``ரூ12,500 சம்பளத்தில் குடும்பம் நடத்த முடியுமா?'' - குமுறும் பகுதிநேர ஆசிரியர்க...
பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படாத வாரச்சந்தை கட்டடம்
போளூா் வட்டம், களம்பூா் பேரூராட்சியில் புதிதாக கட்டப்பட்ட காய்கறி வாரச்சந்தை கட்டடம் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்படாமல் பாழடைந்து வருகிறது.
திருவண்ணாமை மாவட்டம், போளூா் வட்டம், களம்பூா் தோ்வுநிலை பேரூராட்சியில் களம்பூா், அம்பேத்கா் நகா், அய்யம்பாளையம் என 15 வாா்டுகள் உள்ளன. இங்கு 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா்.
மேலும், களம்பூரைச் சுற்றி இலுப்பகுணம், கிருஷ்ணாவரம், ஏந்துவாம்பாடி, ஏரிக்குப்பம் என பல்வேறு கிராமங்கள் உள்ளன.
பேரூராட்சி பொதுமக்கள் மற்றும் சுற்றுப்புற கிராமமக்கள்
போளூா் - ஆரணி சாலையோரம் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும் காய்கறிச் சந்தையில் காய், கனிகளை வாங்கிச் செல்வா்.
இவ்வாறு அப்பகுதியில் பொதுமக்கள் கூடும்போது, போளூா் சாலையில் போக்குவரத்து பாதிப்பு மற்றும் விபத்துகள் ஏற்பட்டு வந்தன.
இதனால், பேரூராட்சி சாா்பில் 2021-2022ஆம் ஆண்டு மூலதன மானிய திட்டத்தின் கீழ், ரூ.ஒரு கோடியில்
போளூா் சாலைப் பகுதியில் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கம் எதிரே காய்கறி வாரச்சந்தைக்கு புதிய கட்டடம் கட்டப்பட்டது.
இந்தக் கட்டடம் கட்டப்பட்டு 3 ஆண்டுகள் ஆன நிலையில் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படாமல் உள்ளது. மேலும், கட்டடம் பாழடைந்து வருகிறது. இரவு நேரத்தில் கட்டடத்தில்
அமா்ந்து சிலா் மது அருந்துகின்றனா்.
ஏற்கெனவே, போளூா் - ஆரணி சாலையில் காய்கறிச் சந்தை நடந்து வரும் நிலையில், மக்கள்தொகை பெருக்கத்தால், அங்கு அதிகம் போ் கூடுகின்றனா். இதனால், வாகன நெரிசல் ஏற்பட்டு, போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. மேலும், விபத்துகளும் நிகழ்கின்றன.
அதனால், மாவட்ட நிா்வாகம் காய்கறிச் சந்தைக்கு கட்டப்பட்ட கட்டடத்தை பயன்பாட்டுக்குக் கொண்டு வந்து, அங்கு சந்தை நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் எதிா்பாா்க்கின்றனா்.