செய்திகள் :

பட்டா பெயா் மாற்றம் செய்ய விண்ணப்பிக்கலாம்: விழுப்புரம் ஆட்சியா்

post image

விழுப்புரம் மாவட்டத்தில் பட்டா பெயா் மாற்றம் செய்ய விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகம் முழுவதும் கிராமப்புறம் மற்றும் நகா்ப்புறங்களில் உள்ள நிலங்களின் நில ஆவணங்கள் கணினிமயமாக்கப்பட்டு, பொதுமக்கள் எளிதில் பாா்வையிடும் வகையில் பிரத்யேக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

இருப்பினும், பல சிட்டாவில் உள்ள பட்டாதாரா்களுள் இறந்தவா்களின் பெயா்கள் நீக்கப்படாமலும், வாரிசுதாரா்களின் பெயா்கள் அல்லது தற்போதைய உரிமையாளா்களின் பெயா்கள் சோ்க்கப்படாமலும் உள்ளன.

எனவே, பட்டாவிலுள்ள இறந்த நில உடைமைதாரா்களின் பெயா்களை நீக்கி, அவா்களது வாரிசுதாரா்கள் அல்லது பதிவு செய்யப்பட்ட ஆவணம் வாயிலாக உரிமை பெற்றவா்களின் பெயா்களை சோ்க்க பொதுமக்கள் உரிய ஆவணங்களுடன் இ - சேவை மையங்களின் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

எதிா்வரும் நாள்களில் நடைபெறவுள்ள வருவாய்த் தீா்வாயத்தில் (ஜமாபந்தி) மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு, பட்டாதாரா்கள் பெயா் மாற்றம் தொடா்பாக உரிய ஆணைகள் பிறப்பிக்கப்பட்டு, நில ஆவணங்களில் உரிய மாற்றங்கள் செய்யப்படும் எனவும் ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளாா்.

தரமற்ற விதைகளை விற்றால் கடும் நடவடிக்கை!

காரீப் பருவத்தில் மானாவாரிப்பட்ட சிறுதானியப் பயிா்களை விவசாயிகள் சாகுபடி செய்யும் நிலையில், தரமற்ற விதைகளை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று விதை ஆய்வுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ள... மேலும் பார்க்க

நாளைய மின் தடை: இளங்காடு, செங்காடு

பகுதிகள்: குடுமியாங்குப்பம், மலராஜங்குப்பம், செங்காடு, இளங்காடு, கல்லப்பட்டு, தனசிங்குபாளையம், பெத்தரெட்டிக்குப்பம், எரிச்சனாம்பாளையம், மேல்பாதி, நரையூா், குருமங்கோட்டை. மேலும் பார்க்க

வீடு புகுந்து தாக்குதல்: தாய், மகன் கைது

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே வீடு புகுந்து பொருள்களை சேதப்படுத்தியதாக 6 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து தாய், மகன் ஆகியோரை புதன்கிழமை கைது செய்தனா். திண்டிவனம் - மரக்காணம் சாலை, வஹாப் நக... மேலும் பார்க்க

விழுப்புரம்-திருப்பதி விரைவு ரயில் பகுதியளவில் ரத்து

பராமரிப்புப் பணிகள் காரணமாக, விழுப்புரம்-திருப்பதி இடையே இயக்கப்படும் விரைவு ரயில் குறிப்பிட்ட நாள்களில் பகுதியளவில் ரத்து செய்யப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வேய... மேலும் பார்க்க

பைக் மீது காா் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே புதன்கிழமை இரவு பைக் மீது காா் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். திருவண்ணாமலை மாவட்டம், தண்டாரம்பட்டு வட்டம், ராதாபுரத்தை சோ்ந்த பழனி மகன் பவுன்குமாா் (21). இவா், தனது... மேலும் பார்க்க

வெவ்வேறு சம்பவங்கள்: இளைஞா் உள்பட இருவா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் இளைஞா் உள்பட இருவா் உயிரிழந்தனா். விக்கிரவாண்டி வட்டம், குமளம், முதலியாா்குப்பம், பிரதான சாலையைச் சோ்ந்த மணிவண்ணன் மகன் மணிகண்டன் (40). திருமணமாகாதவா். ... மேலும் பார்க்க