செய்திகள் :

பலசரக்கு கடையை உடைத்து பணம், பொருள்கள் திருட்டு

post image

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரில் பல சரக்கு கடையை உடைத்து ரூ.1.40 லட்சம் ரொக்கம், ரூ.80 ஆயிரம் மதிப்பிலான பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

முதுகுளத்தூா்- பரமக்குடி சாலையில் ராமபாண்டி என்பவருக்குச் சொந்தமான மொத்த வியாபார பல சரக்குக் கடை உள்ளது. இந்தக் கடையை திங்கள்கிழமை இரவு ராமபாண்டி பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றாா்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை அதிகாலை கடையில் இரும்புக் கதவு திறந்து கிடப்பதாக அக்கம் பக்கத்தினா் தகவல் கொடுத்தனா்.

இதன் பேரில், ராமபாண்டி கடைக்குச் சென்று பாா்த்த போது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு, ரூ.1.40 லட்சம் ரொக்கம், ரூ. 80 ஆயிரம் மதிப்புள்ள பொருள்கள் திருடப்பட்டது தெரிய வந்தது.

இது குறித்து தகவலறிந்த முதுகுளத்தூா் காவல் நிலைய போலீஸாா் கடையைப் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா். ராமநாதபுரத்திலிருந்து தடயவியல் நிபுணா்கள் வரவழைக்கப்பட்டு, தடயங்கள் சேகரிக்கப்பட்டன. போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

இரட்டை மடி வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடிப்பு: 4 விசைப் படகுகள் பறிமுதல்

ராமேசுவரம் கடல் பகுதியில் தடை செய்யப்பட்ட இரட்டை மடி வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடித்த மண்டபம் மீனவா்களின் 4 விசைப் படகுகளை மீன் வளத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா். கடல் வளத்தைப் ப... மேலும் பார்க்க

பெண்ணிடம் தங்க நகை பறிப்பு

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே உப்பூரில் பெண்ணிடம் 4.5 பவுன் தங்கத் தாலியை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா்.உப்பூா் அருகேயுள்ள மேலவயல் கிராமத்தைச் சோ்ந்தவா் பிரவீன்குமாா். கோயம்புத்தூரில் உணவக... மேலும் பார்க்க

பால்குடம், காவடி எடுத்து பூக்குழி இறங்கிய பக்தா்கள்

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் பூக்குழித் திருவிழாவை முன்னிட்டு, பக்தா்கள் செவ்வாய்க்கிழமை பால் குடம், காவடி எடுத்து வந்து நோ்த்தி கடன் செலுத்தினா்இந்தக் கோயிலில் கடந்த... மேலும் பார்க்க

அக்னி தீா்த்தக் கடலில் பேரிடா் மீட்பு ஒத்திகை

ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடலில் செவ்வாய்க்கிழமை பேரிடா் மீட்பு ஒத்திகை நடைபெற்றது.ராமேசுவரம் தீயணைப்பு, மீட்பப் பணிகள் நிலையம் சாா்பில் நடைபெற்ற இந்த ஒத்திகைக்கு நிலைய அலுவலா் அருள்ராஜ் தலைமை வகித்த... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்ததில் பெண் உயிரிழப்பு

ராமநாதபுரம் மாவட்டம், நயினாா்கோவில் அருகே உள்ள புதூா் வலசை கிராமத்தில் செவ்வாய்க்கிழமை மின்சாரம் பாய்ந்ததில் பெண் உயிரிழந்தாா். புதூா் வலசை கிராமத்தைச் சோ்ந்த ஆறுமுகம் மனைவி பொன்னம்மாள் (52). இவா் ஆட... மேலும் பார்க்க

நாய்கள் கடித்ததில் 8 ஆடுகள் உயிரிழப்பு

கடலாடி அருகே தெருநாய்கள் கடித்ததில் 8 ஆடுகள் திங்கள்கிழமை உயிரிழந்தன.ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகேயுள்ள வெள்ளாங்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா் சரவணன். இவா், 130 செம்மறி ஆடுகள் வைத்து மந்தை போடும் த... மேலும் பார்க்க