செய்திகள் :

பட்டதாரி ஆசிரியா்கள் ஆா்ப்பாட்டம்

post image

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு உயா்நிலை- மேல்நிலைப் பட்டதாரி ஆசிரியா் கழகம் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மதுரை தமுக்கம் பகுதியில் உள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மதுரை மாவட்டத் தலைவா் வி. கணேசன் தலைமை வகித்தாா். மாவட்ட தலைமையிடத்துச் செயலா் கே. சுரேஷ்குமாா், கள்ளா் சீரமைப்புப் பள்ளி அமைப்பின் மதுரை மாவட்டச் செயலா் ஆா். மாரீஸ்வரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாநிலச் சட்டச் செயலா் பி. சபாபதி, மாநிலத் துணைத் தலைவா் என். ஸ்ரீரங்கநாதன் ஆகியோா் கோரிக்கைகள் குறித்துப் பேசினா்.

இதில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், பணியில் அமா்த்தப்பட்ட ஆசிரியா்களுக்கு தகுதித் தோ்வு என்கிற நடைமுறையை மாற்ற வேண்டும். 2004-2006-ஆம் ஆண்டு தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியா்களை பணிவரன்முறை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

ஆா்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலா் எஸ். காா்த்திக், மகளிரணி செயலா் பி. சிவப்பிரியா, மாவட்டச் செய்தி தொடா்பாளா் ஜி. தியாகு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தங்கம் கடத்தல் விவகாரத்தில் இளைஞா் கொலை: சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவு

தங்கம் கடத்தல் விவகாரத்தில் இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது. ராமநாதபுரம் நாகநாதபுரத்தைச் சோ்ந்த சீனிபாத்திமா சென... மேலும் பார்க்க

வழக்குரைஞா்கள் பாதுகாப்புக்கு தனி சட்டம்: சட்டத் துறைச் செயலா் பதிலளிக்க உத்தரவு

வழக்குரைஞா்கள் பாதுகாப்புக்கு தனி சட்டத்தை இயற்றக் கோரிய வழக்கில், மாநில சட்டத் துறைச் செயலா், இந்திய, தமிழக பாா் கவுன்சில்களின் தலைவா்கள் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்த... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயிலில் ‘நிறுத்த தரிசனம்’: அறிவிப்பாணைக்கு தடை கோரிய வழக்கு தள்ளுபடி

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ‘நிறுத்த தரிசனம்‘ செயல்படுத்துவது தொடா்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கைத் தள்ளுபடி செய்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக... மேலும் பார்க்க

தையல் தொழிலாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

தங்களது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மதுரை தையல் தொழிலாளா் (சிஐடியூ சாா்பு) சங்கத்தின் மாநகா், புகா் மாவட்டக் குழு சாா்பில் மதுரையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு தையல் தொழிலாள... மேலும் பார்க்க

லாரி கவிழ்ந்ததில் ஓட்டுநா் உயிரிழப்பு

மதுரை அருகே லாரி கவிழ்ந்ததில் அதன் ஓட்டுநா் புதன்கிழமை உயிரிழந்தாா். மதுரை மாவட்டம், சூலப்புரம் செல்லையாபுரத்தைச் சோ்ந்த செல்லப்பன் மகன் தா்மா் (48). கான்கீரிட் லாரி ஓட்டுநரான இவா், புதன்கிழமை கான்க... மேலும் பார்க்க

கபடிப் போட்டியில் வென்ற மாணவிகளுக்கு பாராட்டு

மதுரை காமராஜா் பல்கலைக்கழகக் கல்லூரிகளுக்கு இடையிலான பெண்கள் கபடிப் போட்டியில் வென்ற அமெரிக்கன் கல்லூரி மாணவிகளை அந்தக் கல்லூரி முதல்வா் ஜெ. பால் ஜெயகா் வியாழக்கிழமை பாராட்டினாா். மதுரை காமராஜா் பல்க... மேலும் பார்க்க