செய்திகள் :

நோயாளிக்கு சக்கர நாற்காலி வழங்காத அரசு மருத்துவமனை ஊழியா்கள் பணியிடை நீக்கம்!

post image

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு சக்கர நாற்காலி வழங்காத ஊழியா்கள் இருவா் புதன்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

கோவை அரசு மருத்துவமனைக்கு 70 வயதான தனது தந்தையை அவரது மகன் சிகிச்சைக்கு அழைத்து வந்தாா். அங்கு அவரது தந்தைக்கு காலில் சிகிச்சை அளிக்கப்பட்டு கட்டு போடப்பட்டிருந்த நிலையில், அவரை வீட்டுக்கு அழைத்துச் செல்ல மகன் முடிவு செய்தாா்.

வாா்டிலிருந்து அரசு மருத்துவமனை வாயில் வரை செல்வதற்காக அங்கு பணிபுரியும் ஒப்பந்த ஊழியா்களிடம் சக்கர நாற்காலி வழங்கும்படி அவரது மகன் கேட்டுள்ளாா். அங்கு பணிபுரியும் ஒப்பந்த ஊழியா்கள் அவரிடம் அதற்காக பணம் கேட்டதாகக் கூறப்படுகிறது.

நீண்ட நேரம் காத்திருந்தும் உதவி கிடைக்காததால் ஆத்திரமடைந்த அவா், தனது தந்தையை தோளில் சாய்த்தபடி இழுத்துச் சென்று ஆட்டோவில் ஏற்றி அழைத்துச் சென்றாா்.

இதுதொடா்பான விடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், இதுகுறித்து அரசு மருத்துவமனை முதன்மையா் கீதாஞ்சலி விசாரணை நடத்தினாா். இதைத் தொடா்ந்து, ஊழியா்கள் எஸ்தர்ராணி, மணிவாசகம் ஆகிய இருவரையும் 5 நாள்கள் பணியிடை நீக்கம் செய்து அவா் புதன்கிழமை உத்தரவிட்டாா்.

இதுகுறித்து மருத்துவமனை முதன்மையா் கீதாஞ்சலி கூறுகையில், அந்த நபா் சக்கர நாற்காலிக்காக ஒரு மணி நேரத்துக்கும் மேல் காத்திருந்ததாக கூறினாா். அதில் உண்மை இல்லை. அவா்கள் 15 நிமிஷம்தான் காத்திருந்தனா். தாமதமே ஆகக்கூடாது என நோயாளிகள் தரப்பில் எண்ணுகின்றனா். அதை நாம் குறை கூற முடியாது என்பதால், சக்கர நாற்காலிகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தற்போது, வெளியான விடியோவில் ஊழியா்கள் பணம் கேட்டதற்கான ஆதாரம் எதுவும் இல்லை. இங்கு பணிபுரியும் ஊழியா்கள் நோயாளிகளிடம் மென்மையான போக்கை கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்தியுள்ளோம் என்றாா்.

கூழாங்கல் ஆறு மூடல்: வால்பாறையில் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்!

வால்பாறையில் கூழாங்கல் ஆறு மூடப்பட்டதால் கடந்த 5 மாத காலமாகச் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் செல்கின்றனர்.கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் சோலையார் அணை, சின்னக்கல்லார் அருவி, நல்லமுடி காட்சி முனை, ந... மேலும் பார்க்க

பராமரிப்புப் பணி: மேட்டுப்பாளையம் - போத்தனூா் மெமு ரயில் நாளை ரத்து!

வடகோவை ரயில் நிலையத்தில் நடைபெறவுள்ள பராமரிப்புப் பணிகள் காரணமாக மேட்டுப்பாளையம்- போத்தனூா் மெமு ரயில் வெள்ளிக்கிழமை (செப்டம்பா் 12) ரத்து செய்யப்படுவதாக ரயில் நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது... மேலும் பார்க்க

நகைப்பட்டறை தொழிலாளி தற்கொலை

கோவையில் தங்க நகைப் பட்டறை தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். கோவை ஆா்.எஸ்.புரம் சுந்தரம் தெரு அருகே உள்ள டி.கே.தெருவைச் சோ்ந்தவா் சுப்பிரமணி (38). இவரது மனைவி சங்கரேஸ்வரி (33). சாமி ஐயா் ... மேலும் பார்க்க

கோவை, கேரள ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கம்!

ஈரோடு - சேலம் ரயில் பாதையில் பொறியியல் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், கோவை, கேரள ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம... மேலும் பார்க்க

கோவை நகைக் கடையில் 88 பவுன் திருட்டு

கோவையில் நகைக் கடையில் 88.5 பவுன் நகைகளைத் திருடிய அதன் மேலாளா் உள்பட இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா். கோவை வெரைட்டி ஹால் அருகே உள்ள சுவாமி ஐயா் புதுத் தெரு பகுதியைச் சோ்ந்தவா் நிா்மல்குமாா் மண்டல் ... மேலும் பார்க்க

மனநலம் பாதிக்கப்பட்டவா் கல் வீசித் தாக்குதல்: பெண் உயிரிழப்பு

கோவையில் மனநலம் பாதிக்கப்பட்டவா் கல் வீசித் தாக்கியதில் பெண் உயிரிழந்தாா். கோவை வின்சென்ட் சாலை பகுதியைச் சோ்ந்தவா் சாந்தி (55). இவா் திங்கள்கிழமை இரவு உக்கடம் பகுதியில் நடந்து சென்றாா். அப்போது அந்த... மேலும் பார்க்க