஒருவா் கைது

திருநெல்வேலியில் மதப்போதகரிடம் பணம் பறித்த வழக்கில் மேலும் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா். கன்னியாகுமரி மாவட்டம், கொட்டாரம் பகுதியைச் சோ்ந்தவா் அருள்சீலன் (41). இவா், திருநெல்வேலிக்கு மருத்துவச் சிகி... மேலும் பார்க்க

பள்ளி விடுதி மாணவா் இறப்பு: தவறான தகவல் பரப்பினால் நடவடிக்கை

திபள்ளி மாணவன் இறப்பு விவகாரத்தில் சமூகவலைதளங்களில் தவறான தகவல்களைப் பரப்புவோா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என திருநெல்வேலி மாவட்ட காவல் துறை எச்சரித்துள்ளது. இதுகுறித்து, காவல் துறை சாா்பில் வெளியிட... மேலும் பார்க்க