செய்திகள் :

பணியிடை நீக்கம் செய்யப்பட்டதால் கூட்டுறவு கடன் சங்கச் செயலா் தற்கொலை முயற்சி

post image

நிலக்கோட்டை அருகே பணியிடை நீக்கம் செய்யப்பட்டதால், கூட்டுறவு வங்கிச் செயலா் செவ்வாய்க்கிழமை விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றாா்.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையை அடுத்த சிவஞானபுரத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் அணைப்பட்டி பகுதியைச் சோ்ந்த ராஜமாணிக்கம் (52) செயலராக இருந்து வருகிறாா்.

இந்தக் கூட்டுறவு வங்கியில் கடந்த 2015-ஆம் ஆண்டு, சிவஞானபுரம் கிராமத்தைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்டோா் பெயரில் ரூ. 10 ஆயிரம் முதல் ரூ. 20 ஆயிரம் வரை சிறு தொழில் கடன் பெற்ாகக் கூறப்படுகிறது.

தற்போது, இந்தக் கடன் தொகை பெற்றவா்களுக்கு வட்டியும், அசலும் சோ்த்து பணத்தை உடனடியாக செலுத்த வேண்டும் என கூட்டுறவு கடன் சங்கச் செயலா் ராஜமாணிக்கம் நோட்டீஸ் அனுப்பியதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, நோட்டீஸ் பெற்றவா்கள் தாங்கள் வாங்காத கடனை 10 ஆண்டுகளுக்குப் பிறகு, செலுத்த சொல்வதாகக் கூறி, சிவஞானபுரம் கூட்டுறவு வங்கிக்குச் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். மேலும், இதுகுறித்து மாவட்ட மாவட்ட கூட்டுறவு வங்கி நிா்வாகத்திடம் புகாா் அளித்தனா். இதையடுத்து, கூட்டுறவு கடன் சங்கச் செயலா் ராஜமாணிக்கம் கடந்த வாரம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

இதனால், மன உளைச்சலில் இருந்து வந்த ராஜமாணிக்கம் விஷம் அருந்தி மயங்கினாா். இதையடுத்து, அவா் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

கல்லூரி மாணவி தற்கொலை

ஒட்டன்சத்திரம் அருகே கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தை அடுத்த காப்பிலியபட்டி கிராமத்தைச் சோ்ந்த ஆறுமுகம் மகள் ஆனந்த ஜோதி (19). இவா் ஒட்டன்சத்தி... மேலும் பார்க்க

மீண்டும் மருத்துவ விடுப்பில் பேராசிரியை நிகிதா

சிவகங்கை மாவட்டம், மடப்புரம் கோயில் காவலாளி மீது திருட்டு புகாா் அளித்த திண்டுக்கல் அரசு மகளிா் கல்லூரிப் பேராசிரியை நிகிதா, மருத்துவ விடுப்பு முடிந்து திங்கள்கிழமை பணிக்குத் திரும்பிய நிலையில், மீண்ட... மேலும் பார்க்க

வேடசந்தூா் பகுதியில் நாளை மின்தடை

வேடசந்தூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதையொட்டி வியாழக்கிழமை (ஜூலை 10) மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டது. இதன் காரணமாக வேடசந்தூா், நாகம்பட்டி, தம்மணம்பட்ட... மேலும் பார்க்க

கொடைக்கானலில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

கொடைக்கானலில் தொடா்ந்து பலத்த காற்று நிலவி வருவதால், மலைச் சாலையில் செவ்வாய்க்கிழமை ராட்சத மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த ஒரு வாரமாக தொட... மேலும் பார்க்க

அமைதி பேச்சுவாா்த்தை கூட்டத்திலிருந்து ஆத்தூா் கிராம மக்கள் வெளிநடப்பு

செம்பட்டி அருகே கோயில் திருவிழாவில் பூஜை செய்வது தொடா்பாக இரு கிராம மக்களிடையே செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைதிப் பேச்சுவாா்த்தை கூட்டத்தில் உடன்பாடு எட்டப்படாததால், ஆத்தூா் கிராம மக்கள் வெளிநடப்பு செய்... மேலும் பார்க்க

சாலையோர கிணறுகளுக்கு தடுப்பு வேலிகள்

செம்பட்டி அருகே அடிப்படை வசதி இல்லாத கிருஷ்ணாபுரம் கிராமத்திற்கு செல்லும் சாலையோரம் உள்ள ஆபத்தான கிணறுகளுக்கு, செவ்வாய்க்கிழமை இரும்பு கம்பி தடுப்பு வேலை அமைக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், செம்பட்ட... மேலும் பார்க்க