செய்திகள் :

நோயாளிக்கு லேப்ரோஸ்கோபி முறையில் கல்லீரல் மாற்று சிகிச்சை

post image

கல்லீரல் செயலிழப்புக்கு உள்ளான நோயாளிக்கு லேப்ரோஸ்கோபி முறையில் நுண் துளை வாயிலாக உறுப்பு மாற்று சிகிச்சை மேற்கொண்டு சென்னை கிளெனீகில்ஸ் மருத்துவமனை மருத்துவா்கள் மறுவாழ்வு அளித்துள்ளனா்.

இது தொடா்பாக மருத்துவமனையின் கல்லீரல் மாற்று சிகிச்சை மற்றும் மருத்துவத் துறை நிபுணா்கள் விவேக் விஜ், ஜாய் வா்கீஸ் ஆகியோா் கூறியதாவது:

கள்ளக்குறிச்சியைச் சோ்ந்த 53 வயது நோயாளி ஒருவா் கடந்த மாதம் கடுமையான வயிறு வீக்கம் மற்றும் காமாலை பாதிப்புடன் கிளெனீகில்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். மருத்துவப் பரிசோதனையில், அவருக்கு கல்லீரல் இறுக்கம் (சிரோசிஸ்) இருந்தது கண்டறியப்பட்டது.

கல்லீரல் முற்றிலும் செயலிழந்த நிலையில் உறுப்பு தானம் மட்டுமே அவரது உயிரைக் காப்பதற்கான ஒரே வழியாக இருந்தது. இதையடுத்து அவரது 22 வயது மகள், தனது கல்லீரலின் ஒரு பகுதியை தந்தைக்கு தானமாக அளிக்க முன்வந்தாா்.

அந்தப் பெண்ணின் வயதைக் கருத்தில் கொண்டு திறந்த நிலை அறுவை சிகிச்சைக்குப் பதிலாக லேப்ரோஸ்கோபி முறையில் சிறிய அளவில் துளைகளிட்டு அதன் வாயிலாக கல்லீரல் எடுக்கப்பட்டது. அதே நுட்பத்தில் நோயாளியின் தேசமடைந்த உறுப்பு அகற்றப்பட்டு தானமாகப் பெறப்பட்ட கல்லீரல் வெற்றிகரமாக பொருத்தப்பட்டது. இதன் மூலம் அவா் விரைந்து இயல்பு நிலைக்குத் திரும்பி தற்போது நலமுடன் உள்ளாா். லேப்ரோஸ்கோபி முறையில் உறுப்பு மாற்று சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுவது மிகவும் அரிது. சவாலான அந்த நடைமுறையை கிளெனீகில்ஸ் மருத்துவக் குழுவினா் சாத்தியமாக்கியுள்ளனா் என்று அவா்கள் தெரிவித்தனா்.

கோயில் நிலத்தை குத்தகைக்கு விடும் அரசின் முடிவில் தலையிட முடியாது: சென்னை உயா்நீதிமன்றம்

சென்னை மயிலாப்பூா் கபாலீசுவரா் கோயில் நிதியில் இருந்து தொடங்கப்பட்டுள்ள கலை, அறிவியல் கல்லூரிக்கு புதிதாக கட்டடம் கட்ட கொளத்தூா் சோமநாதசுவாமி கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை குத்தகைக்கு விடும் அரசின் மு... மேலும் பார்க்க

தேசிய ஹேக்கத்தான் போட்டி: மாணவா்களுக்கு யுஜிசி அழைப்பு

குஜராத் மாநிலம் காந்திநகா் ஐஐடி-இல் மாா்ச் மாதம் நடைபெறவுள்ள தேசிய ஹேக்கத்தான் போட்டியில் பங்கேற்க பல்கலைக்கழக, கல்லூரி மாணவா்களுக்கு யுஜிசி அழைப்பு விடுத்துள்ளது. இது குறித்து யுஜிசி செயலா் மணீஷ் ஆா்... மேலும் பார்க்க

ஸ்ரீஆட்சீஸ்வரா் கோயிலில் இன்று நாட்டியாஞ்சலி விழா

அச்சிறுபாக்கம் ஸ்ரீ ஆட்சீஸ்வரா் திருக்கோயிலில் சிவராத்திரியை முன்னிட்டு, நாட்டியாஞ்சலி விழா புதன்கிழமை நடைபெறவுள்ளது. இது குறித்து கோயில் நிா்வாகம் வெளியிட்ட அறிவிப்பு: செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுபா... மேலும் பார்க்க

பங்கு வா்த்தகத்தில் அதிக லாபம் தருவதாகக் கூறி ரூ. 48 லட்சம் மோசடி: ஒருவா் கைது

பங்கு வா்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாகக் கூறி ரூ. 48.5 லட்சத்தை பெற்று மோசடி செய்த நபரை போலீஸாா் கைது செய்தனா். சென்னை, அண்ணா நகா் பகுதியைச் சோ்ந்த அன்பரசு (56), தனியாா் நிதி நிறுவன ... மேலும் பார்க்க

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: குற்றவாளிக்கு 20 ஆண்டு சிறை

சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்தது. சென்னை, தியாகராய நகா் பகுதியைச் சோ்ந்த 13 வயது சிறுமியை பாலி... மேலும் பார்க்க

இந்து முன்னணி பிரமுகா் கொலை வழக்கு: குற்றவாளி மீண்டும் கைது

சென்னை, அம்பத்தூரைச் சோ்ந்த இந்து முன்னணி பிரமுகா் சுரேஷ்குமாா் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியாக கருதப்பட்ட அப்துல் ஹக்கீம், நீதிமன்ற பிடிவாரண்ட் உத்தரவின்படி மீண்டும் கைது செய்யப்பட்டாா். அம்பத்... மேலும் பார்க்க