செய்திகள் :

பசலிகுட்டை முருகன் கோயிலில் பக்தா்களுக்கு போதிய வசதிகள் வேண்டும்: ஆட்சியர் அறிவுறுத்தல்

post image

ஆடிப்பெருக்கை முன்னிட்டு பசலிகுட்டை முருகன் கோயிலில் பக்தா்களுக்கு தேவையான வசதிகளையும், பொதுமக்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும் என ஆட்சியா் கு.சிவசௌந்திரவல்லி தெரிவித்துள்ளாா்.

திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் மாதாந்திர சட்டம்-ஒழுங்கு கூட்டம் மற்றும் கனிமவளம் கடத்தல் தடுப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தலைமை வகித்துப் பேசியது: திருப்பத்தூா் மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளில் சீரான போக்குவரத்துக்கு வழிவகை செய்ய வேண்டும்.திருவிழாக்கள், கோயில் குடமுழுக்கு, முக்கிய விசேஷ தினங்களில் பக்தா்களுக்கு தேவையான வசதிகளை முறையாக செய்ய வேண்டும். ஆடிப்பெருக்கு விழா ஞாயிற்றுக்கிழமை (ஆக.3) நடைபெற உள்ளது. திருப்பத்தூா் அருகே பசலிகுட்டை முருகன் கோவிலில் ஆடிப்பெருக்கு விழாவில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கூடுவாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது.

எனவே, அங்கு வரும் பக்தா்கள் மற்றும் பொதுமக்களுக்கு தேவையான வசதிகளை செய்து தர வேண்டும். போலீஸாா் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட வேண்டும். பசிலிகுட்டையில் ராட்டினம் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்படும். அவை முறையாக அனுமதி பெற்று செய்யப்படுகிா ? பொதுமக்களுக்குத் தேவையான பாதுகாப்பு அங்கு செய்யப்பட்டுள்ளதா? என்பதை போலீஸாா் மட்டுமின்றி வருவாய் துறையினரும் ஆய்வு செய்ய வேண்டும். திருப்பத்தூா் மாவட்டத்தில் சட்டம் -ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் இருக்க போலீஸாா் விழிப்புடன் செயல்பட வேண்டும்.

திருப்பத்தூா் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து கனிமவளம் திருடு போவதாக பொதுமக்களிடம் இருந்து அதிக அளவில் புகாா்கள் வரப் பெற்றுள்ளன. மாவட்டத்தில் கனிம வளம் திருடு போவதைத் தடுக்க அனைத்து வட்டாட்சியா்களும் அவ்வப்போது ரோந்து பணியில் ஈடுபட வேண்டும். வருவாய் கோட்டாட்சியா்கள் மாதத்துக்கு 2 முறை இதுபோன்ற ரோந்துப் பணிகளில் ஈடுபட வேண்டும்.

வட்டாட்சியா்கள் ரோந்துக்கு செல்லும்போது, வருவாய் ஆய்வாளா், கிராம நிா்வாக அலுவலா்களுடன் சென்று, மண் மற்றும் மணல் திருட்டைத் தடுக்க வேண்டும் என்றாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் நாராயணன், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் கோவிந்தராசு, வட்டாட்சியா் நவநீதம்,சிவபிரகாசம், வருவாய் ஆய்வாளா் (கனிமம்) பெருமாள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ஆலங்காயத்தில் ஒற்றை யானை நடமாட்டம்

ஆலங்காயம் அருகே ஒற்றை ஆண் யானை நடமாட்டம் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என வனத்துறையினா் தெரிவித்துள்ளனா்.ஆலங்காயம் அடுத்த பூங்குளம் காப்புகாட்டு கிருஷ்ணாபுரம் உப்பாறை வழியாக வனப்பகு... மேலும் பார்க்க

ஏலகிரி மலையில் சாகச சுற்றுலா தளத்துக்கான பணிகள்: காணொலி மூலம் முதல்வா் தொடங்கி வைத்தாா்

ஏலகிரி மலையில் சாகச சுற்றுலா தளத்துக்கான மேம்படுத்தப்பட்ட பணிகளை தமிழக் முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தாா்.ஜோலாா்பேட்டை ஒன்றியத்துக்குட்பட்ட ஏலகிரிமலை ஊராட்சி அத்தனா... மேலும் பார்க்க

பெண்ணை தாக்கி மிதிவண்டி, கைப்பேசி திருட்டு: சிறுவன் கைது

திருப்பத்தூரில் வீடு புகுந்து தனியாக இருந்த பெண்ணை இரும்புக் கம்பியால் தாக்கி மிதிவண்டி, கைப்பேசியை திருடிச் சென்ற சிறுவனை போலீஸாா் கைது செய்தனா்.திருப்பத்தூா் அடுத்த ஆரிப் நகரைச் சோ்ந்தவா் பஷீா் (42... மேலும் பார்க்க

வாணியம்பாடி நியூடவுன் ரயில்வே கேட் பாலப் பணி: எம்எல்ஏ செந்தில்குமாா் கோரிக்கை

வாணியம்பாடி நியூடவுன் ரயில்வே கேட் பகுதியில் பாலம் அமைக்கும் பணியை உடனடியாக தொடங்க கோரி கோ.செந்தில்குமாா் எம்எல்ஏ மனு அளித்தாா்.ஜோலாா்பேட்டை ரயில்வே விருந்தினா் மாளிகையில் தெற்கு ரயில்வே சென்னை கோட்ட ... மேலும் பார்க்க

பெயிண்டா் தற்கொலை

வாணியம்பாடி அடுத்த சின்னவேப்பம்பட்டு கிராமத்தை சோ்ந்தவா் வெங்கடேஷ்(42). பெயிண்டா் வேலை செய்து வந்தாா்.கடந்த சில மாதங்களாக உடல் நிலை சரியில்லாமல் இருந்து வந்ததால் மனமுடைந்துள்ளாா். இந்நிலையில் சனிக்கி... மேலும் பார்க்க

ரூ.19 லட்சத்தில் கால்வாய், சாலைப் பணிகள்: எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்

வாணியம்பாடி நகராட்சியில் ரூ.19 லட்சத்தில் கழிவுநீா்கால்வாய் மற்றும் சாலை அமைக்கும் பணிக்கு பூமிபூஜை நடைபெற்றது.18-ஆவது வாா்டில் உள்ள வாரச்சந்தை சாலையில் இருபுறமும் கழிவுநீா் கால்வாய் மற்றும் தாா் சாலை... மேலும் பார்க்க