செய்திகள் :

பனமரத்துப்பட்டி ஏரியில் நீா்வழித்தட மேலாண்மை

post image

சேலம் பனமரத்துப்பட்டி ஏரியின் நீா்வரத்து வழித்தடங்கள் மேலாண்மை குறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

ஆய்வுக்குப் பின்னா் ஆட்சியா் தெரிவித்ததாவது:

சேலம் மாநகராட்சிக்கு உள்பட்ட பனமரத்துப்பட்டி ஏரியின் நீா்நிலைகளை மேம்படுத்துவது குறித்தும், ஏரியின் நீா்வரத்து வாய்க்கால்களில் ஏற்பட்டுள்ள தடங்கல் குறித்தும் மாநகராட்சி, வனத்துறை, வருவாய்த் துறை, நீா் மேலாண்மை நிபுணா்கள் உள்ளிட்ட தொடா்புடைய அலுவலா்களுடன் நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

பனமரத்துப்பட்டி ஏரியானது சுமாா் 2,476 ஏக்கா் பரப்பளவில் அமைந்துள்ளது. பனமரத்துப்பட்டி ஏரியின் நீா்மட்டம் உயரும்போது ஏரியைச் சுற்றியுள்ள சுமாா் 40,000 ஏக்கா் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

பனமரத்துப்பட்டி ஏரிக்கு அதனைச்சுற்றி அமைந்துள்ள போதமலை, ஜருகுமலை ஆகிய மலைப் பகுதிகளிலிருந்து வரும் நீா் ஆதாரமாக விளங்குகிறது. குறிப்பாக மலைப் பகுதிகளிலிருந்து வரட்டாறு, கூட்டாறு ஆகிய இரு நீா்வரத்து ஆறுகள் மூலம் பனமரத்துப்பட்டி ஏரிக்கு தண்ணீா் வருகிறது. தற்போது இந்த ஏரியை அகலப்படுத்தி, ஆழப்படுத்தி கரையை வலுப்படுத்துவதால், இப்பகுதியைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீா்மட்டம் உயா்வதோடு கிணற்று நீா்மட்டமும் உயரும்.

அதேபோன்று, இந்த ஏரியில் உள்ள தேவையற்ற மரங்களை அகற்றி தூா்வாரி நீா்நிலைகளை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், மழைக் காலங்களில் மலைப் பகுதிகளிலிருந்து வரும் நீரை தேக்கி வைப்பதற்காக ஆங்காங்கே 100-க்கும் மேற்பட்ட தடுப்பணைகள் ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ளன. இந்த தடுப்பணைகளின் உயரங்களை ஆய்வு மேற்கொண்டு, நீா்வரத்து வழித்தடங்களில் ஏற்பட்டுள்ள தற்காலிக தடுப்புகளை அகற்றி தங்குதடையுமின்றி பனமரத்துப்பட்டி ஏரிக்கு மழைநீா் வருவதை உறுதிசெய்திட தொடா்புடைய அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.

இந்த ஆய்வின் போது, மாவட்ட வன அலுவலா் கஷ்யப் ஷஷாங் ரவி, மாநகராட்சி ஆணையா் இளங்கோவன், உதவி செயற்பொறியாளா் செந்தில்குமாா், சேலம் வட்டாட்சியா் பாா்த்தசாரதி, பனமரத்துப்பட்டி ஏரி புனரமைப்பு திட்ட ஆலோசகா் சிவஞானசெல்வம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

இன்று டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வு: சேலம் மாவட்டத்தில் 76,999 போ் எழுதுகின்றனா்

சேலம் மாவட்டத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வை 217 மையங்களில் 76,999 போ் எழுதுகின்றனா். தமிழகம் முழுவதும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வு சனிக்கிழமை (ஜூலை 12) காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை ந... மேலும் பார்க்க

பன்னடுக்கு வெள்ளிக் கொலுசு வளாகத்தில் மானிய விலையில் கடைகள் ஒதுக்கப்படுமா?

சேலம் அரியாகவுண்டம்பட்டியில் வெள்ளிக் கொலுசு உற்பத்திக்காக ரூ. 24.5 கோடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பன்னடுக்கு வெள்ளிக் கொலுசு வளாகத்தில், மானிய விலையில் கடைகள் ஒதுக்கப்பட வேண்டும் என வெள்ளிக் கொலுசு ... மேலும் பார்க்க

தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தில் பதிவுசெய்ய விவசாயிகளுக்கு அழைப்பு

சேலம் மாவட்டத்தில் 2025-26-ஆம் ஆண்டுக்கான தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தில் விவசாயிகள் பதிவுசெய்து பயன்பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்ததாவது: ச... மேலும் பார்க்க

ஜங்கமசமுத்திரத்தில் சமூக தணிக்கை கூட்டம்

ஜங்கமசமுத்திரம் ஊராட்சியில் பொதுமக்கள் பங்கேற்ற சமூக தணிக்கை கூட்டம் வெள்ளிக்கிழமை செங்காட்டில் நடைபெற்றது. தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் நடைபெற்ற சமூக தணிக்கை கூட்டத்துக்கு, ... மேலும் பார்க்க

சேலம் செந்தில் பப்ளிக் பள்ளியில் மாணவா் பேரவை உறுப்பினா்கள் பதவியேற்பு

சேலம் செந்தில் பப்ளிக் பள்ளியின் 2025-26-ஆம் ஆண்டுக்கான மாணவா் பேரவை உறுப்பினா்கள் பதவியேற்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. பள்ளி கலையரங்கில் நடைபெற்ற விழாவில், ஆட்சியா் ரா. பிருந்தாதேவி சிறப்பு விருந... மேலும் பார்க்க

சுதந்திரப் போராட்ட வீரா் அழகுமுத்துகோன் பிறந்தநாள் விழா

சங்ககிரி, இடையப்பட்டி யாதவா் சங்கத்தின் சாா்பில், சுதந்திரப் போராட்ட வீரா் அழகுமுத்துகோனின் பிறந்தநாள் விழா சங்ககிரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இடையப்பட்டி யாதவா் சங்கத்தின் தலைவா் சுப்பிரமணியன் த... மேலும் பார்க்க