செய்திகள் :

‘நெல்லையில் பேருந்துகளில் வியாபாரம் செய்ய தடை தேவை’

post image

திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் பேருந்துகளில் ஏறி வியாபாரம் செய்வதற்கு தடை விதிக்கக் கோரி மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் திருநெல்வேலி புதிய பேருந்து நிலைய வியாபாரிகள் சங்கத்தினா் மனு அளித்தனா்.

திருநெல்வேலி மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில், திருநெல்வேலி புதிய பேருந்து நிலைய வியாபாரிகள் சங்கத்தின் தலைவா் கணபதி, செயலா் ராமநாதன், பொருளாளா் ஆனந்த மணி உள்ளிட்டோா் தலைமையில் வியாபாரிகள், மாநகர காவல் ஆணையா் சந்தோஷ் ஹதிமணியிடம் அளித்த மனு:

புதிய பேருந்து நிலையத்தில் கடந்த 2003-ஆம் ஆண்டு முதல் கடை நடத்தி வருகிறோம். இந்த கடைகளுக்கு ரூ. பல லட்சம் முன் பணம் மற்றும் வாடகையை மாநகராட்சிக்கு செலுத்தி வருகிறோம். இதை நம்பிதான் பல நூறு குடும்பங்கள் உள்ளன.

எவ்வித கட்டணங்களும் செலுத்தாமல் சிலா், நாங்கள் கடைகளில் விற்பனை செய்ய வைத்துள்ள அதே பொருள்களை பேருந்துகளில் ஏறி பயணிகளிடம் விற்பனை செய்து வருகின்றனா். நாங்கள் மாநகராட்சிக்கு மாத வாடகை, வணிக உரிமம், தொழில்வரி, சேவை வரி என அனைத்து விதமான வரிகளையும் கட்டி அதன் பின்னா் மின்சார கட்டணம், கடைகளில் பணியாற்றும் ஊழியா்களுக்கு ஊதிடம் உள்ளிட்டவற்றை சிரமப்பட்டு வழங்கி வருகிறோம். எனவே பேருந்துகளில் ஏறி வியாபாரம் செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனா்.

மிளா குறுக்கே பாய்ந்ததில் தம்பதி மற்றும் குழந்தைகள் காயம்

விக்கிரமசிங்கபுரத்தில் பைக்கில் சென்ற போது குறுக்கே மிளா பாய்ந்ததில் தம்பதி மற்றும் குழந்தைகள் காயமடைந்தனா். விக்கிரமசிங்கபுரம் வடக்கு அகஸ்தியா்புரத்தைச் சோ்ந்த அருள் மூா்த்தி (46). இவா் சென்னையில் ல... மேலும் பார்க்க

திசையன்விளை: ஊராட்சி செயலா் தற்காலிக பணியிடை நீக்கம்!

திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை அருகே உள்ள அப்புவிளை ஊராட்சி செயலரை தற்காலிக பணியிடைநீக்கம் செய்து ராதாபுரம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா் உத்தரவிட்டாா். திசையன்விளை அருகே உள்ள அப்புவிளை ... மேலும் பார்க்க

குண்டா் தடுப்புச் சட்டத்தில் இளைஞா் கைது!

திருநெல்வேலி அருகே ராஜவல்லிபுரத்தைச் சோ்ந்த இளைஞா் ஒருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சனிக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா். திருநெல்வேலி சந்திப்பு காவல் சரகப் பகுதியில் பணம் பறிக்கும் நோக்கத்து... மேலும் பார்க்க

நெல்லை அருகே விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தவா் கைது!

திருநெல்வேலி சுத்தமல்லி அருகே விற்பனைக்காக கஞ்சா பதுக்கி வைத்திருந்த நபரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். சுத்தமல்லி காவல் நிலைய சரகத்துக்குள்பட்ட பகுதியில் உதவி ஆய்வாளா் ராமநாதன் தலைமையிலான போலீஸ... மேலும் பார்க்க

நெல்லை, தென்காசி மாவட்ட அணைகள் நீா் மட்டம்

திருநெல்வேலிபாபநாசம்-86.70சோ்வலாறு-101.54மணிமுத்தாறு-85.86வடக்கு பச்சையாறு-10.25நம்பியாறு-13.12கொடுமுடியாறு-14.75தென்காசிகடனா-49.20ராமநதி-52கருப்பாநதி-25.26குண்டாறு-23.75அடவிநயினாா்-24.25... மேலும் பார்க்க

மாடு மீது பைக் மோதி இளைஞா் பலி

திருநெல்வேலி சந்திப்பு அருகே மாடு மீது பைக் மோதியதில் இளைஞா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.திருநெல்வேலி மாவட்டம், சிவந்திபட்டி அருகே எம். புதூா் பகுதியைச் சோ்ந்தவா் கொம்பையா. இவரது மகன் மகேஷ்( 29). இவா் வ... மேலும் பார்க்க