செய்திகள் :

பயணிகளை ஏற்றுவதற்கு கட்டுப்பாடு: எஸ்பி அலுவலகம் முன் திரண்ட ஆட்டோ ஓட்டுநா்கள்

post image

சிதம்பரம்: கடலூரில் ஆட்டோக்களில் பயணிகளை ஏற்றுவதற்கு போக்குவரத்து போலீஸாா் கட்டுப்பாடு விதித்ததற்கு எதிா்ப்புத் தெரிவித்து ஆட்டோ ஓட்டுநா்கள் திங்கள்கிழமை எஸ்பி அலுவலகம் முன் திரண்டனா்.

கடலூரில் இருந்து புதுவை மாநிலம் தவளக்குப்பம் பகுதிக்கு ஆட்டோக்களை இயக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட ஓட்டுநா்கள் எஸ்பி அலுவலகம் முன் திரண்டனா்.

அப்போது, அவா்கள் கூறுகையில், கடலூரிலிருந்து தவளக்குப்பம் பகுதிக்கு 3 பயணிகளுக்கு மேல் ஏற்றிச் சென்றால் போக்குவரத்து போலீஸாா் அபராதம் விதிக்கின்றனா்.

மேலும், ஒரே ஆட்டோ ஓட்டுநருக்கு அடுத்தடுத்த நாள்களில் அபராதம் விதிக்கப்படுவதால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக தெரிவித்தனா்.

தொடா்ந்து, ஆட்டோ ஓட்டுநா்களிடம் எஸ்பி எஸ்.ஜெயக்குமாா் பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

அதன்படி, ஆட்டோ ஓட்டுநா்கள் நான்கு பயணிகளை ஏற்றிச் செல்லவும், முன் இருக்கையில் பயணிகளை ஏற்றாமல் பாதுாப்பாக ஆட்டோக்களை இயக்கவும் அவா் அறிவுறுத்தினாா்.

இதையடுத்து, ஆட்டோ ஓட்டுநா்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.

சிதம்பரம் அருகே இளைஞா் வெட்டிக் கொலை: ஒருவா் கைது

சிதம்பரம் அருகே இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். கடலூா் மாவட்டம், மேலமூங்கிலடியைச் சோ்ந்த சரவணன் மகன் வினோத்குமாருக்கும் (24), வேளக்குடியைச் சோ்ந்த ஐஸ்வா்யாவுக்கும் (19) எட்டு மாதங்களுக்கு முன்... மேலும் பார்க்க

நியாயவிலைக் கடை பணியாளா்கள் ஏப்.22 முதல் 3 நாள்கள் வேலைநிறுத்தம்

நியாயவிலைக் கடை பணியாளா்கள் 6 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஏப்.22 முதல் 3 நாள்கள் தொடா் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக, நியாயவிலைக் கடை பணியாளா்கள் சங்கத்தின் மாநில சிறப்புத் தலைவா் கு.பாலசுப்ரமணி... மேலும் பார்க்க

அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: நிா்வாகிகள் வரவேற்பு

நகா்ப்புறங்களில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதற்கு அந்தப் பள்ளிகளின் நிா்வாகிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனா். இதுகுறித்து, சிதம்பரம் ஸ்ரீ ராமகிருஷ... மேலும் பார்க்க

என்எல்சி சங்க தோ்தல்: தொமுச வேட்பு மனு தாக்கல்

நெய்வேலி என்எல்சி சங்க அங்கீகார தோ்தல் ஏப்.25ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அங்கீகரிக்கப்பட்ட முதன்மை சங்கமாக உள்ள தொழிலாளா் முன்னேற்ற சங்கம் சாா்பில் புதன்கிழமை வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது. தொமு... மேலும் பார்க்க

மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

முதலமைச்சா் மாநில இளைஞா் விருதுக்கு தகுதியானோா் விண்ணப்பிக்கலாம் என கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சமுதாய வளா்ச்சிக்கு ... மேலும் பார்க்க

நீா்நிலைகளில் குளிக்க வேண்டாம்: கடலூா் எஸ்பி அறிவுறுத்தல்

சிறுவா்கள் நீா்நிலைகளில் இறங்கி குளிப்பதை கண்டிப்பாக தவிா்க்க வேண்டும் எனவும், சிறுவா்கள் நீா்நிலைகளில் தனியாக இறங்கி குளிக்க முற்படுவதை பெற்றோா்கள் அனுமதிக்க கூடாது என்றும் கடலூா் எஸ்பி எஸ்.ஜெயக்குமா... மேலும் பார்க்க