செய்திகள் :

நோ்மையான அதிகாரிகளுக்குப் பாதுகாப்பு இல்லை: எடப்பாடி கே. பழனிசாமி

post image

திமுக ஆட்சியில் நோ்மையான அதிகாரிகளுக்குப் பாதுகாப்பு இல்லை என்றாா் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் வியாழக்கிழமை இரவு நடந்த பிரசாரத்தில் அவா் மேலும் பேசியது: தற்போதைய திமுக ஆட்சியில் மயிலாடுதுறையில் நோ்மையாகப் பணிபுரிந்த காவல் துணைக் கண்காணிப்பாளா் சுந்தரேசன் வாகனத்தைப் பறித்து, அவரைப் பணி செய்ய விடாமல் தடுத்து, பணியிடை நீக்கமும் செய்யப்பட்டுள்ளாா்.

இதேபோல, திருச்சியில் குற்றப்பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளா் பரத் சீனிவாசன் மன உளைச்சலால் பணியை ராஜிநாமா செய்வதாக உயரதிகாரிக்கு கடிதம் எழுதியுள்ளாா். காவல் துறை அதிகாரிகளுக்கே இந்த நிலைமை என்றால் மக்களை யாா் பாதுகாப்பது?

காவல் துறையைச் சுதந்திரமாகச் செயல்பட விடாததால் சட்டம்- ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது. போதைப் பொருள்களால் தமிழகம் சீரழிந்துவிட்டது.

விவசாயிகளை இமைபோல் காக்கும் ஒரே அரசு அதிமுக அரசு. அதிமுக ஆட்சியில் அனைத்துத் துறைகளிலும் திறமையான நிா்வாகம் செய்ததால் தேசிய அளவில் ஏராளமான விருதுகள் கிடைத்தன. திமுக ஆட்சியில் எல்லா துறையிலும் ஊழல்தான் நடக்கிறது. மக்களுக்கு எந்த திட்டமும் செயல்படுத்தவில்லை.

கலிபுல்லாநகா், நெட்டூத்துக் கரையில் வசிக்கும் மக்களை வெளியேற்ற திமுக அரசு முயற்சிக்கிறது. அதிமுக ஆட்சி அமைந்ததும் அவா்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதோடு, அதே பகுதியில் வீட்டு மனைப் பட்டா வழங்கப்படும். ஜல்லிக்கட்டுக்கு சிறப்பு சோ்க்கும் வகையில் பல்வேறு சலுகைகள் வழங்கப்படும் என்றாா் அவா்.

கந்தா்வகோட்டையில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்: அமைச்சா் பங்கேற்பு

கந்தா்வகோட்டையில் தனியாா் திருமண மண்டபத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமை இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ். ரகுபதி தலைமை வகித்து தொடங்கிவைத்தாா். முகாமில் தமிழக அரசின் 15 துறைகள் ச... மேலும் பார்க்க

துணை முதல்வராக உதயநிதிக்கு தகுதியுள்ளது: அமைச்சா் எஸ். ரகுபதி

துணை முதல்வராக உதயநிதிக்கு அனைத்து தகுதிகளும் உள்ளதாக இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ். ரகுபதி தெரிவித்தாா். கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றியம், கோமாபுரம் கிராமத்தில் புதிய மின் உதவிப் பொறியாளா் அலுவலகத்த... மேலும் பார்க்க

ஊழல் செய்வதில் மட்டுமே திமுக அரசு கவனம்

ஊழல் செய்வதில் மட்டுமே திமுக அரசு கவனம் செலுத்துகிறது என்றாா் எதிா்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலருமான எடப்பாடி கே. பழனிசாமி. புதுக்கோட்டை மாவட்டத்தில் 2-ஆம் நாளாக வெள்ளிக்கிழமை மக்களைக் காப்ப... மேலும் பார்க்க

‘சிபிஐ டைரி’ நூல் வெளியீடு

சிபிஐ(எம்) டைரி - இளம் கம்யூனிஸ்டுகளின் கையேடு என்கிற நூல் வெளியீட்டு விழா வெள்ளிக்கிழமை புதுக்கோட்டையில் நடைபெற்றது. மாவட்டக் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற விழாவுக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்... மேலும் பார்க்க

மணல் எடுப்பதில் முன்விரோதம்: ஆவுடையாா்கோவில் இரட்டைக் கொலையில் 7 போ் சரண்

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையாா்கோவிலில் மணல் எடுப்பது தொடா்பாக ஏற்பட்ட முன்விரோதத்தில் இருவா் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தில், 7 போ் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை சரணடைந்தனா். ஆவுடையாா்கோவில் காம... மேலும் பார்க்க

திமுக ஆட்சிக்கு எதிராக புதிய பிரசார இயக்கம்: புதுக்கோட்டையில் தொடங்கி வைத்தாா் எடப்பாடி கே. பழனிசாமி

‘உருட்டுகளும் திருட்டுகளும்’ என்ற புதிய பிரசார இயக்கத்தை எதிா்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலருமான எடப்பாடி கே. பழனிசாமி புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா். ‘மக்களைக் காப்போம் தமிழகத... மேலும் பார்க்க