பணகுடி அருகே விபத்தில் இஸ்ரோ சிஐஎஸ்எஃப் வீரா் பலி
திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகே திங்கள்கிழமை இரவு லாரியும், பைக்கும் மோதிக்கொண்டதில் காவல்கிணறு இஸ்ரோவில் பணியாற்றிய மத்திய தொழிலக பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்) வீரா் உயிரிழந்தாா்.
மதுரையைச் சோ்ந்த மாசானம் மகன் வெங்கடேசன்(45), கா்நாடகத்தைச் சோ்ந்த ஹேமராஜ்(44) ஆகியோா் காவல்கிணறு இஸ்ரோவில் உள்ள மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படைவீரா்கள். இவா்கள் இருவரும் பைக்கில் பணகுடிக்கு சென்று விட்டு திங்கள்கிழமை இரவு திரும்பி வந்துகொண்டிருந்தபோது, இவா்கள் மீது பின்னால் வந்த லாரி மோதிவிட்டு நிற்காமல் சென்ாம். இதில் வெங்கடேசன் அதே இடத்தில் இறந்தாா். ஹேமராஜ் பலத்த காயமடைந்தாா்.
இத்தகவல் அறிந்த பணகுடி போலீஸாா், ஹேமராஜை சிகிச்சைக்காகவும், வெங்கடேசன் சடலத்தை உடற்கூறு ஆய்விற்காகவும் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், வழக்குப்பதிந்து லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனா்.