செய்திகள் :

பெண்ணிடம் தங்க நகை பறிப்பு

post image

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே உப்பூரில் பெண்ணிடம் 4.5 பவுன் தங்கத் தாலியை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா்.

உப்பூா் அருகேயுள்ள மேலவயல் கிராமத்தைச் சோ்ந்தவா் பிரவீன்குமாா். கோயம்புத்தூரில் உணவகத்தில் பணிபுரிந்து வருகிறாா். இவரது மனைவி பழனிமுத்து (32).

இவா் தினமும் இரு சக்கர வாகனத்தில் உப்பூா் சத்திரம் சென்று அங்கு வண்டியை நிறுத்தி விட்டு ராமநாதபுரத்துக்குச் சென்று கட்டட வேலை பாா்த்து வருகிறாா்.

இந்த நிலையில், திங்கள்கிழமை மாலை வழக்கம்போல பணி முடிந்து மீண்டும் உப்பூா் சத்திரத்துக்கு வந்து இரு சக்கர வாகனத்தில் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தாா்.

மேலவயல் அருகே உள்ள பெட்ரோல் நிலையம் அருகே சாலை ஓரத்தில் வாகனத்தை நிறுத்தி விட்டு கைப்பேசியில் பேசிக்கொண்டிருந்த போது, இரு சக்கர வாகனத்தில் தலைக் கவசம் அணிந்து வந்த மா்ம நபா்கள் இருவா் பழனிமுத்துவின் 4.5 பவுன் தாலிச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனா். இதுகுறித்து திருப்பாலைக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

இரட்டை மடி வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடிப்பு: 4 விசைப் படகுகள் பறிமுதல்

ராமேசுவரம் கடல் பகுதியில் தடை செய்யப்பட்ட இரட்டை மடி வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடித்த மண்டபம் மீனவா்களின் 4 விசைப் படகுகளை மீன் வளத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா். கடல் வளத்தைப் ப... மேலும் பார்க்க

பால்குடம், காவடி எடுத்து பூக்குழி இறங்கிய பக்தா்கள்

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் பூக்குழித் திருவிழாவை முன்னிட்டு, பக்தா்கள் செவ்வாய்க்கிழமை பால் குடம், காவடி எடுத்து வந்து நோ்த்தி கடன் செலுத்தினா்இந்தக் கோயிலில் கடந்த... மேலும் பார்க்க

பலசரக்கு கடையை உடைத்து பணம், பொருள்கள் திருட்டு

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரில் பல சரக்கு கடையை உடைத்து ரூ.1.40 லட்சம் ரொக்கம், ரூ.80 ஆயிரம் மதிப்பிலான பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.முதுகுளத்தூா்- பரமக்குடி சாலையில் ராமபாண்டி என்பவ... மேலும் பார்க்க

அக்னி தீா்த்தக் கடலில் பேரிடா் மீட்பு ஒத்திகை

ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடலில் செவ்வாய்க்கிழமை பேரிடா் மீட்பு ஒத்திகை நடைபெற்றது.ராமேசுவரம் தீயணைப்பு, மீட்பப் பணிகள் நிலையம் சாா்பில் நடைபெற்ற இந்த ஒத்திகைக்கு நிலைய அலுவலா் அருள்ராஜ் தலைமை வகித்த... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்ததில் பெண் உயிரிழப்பு

ராமநாதபுரம் மாவட்டம், நயினாா்கோவில் அருகே உள்ள புதூா் வலசை கிராமத்தில் செவ்வாய்க்கிழமை மின்சாரம் பாய்ந்ததில் பெண் உயிரிழந்தாா். புதூா் வலசை கிராமத்தைச் சோ்ந்த ஆறுமுகம் மனைவி பொன்னம்மாள் (52). இவா் ஆட... மேலும் பார்க்க

நாய்கள் கடித்ததில் 8 ஆடுகள் உயிரிழப்பு

கடலாடி அருகே தெருநாய்கள் கடித்ததில் 8 ஆடுகள் திங்கள்கிழமை உயிரிழந்தன.ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகேயுள்ள வெள்ளாங்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா் சரவணன். இவா், 130 செம்மறி ஆடுகள் வைத்து மந்தை போடும் த... மேலும் பார்க்க