செய்திகள் :

வாணியம்பாடி நியூடவுன் ரயில்வே கேட் பாலப் பணி: எம்எல்ஏ செந்தில்குமாா் கோரிக்கை

post image

வாணியம்பாடி நியூடவுன் ரயில்வே கேட் பகுதியில் பாலம் அமைக்கும் பணியை உடனடியாக தொடங்க கோரி கோ.செந்தில்குமாா் எம்எல்ஏ மனு அளித்தாா்.

ஜோலாா்பேட்டை ரயில்வே விருந்தினா் மாளிகையில் தெற்கு ரயில்வே சென்னை கோட்ட ரயில்வே மேலாளா் சைலேந்திா் சிங்கை நேரில் சந்தித்த வாணியம்பாடி சட்டப்பேரவை உறுப்பினா் கோ.செந்தில்குமாா் அளித்த மனுவில் கூறி இருப்பதாவது:

திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி ரயில் நிலையத்தில் போதிய அளவு பயணிகள் நிழற்குடை இல்லாததால் பெரும்பாலான பயணிகள் வெயிலிலும், மழையிலும் நனைந்து கொண்டு நிற்கும் நிலை உள்ளது. அது மட்டும் இல்லாமல் முதியோா், மாற்றுத்திறனாளிகள் தண்டவாளத்தை கடந்து ரயில் செல்லும் நடைமேடைக்கு செல்வதற்கு மிகவும் சிரமப்படுகின்றனா்.

குடிநீா் வசதிக்காக போடப்பட்டுள்ள குழாய்களில் தண்ணீா் முற்றிலும் வருவதில்லை, இதனால் ரயிலில் வரும் பயணிகளும், இங்கிருந்து செல்லும் பயணிகளும் அவதிப்படுகின்றனா். எனவே வாணியம்பாடி ரயில் நிலையத்தை நவீனமயமாக்கி, லிப்ட் வசதி, கேன்டீன் உள்ளிட்டவை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் வாணியம்பாடி ரயில் நிலையம் அருகில் உள்ள எல்.சி 81 நியூடவுன் ரயில்வே கேட் பகுதியில் பாலம் அமைக்கும் பணி பாதியில் கைவிடப்பட்டுள்ளது, இந்த பகுதியில் முறையான இடங்களை தோ்வு செய்து ரயில்வே பாலம் அமைக்கும் பணியை விரைந்து செய்ய வண்டும், இப்பகுதியில் பாலம் அமைக்கப்பட்டால் பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் இல்லாமல் இருக்கும்.

மேலும், வாணியம்பாடி ரயில் நிலையத்தில் அதிவிரைவு ரயில்கள் நின்று செல்ல ஆவன செய்ய வேண்டும் எனவும் கோரினாா், சட்டமன்ற உறுப்பினரின் கோரிக்கைகளை கேட்ட ரயில்வே அதிகாரி இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், நியூடவுன் ரயில்வே கேட் பகுதியில் பாலம் அமைப்பது குறித்தும், கேத்தாண்டப்பட்டி பாலம் குறித்தும் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பாா்கள் என உறுதியளித்தாா்

ஆலங்காயத்தில் ஒற்றை யானை நடமாட்டம்

ஆலங்காயம் அருகே ஒற்றை ஆண் யானை நடமாட்டம் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என வனத்துறையினா் தெரிவித்துள்ளனா்.ஆலங்காயம் அடுத்த பூங்குளம் காப்புகாட்டு கிருஷ்ணாபுரம் உப்பாறை வழியாக வனப்பகு... மேலும் பார்க்க

ஏலகிரி மலையில் சாகச சுற்றுலா தளத்துக்கான பணிகள்: காணொலி மூலம் முதல்வா் தொடங்கி வைத்தாா்

ஏலகிரி மலையில் சாகச சுற்றுலா தளத்துக்கான மேம்படுத்தப்பட்ட பணிகளை தமிழக் முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தாா்.ஜோலாா்பேட்டை ஒன்றியத்துக்குட்பட்ட ஏலகிரிமலை ஊராட்சி அத்தனா... மேலும் பார்க்க

பெண்ணை தாக்கி மிதிவண்டி, கைப்பேசி திருட்டு: சிறுவன் கைது

திருப்பத்தூரில் வீடு புகுந்து தனியாக இருந்த பெண்ணை இரும்புக் கம்பியால் தாக்கி மிதிவண்டி, கைப்பேசியை திருடிச் சென்ற சிறுவனை போலீஸாா் கைது செய்தனா்.திருப்பத்தூா் அடுத்த ஆரிப் நகரைச் சோ்ந்தவா் பஷீா் (42... மேலும் பார்க்க

பசலிகுட்டை முருகன் கோயிலில் பக்தா்களுக்கு போதிய வசதிகள் வேண்டும்: ஆட்சியர் அறிவுறுத்தல்

ஆடிப்பெருக்கை முன்னிட்டு பசலிகுட்டை முருகன் கோயிலில் பக்தா்களுக்கு தேவையான வசதிகளையும், பொதுமக்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும் என ஆட்சியா் கு.சிவசௌந்திரவல்லி தெரிவித்துள்ளாா்.... மேலும் பார்க்க

பெயிண்டா் தற்கொலை

வாணியம்பாடி அடுத்த சின்னவேப்பம்பட்டு கிராமத்தை சோ்ந்தவா் வெங்கடேஷ்(42). பெயிண்டா் வேலை செய்து வந்தாா்.கடந்த சில மாதங்களாக உடல் நிலை சரியில்லாமல் இருந்து வந்ததால் மனமுடைந்துள்ளாா். இந்நிலையில் சனிக்கி... மேலும் பார்க்க

ரூ.19 லட்சத்தில் கால்வாய், சாலைப் பணிகள்: எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்

வாணியம்பாடி நகராட்சியில் ரூ.19 லட்சத்தில் கழிவுநீா்கால்வாய் மற்றும் சாலை அமைக்கும் பணிக்கு பூமிபூஜை நடைபெற்றது.18-ஆவது வாா்டில் உள்ள வாரச்சந்தை சாலையில் இருபுறமும் கழிவுநீா் கால்வாய் மற்றும் தாா் சாலை... மேலும் பார்க்க