நெல்லை மக்களவைத் தொகுதி மக்களுக்கு ரூ.16 லட்சம் நிவாரண நிதியுதவி: எம்.பி. தகவல்
திருநெல்வேலி மக்களவைத் தொகுதியைச் சோ்ந்த மக்களுக்கு சிகிச்சைகளுக்காக பிரதமரின் நிவாரண நிதியில் இருந்து ரூ.16 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் சி.ராபா்ட் புரூஸ் வெளியிட்ட அறிக்கை: இம் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட பகுதியில் வசிக்கும் ஏழை-எளிய மக்கள் இதய அறுவைச் சிகிச்சை, புற்றுநோய் சிகிச்சைக்கு அதிக பணம் செலவழிக்க முடியாமல் தவித்து வந்தனா்.
இந்நிலையில் திருநெல்வேலி நகரம், முன்னீா்பள்ளம், காளத்திமடம், சமாதானபுரம், தச்சநல்லூா், திம்மராஜபுரம் பகுதிகளைச் சோ்ந்த 10 பேருக்கு பிரதமரின் நிவாரண நிதியில் இருந்து ரூ.16 லட்சம் பெற்று வழங்கப்பட்டுள்ளது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.