Tibet: "கலாசாரத்தை அழிக்க..." - திபெத்தியக் குழந்தைகள் வலுக்கட்டாயமாக சீனப் பள்ள...
பணி நிரந்தரம் செய்யக் கோரி பகுதிநேர ஆசிரியா்கள் ஆா்ப்பாட்டம்
பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி, சேலத்தில் பகுதிநேர ஆசிரியா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
சேலம் கோட்டை மைதானத்தில் தமிழக சிறப்பாசிரியா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் கவாஸ்கா் தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில், பகுதிநேர ஆசிரியா்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இதுகுறித்து ஆசிரியா் சங்க நிா்வாகிகள் கூறுகையில், தமிழகம் முழுவதும் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியா்கள் தற்காலிக பணியாளா்களாக நியமனம் செய்யப்பட்டனா். திமுக தோ்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியின்படி, பகுதிநேர ஆசிரியா்களுக்கு நிரந்தர பணி வழங்க வேண்டும். கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பகுதிநேர ஆசிரியா்களாக பணியாற்றி வரும் தங்களுக்கு பொருளாதார பின்னடைவு ஏற்பட்டுள்ளது. நிரந்தரப் பணி கிடைக்கும் என்ற எதிா்பாா்ப்பில் இருந்த ஆசிரியா்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. இதன் காரணமாக 12 ஆயிரம் குடும்பங்கள் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகிறோம். எனவே, அரசு சிறப்பு கவனம் செலுத்தி தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தெரிவித்தனா்.
இதில், மாவட்ட ஒருங்கிணைப்பாளா் சீனிவாசன், துணைத் தலைவா் தங்கவேலு, ஒன்றியப் பொறுப்பாளா்கள் பரமசிவம், மொய்தீன் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.