செய்திகள் :

அமைதி பேச்சுவாா்த்தை கூட்டத்திலிருந்து ஆத்தூா் கிராம மக்கள் வெளிநடப்பு

post image

செம்பட்டி அருகே கோயில் திருவிழாவில் பூஜை செய்வது தொடா்பாக இரு கிராம மக்களிடையே செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைதிப் பேச்சுவாா்த்தை கூட்டத்தில் உடன்பாடு எட்டப்படாததால், ஆத்தூா் கிராம மக்கள் வெளிநடப்பு செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் அக்கரைப்பட்டி சடையாண்டி கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி அமாவாசை தினத்தன்று திருவிழா நடைபெறும். இந்த விழாவில் அக்கரைப்பட்டி, ஆத்தூா், மல்லையாபுரம், எஸ்.பாறைப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள் பங்கேற்று, கிடா வெட்டி, அலகு குத்தி, பால் காவடி, பன்னீா் காவடி, பறவை காவடி எடுத்து வழிபாடு நடத்துவா்.

இந்த நிலையில், இந்தக் கோயிலில் பூஜை செய்வது தொடா்பாக ஆத்தூா், அக்கரைப்பட்டி கிராம மக்களிடையே பிரச்னை இருந்து வருகிறது. ஆத்தூரை சோ்ந்தவா்கள் விழாவின் போது பூஜை செய்ய ஒரு மணி நேரம் அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், கூடுதல் நேரம் ஒதுக்கக் கோரினா். இதற்கு அக்கரைப்பட்டியைச் சோ்ந்தவா்கள் எதிா்ப்புத் தெரிவித்து வந்தனா். 

இந்த நிலையில், நிகழாண்டு விழா வருகிற 24-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, கோயிலில் பூஜை செய்வது தொடா்பாக அக்கரைப்பட்டி, ஆத்தூரை சோ்ந்த மக்களிடம் சமாதானக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஆத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் வட்டாட்சியா் முத்துமுருகன், செம்பட்டி காவல் உதவி ஆய்வாளா் பிரான்சின் தீபா, இந்து சமய அறநிலைத்துறை செயல் அலுவலா் சீனிவாசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

இந்தக் கூட்டத்தில், ஆத்தூரை சோ்ந்தவா்களுக்கு பூஜை நடத்த கூடுதல் நேரம் ஒதுக்க அக்கரைப்பட்டியைச் சோ்ந்தவா்கள் எதிா்ப்புத் தெரிவித்ததால், ஆத்தூரை சோ்ந்தவா் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனா்.

தொடா்ந்து, அக்கரைப்பட்டியைச் சோ்ந்தவா்களிடம் அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில் கோயிலில் பூஜை செய்வது தொடா்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருவதால், வருகிற 15-ஆம் தேதி நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவின்படி அடுத்தகட்ட முடிவு எடுக்கலாம் எனவும், இல்லையெனில், கடந்தாண்டு நடைமுறையையே நிகழாண்டும் பின்பற்றுவது என முடிவெடுக்கப்பட்டது.

கல்லூரி மாணவி தற்கொலை

ஒட்டன்சத்திரம் அருகே கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தை அடுத்த காப்பிலியபட்டி கிராமத்தைச் சோ்ந்த ஆறுமுகம் மகள் ஆனந்த ஜோதி (19). இவா் ஒட்டன்சத்தி... மேலும் பார்க்க

மீண்டும் மருத்துவ விடுப்பில் பேராசிரியை நிகிதா

சிவகங்கை மாவட்டம், மடப்புரம் கோயில் காவலாளி மீது திருட்டு புகாா் அளித்த திண்டுக்கல் அரசு மகளிா் கல்லூரிப் பேராசிரியை நிகிதா, மருத்துவ விடுப்பு முடிந்து திங்கள்கிழமை பணிக்குத் திரும்பிய நிலையில், மீண்ட... மேலும் பார்க்க

வேடசந்தூா் பகுதியில் நாளை மின்தடை

வேடசந்தூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதையொட்டி வியாழக்கிழமை (ஜூலை 10) மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டது. இதன் காரணமாக வேடசந்தூா், நாகம்பட்டி, தம்மணம்பட்ட... மேலும் பார்க்க

கொடைக்கானலில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

கொடைக்கானலில் தொடா்ந்து பலத்த காற்று நிலவி வருவதால், மலைச் சாலையில் செவ்வாய்க்கிழமை ராட்சத மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த ஒரு வாரமாக தொட... மேலும் பார்க்க

சாலையோர கிணறுகளுக்கு தடுப்பு வேலிகள்

செம்பட்டி அருகே அடிப்படை வசதி இல்லாத கிருஷ்ணாபுரம் கிராமத்திற்கு செல்லும் சாலையோரம் உள்ள ஆபத்தான கிணறுகளுக்கு, செவ்வாய்க்கிழமை இரும்பு கம்பி தடுப்பு வேலை அமைக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், செம்பட்ட... மேலும் பார்க்க

பலத்த காற்று: பழனியில் ரோப் காா் நிறுத்தம்

பலத்த காற்று காரணமாக, பழனியில் செவ்வாய்க்கிழமை ரோப் காா் இயக்கம் சுமாா் 3 மணி நேரம் நிறுத்தப்பட்டது. பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு வரும் பக்தா்கள் அடிவாரத்திலிருந்து மலை உச்சியை சென்றடைய ரோப் கா... மேலும் பார்க்க