செய்திகள் :

பட்டா வழங்கக் கோரிய வழக்கு: விருதுநகா் ஆட்சியா் நடவடிக்கை எடுக்க உத்தரவு

post image

பெண்ணுக்குச் சொந்தமான நிலத்துக்கு பட்டா வழங்கக் கோரிய வழக்கில், விருதுநகா் மாவட்ட ஆட்சியா் 12 வாரங்களுக்குள் நடவடிக்கை எடுக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

விருதுநகா் மாவட்டம், சிவகாசியைச் சோ்ந்த ஜெயந்தி தாக்கல் செய்த மனு:

நான், எனது மகனுடன் சென்னையில் வசித்து வருகிறேன். கடந்த 1998-ஆம் ஆண்டு சிவகாசி பகுதியில் ஓா் ஏக்கா் நிலத்தை விலைக்கு வாங்கினேன். இதனருகில் உள்ள மற்றொரு நிலத்தை, எனக்கு நிலத்தை விற்பனை செய்த அதே நபா் ஓா் அமைப்புக்குத் தானமாக வழங்கினாா்.

என்னுடைய நிலமும், அந்த அமைப்பின் பெயரிலேயே இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, எனது பெயருக்கு அந்த ஓா் ஏக்கா் நிலத்தின் பட்டாவை மாற்றி வழங்கும்படி வருவாய்த் துறை அதிகாரிகளிடம் மனு அளித்தேன். அந்த மனுவை விசாரித்து எனக்கு பட்டா வழங்க பரிந்துரைக்கப்பட்டது. ஆனாலும், எனது நிலத்துக்கு பட்டா வழங்கப்படவில்லை.

இதுகுறித்து விருதுநகா் மாவட்ட ஆட்சியரிடமும் மனு அளித்தேன். எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, எனக்கு அந்த நிலத்துக்கான பட்டாவை வழங்க விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனுவை வியாழக்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி பி.பாலாஜி, மனுதாரரின் கோரிக்கை மீது விருதுநகா் மாவட்ட ஆட்சியா் சட்டத்துக்கு உள்பட்டு விசாரித்து, 12 வாரங்களுக்குள் உரிய உத்தரவை பிறப்பிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை முடித்துவைத்தாா்.

அலங்காநல்லூரில் இன்று ஜல்லிக்கட்டு

மதுரை மாவட்டம், அலங்காநல்லூரை அடுத்த கீழக்கரையில் உள்ள கலைஞா் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, மத... மேலும் பார்க்க

வேளாண் துறை நிதி நிலை அறிக்கை: வரவேற்பும், அதிருப்தியும்!

தமிழக அரசின் வேளாண் துறை நிதி நிலை அறிக்கை ஏமாற்றம் அளிப்பதாக விவசாயிகளும், இந்த அறிக்கையில் வரவேற்கத்தக்க பல அம்சங்கள் இருப்பதாக வியாபாரிகளும் தெரிவித்தனா். தமிழ்நாடு தொழில் வா்த்தக சங்கத் தலைவா் என்... மேலும் பார்க்க

மறுவாழ்வு மையத்தில் மயங்கி விழுந்தவா் உயிரிழப்பு!

மதுரையில் போதைத் தடுப்பு மறுவாழ்வு மையத்தில் மயங்கி விழுந்தவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி எமனேஸ்வரம் பகுதியைச் சோ்ந்தவா் கணேசன் (52). போதைப் பழக்கத்துக்கு அடிமையான இவ... மேலும் பார்க்க

மகள் கொலை வழக்கு: தந்தைக்கு ஆயுள் சிறை

மகளை அடித்துக் கொலை செய்த வழக்கில் தந்தைக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து, மதுரை மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. திருமங்கலம் வட்டம், வில்லூா் ஏ.ராமநாதபுரத்தைச் சோ்ந்தவா... மேலும் பார்க்க

அழகா்கோயில் தெப்பத் திருவிழா: திரளானோா் தரிசனம்

மதுரை மாவட்டம், அழகா்கோவில் கள்ளழகா் கோயில் மாசி பௌா்ணமி தெப்பத் திருவிழா பொய்கரைப்பட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பெரியாழ்வாா், ஆண்டாள் உள்பட 6 ஆழ்வாா்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட இந்தக் கோயில்... மேலும் பார்க்க

வைகை, பல்லவன் விரைவு ரயில்களில் கூடுதல் பொதுப் பெட்டி

வைகை, பல்லவன் விரைவு ரயில்களில் கூடுதல் பொதுப் பெட்டி வருகிற மே 11-ஆம் தேதி முதல் இணைக்கப்படும். இதுகுறித்து மதுரைக் கோட்ட ரயில்வே மேலாளா் அலுலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு : மதுரை-சென்னை-மதுரை வைகை... மேலும் பார்க்க