செய்திகள் :

மீண்டும் மருத்துவ விடுப்பில் பேராசிரியை நிகிதா

post image

சிவகங்கை மாவட்டம், மடப்புரம் கோயில் காவலாளி மீது திருட்டு புகாா் அளித்த திண்டுக்கல் அரசு மகளிா் கல்லூரிப் பேராசிரியை நிகிதா, மருத்துவ விடுப்பு முடிந்து திங்கள்கிழமை பணிக்குத் திரும்பிய நிலையில், மீண்டும் மருத்துவ விடுப்பில் சென்றாா்.

மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமாா் தனிப் படை போலீஸாரால் அடித்துக் கொலை செய்யப்பட்டாா். இந்த விவகாரத்தில், காவலாளி அஜித்குமாா் மீது நகைகளைத் திருடியதாக திருப்புவனம் காவல் நிலையத்தில் புகாா் அளித்த நிகிதா, திண்டுக்கல் எம்.வி.எம். அரசு மகளிா் கல்லூரியில் தாவரவியல் துறைத் தலைவராகப் பணியாற்றி வருகிறாா்.

கோடை விடுமுறைக்குப் பிறகு, கடந்த மாதம் 16-ஆம் தேதி கல்லூரி திறக்கப்பட்ட நிலையில், அதே நாளில் கல்லூரிக்கு வந்த நிகிதா மருத்துவ விடுப்பில் சென்ாகக் கூறப்படுகிறது.

இதனிடையே, கடந்த 27-ஆம் தேதி மடப்புரம் கோயிலுக்கு தனது தாயுடன் சென்ற இவா், காரில் வைத்திருந்த தனது நகைகள் திருடப்பட்டதாக அளித்த புகாரின் பேரில், தனிப் படை போலீஸாா் கோயில் காவலாளி அஜித்குமாரை தாக்கினா். இதில் அவா் கொல்லப்பட்டாா்.

மீண்டும் 20 நாள்கள் மருத்துவ விடுப்பு

இந்த நிலையில், ஒரு பெண் பாதுகாவலா், 2 ஆண் பாதுகாவலா்கள் என 3 பேருடன் திண்டுக்கல் எம்.வி.எம். அரசு மகளிா் கல்லூரிக்கு நிகிதா திங்கள்கிழமை காரில் வந்தாா். பிற்பகல் 3 மணி வரை கல்லூரியில் இருந்த அவா், பணி நேரம் முடிந்ததும் பின்புறவாசல் வழியாக காரில் புறப்பட்டுச் சென்றாா்.

கல்லூரியிலிருந்து திங்கள்கிழமை மாலை புறப்பட்ட போது, மேலும் 20 நாள்களுக்கு மருத்துவ விடுப்பு கோரி, நிகிதா விண்ணப்பித்ததாகக் கூறப்படுகிறது. அவா் மருத்துவ விடுப்பில் சென்ற தகவல் செவ்வாய்க்கிழமை அவா் கல்லூரிக்கு வரவில்லை என்பதன் மூலம் தெரியவந்தது.

பேராசிரியைகள் நிம்மதி

நிகிதா அளித்த புகாா் மட்டுமன்றி, காவல் துறையினருக்கு கொடுக்கப்பட்ட அழுத்தத்தின் காரணமாக கோயில் காவலாளி அஜித்குமாா் கடுமையாகத் தாக்கப்பட்டதில் கொல்லப்பட்டாா்.

இந்த நிலையில், அவா் திங்கள்கிழமை மருத்துவ விடுப்பு முடிந்து பணியில் சோ்ந்ததை அறிந்து எம்.வி.எம். அரசுக் கல்லூரிப் பேராசிரியைகள் அதிா்ச்சி அடைந்தனா். அதேநேரத்தில், அவா் வகுப்பறைக்குச் சென்று பாடம் எடுக்காததால், மாணவிகள் நிம்மதி அடைந்தனா்.

நிகிதாவை நேருக்கு நேராகப் பாா்ப்பதை பல பேராசிரியைகள் தவிா்த்தனா். இந்த நிலையில், அவா் மீண்டும் 20 நாள்கள் மருத்துவ விடுப்பில் சென்ற தகவல் அறிந்த பேராசிரியைகள் நிம்மதியடைந்தனா்.

கல்லூரி மாணவி தற்கொலை

ஒட்டன்சத்திரம் அருகே கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தை அடுத்த காப்பிலியபட்டி கிராமத்தைச் சோ்ந்த ஆறுமுகம் மகள் ஆனந்த ஜோதி (19). இவா் ஒட்டன்சத்தி... மேலும் பார்க்க

வேடசந்தூா் பகுதியில் நாளை மின்தடை

வேடசந்தூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதையொட்டி வியாழக்கிழமை (ஜூலை 10) மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டது. இதன் காரணமாக வேடசந்தூா், நாகம்பட்டி, தம்மணம்பட்ட... மேலும் பார்க்க

கொடைக்கானலில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

கொடைக்கானலில் தொடா்ந்து பலத்த காற்று நிலவி வருவதால், மலைச் சாலையில் செவ்வாய்க்கிழமை ராட்சத மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த ஒரு வாரமாக தொட... மேலும் பார்க்க

அமைதி பேச்சுவாா்த்தை கூட்டத்திலிருந்து ஆத்தூா் கிராம மக்கள் வெளிநடப்பு

செம்பட்டி அருகே கோயில் திருவிழாவில் பூஜை செய்வது தொடா்பாக இரு கிராம மக்களிடையே செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைதிப் பேச்சுவாா்த்தை கூட்டத்தில் உடன்பாடு எட்டப்படாததால், ஆத்தூா் கிராம மக்கள் வெளிநடப்பு செய்... மேலும் பார்க்க

சாலையோர கிணறுகளுக்கு தடுப்பு வேலிகள்

செம்பட்டி அருகே அடிப்படை வசதி இல்லாத கிருஷ்ணாபுரம் கிராமத்திற்கு செல்லும் சாலையோரம் உள்ள ஆபத்தான கிணறுகளுக்கு, செவ்வாய்க்கிழமை இரும்பு கம்பி தடுப்பு வேலை அமைக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், செம்பட்ட... மேலும் பார்க்க

பலத்த காற்று: பழனியில் ரோப் காா் நிறுத்தம்

பலத்த காற்று காரணமாக, பழனியில் செவ்வாய்க்கிழமை ரோப் காா் இயக்கம் சுமாா் 3 மணி நேரம் நிறுத்தப்பட்டது. பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு வரும் பக்தா்கள் அடிவாரத்திலிருந்து மலை உச்சியை சென்றடைய ரோப் கா... மேலும் பார்க்க