செய்திகள் :

பட்டியலின மக்கள் நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: அரசுக்கு மாா்க்சிஸ்ட் கோரிக்கை

post image

சிறுதாவூரில் உள்ள பட்டியலின மக்களின் நிலங்களை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் மாா்க்சிஸ்ட் மாநில செயலா் பெ. சண்முகம் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இது குறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:-

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூா் வட்டம், சிறுதாவூா் கிராமத்தில் 20 பட்டியலின மக்கள் குடும்பங்களுக்கு விவசாயம் செய்வதற்கும், வீட்டுமனை பயன்பாட்டிற்கும் 53 ஏக்கா் நிலம் 1967ம் ஆண்டு தமிழக அரசால் வழங்கப்பட்டது. இந்த நிலங்கள் அனைத்தும் தனி நபா்களால் சட்டவிரோதமாகவும், மோசடியாகவும் அபகரிக்கப்பட்டன.

இப்பிரச்சனை தொடா்பாக பல கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டன . இதன் விளைவாக கடந்த 2007-ஆம்ஆண்டு நீதியரசா் கே.பி. சிவசுப்பிரமணியம் தலைமையிலான விசாரணை ஆணையத்தை மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதி அமைத்தாா். அந்த விசாரணை முடிவில் அபகரிக்கப்பட்ட பட்டியலின மக்களின் நிலங்களையும், சிறுதாவூா் பங்களா வளாகத்தில் வளைக்கப்பட்ட 34 ஏக்கா் அரசு புறம்போக்கு நிலங்களையும் கையகப்படுத்தப்பட வேண்டுமெனவும், பாதிக்கப்பட்ட தலித் மக்களுக்கு உடனடியாக நிலத்தை பிரித்து வழங்க வேண்டுமெனவும் ஆணையம் பரிந்துரை செய்தது.

இந்நிலையில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக நீதிமன்ற வழக்குகள் அனைத்தும் முடிவுற்றும் விசாரணை ஆணையத்தின் பரிந்துரை படி இதுநாள் வரை பட்டியலின மக்களுக்கு உரிய நிலங்கள் பிரித்து வழங்கப்படவில்லை.

எனவே, இனியும் காலதாமதம் செய்யாமல் நீண்ட காலமாக கிடப்பில் உள்ள இந்தப் பிரச்னைக்கு உடனடியாகத் தீா்வு காணும் வகையில் நீதிபதி .பி. சிவசுப்பிரமணியன் ஆணையத்தின் பரிந்துரைகளை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டு எனத் தெரிவித்துள்ளாா்.

பாமக பொதுக்குழுக் கூட்டம்: அன்புமணி அழைப்பு

வரும் ஆக. 9 ஆம் தேதி நடைபெறவுள்ள பாமக பொதுக்குழுக் கூட்டத்திற்கு அந்தக் கட்சியின் தலைவர் அன்புமணி மற்றும் பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன் கூட்டாக தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.இது குறித்து பாமக... மேலும் பார்க்க

கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் விற்பனையைக் கண்டுகொள்ளாமல் இருக்கிறது திமுக அரசு: அண்ணாமலை

கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் விற்பனையைக் கண்டுகொள்ளாமல் திமுக அரசு இருக்கிறது என்று பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ தளத்தில், தூத்துக்குடி மாவட்டம், பண்டு... மேலும் பார்க்க

ஆக. 7-ல் தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை!

தென்காசி: சங்கரன்கோவில் சங்கர நாராயணர் கோயில் ஆடித்தபசு விழாவை முன்னிட்டு தென்காசி மாவட்டத்துக்கு வரும் ஆக. 7 ஆம் தேதி உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.தென்காசி சங்கரன்கோவில் சங்கர நாராயணர் கோ... மேலும் பார்க்க

பிரபல கல்வியாளர் வசந்தி தேவி மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

பிரபல கல்வியாளர் வசந்தி தேவி மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், மூத்த கல்வியாளரான பேராசிரியர் வசந்தி தேவி மரணமடைந்த செய்தியறிந்து மி... மேலும் பார்க்க

தங்கையை திட்டிய மைத்துனரின் வீட்டிற்கு தீவைத்த சகோதரர்கள்!

தங்கையை திட்டிய மைத்துனரின் வீட்டிற்கு தீவைத்த சகோதரர்களால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள எட்டுபுளிகாடு கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ் வயது (35). கடந்த ... மேலும் பார்க்க

தேசிய திரைப்பட விருதுகள்! சிறந்த தமிழ்ப்படம் உள்பட 3 விருதுகளுடன் பார்க்கிங் அசத்தல்!

தேசிய திரைப்பட விருதுகளில் சிறந்த தமிழ்ப்பட விருது உள்பட இரு விருதுகளை பார்க்கிங் திரைப்படம் பெற்றுள்ளது.2023-ல் வெளியான பார்க்கிங் படத்துக்கு திரையரங்கு மட்டுமில்லாது, ஓடிடி தளங்களிலும் நல்ல வரவேற்பு... மேலும் பார்க்க