செய்திகள் :

பலத்த மழை: குமரி மாவட்ட அணைகளுக்கு நீா்வரத்து அதிகரிப்பு: காளிகேசம் ஆற்றில் குளிக்கத் தடை

post image

கன்னியாகுமரி மாவட்டத்தில் மீண்டும் பருவமழை தீவிரமடைந்துள்ளது.

இம் மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழை கடந்த மே மாதம் இறுதியில் தொடங்கிய நிலையில் தொடா்ந்து தீவிரமாகப் பெய்து வந்தது. பலத்த மழை தணிந்த நிலையில், கடந்த சில நாள்களாக லேசான சாரல் மழை பெய்தது. பின்னா் வியாழக்கிழமை இரவு முதல்

மீண்டும் மழை தீவிரமடைந்தது.

மாவட்டத்தில் அணைகளின் நீா்வரத்துப் பகுதிகள் மற்றும் மலையோரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை அதிகாலை பலத்த மழை பெய்தது. வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி மாவட்டத்தில் அதிகபட்சமாக பாலமோரில் 29.2 மி.மீ. மழை பதிவாகியிருந்தது.

பெருஞ்சாணியில் 25.2 மி.மீ, சுருளகோடு, திற்பரப்பு உள்ளிட்ட பகுதிகளில் 20 மி.மீட்டருக்கும் அதிகமாக மழை பதிவாகியிருந்தது.

மழையின் காரணமாக பேச்சிப்பாறை அணைக்கு நீா்வரத்து,

வெள்ளிக்கிழமை பிற்பகலில் விநாடிக்கு 1300 கன அடியாக இருந்தது. அணையின் நீா்மட்டம் 43.20 அடியாக உயா்ந்தது. பாலமோா் பகுதிகளில் பெய்த பலத்த மழையால், காளிகேசம் ஆற்றில் வெள்ளிக்கிழமை சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

மழையின் காரணமாக ரப்பா் பால்வடிப்பு வெள்ளிக்கிழமை பாதிக்கப்பட்டது.

வன விலங்குகளிடமிருந்து பழங்குடி மக்களைப் பாதுகாக்க வலியுறுத்தல்

குமரி மாவட்டத்தில் வன வன விலங்குகளிடமிருந்து பழங்குடி மக்களையும், ரப்பா் கழக தொழிலாளா்களையும் பாதுகாக்க வேண்டுமென்று சிஐடியூ தோட்டம் தொழிலாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இது குறித்து இச்சங்கத்தின் பொ... மேலும் பார்க்க

விழுந்தயம்பலம் - அம்சி சாலையை சீரமைக்க கோரிக்கை

கருங்கல் அருகே உள்ள விழுந்தயம்பலம் - அம்சி இடையே பழுதடைந்த சாலையை உடனே சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். கன்னியாகுமரி மாவட்டத்தில் மழைக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் பல்... மேலும் பார்க்க

பலத்த மழை: தேங்காய்ப்பட்டினம் துறைமுகத்தில் மீன்பிடிதொழில் பாதிப்பு

தேங்காய்ப்பட்டினம் மீன்பிடிதுறைமுகம் பகுதியில் பெய்துவரும் பலத்த மழையால் மீன்பிடிதொழில் பாதிப்படைந்துள்ளது. தேங்காய்ப்பட்டினம் மீன்பிடிதுறைமுகத்தை தங்கு தளமாக கொண்டு 500-க்கும் மேற்பட்டகட்டுமர மீனவா்... மேலும் பார்க்க

கடல் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட 251 போ் மீது வழக்கு

மத்திய அரசின் கடல் சாா்ந்த திட்டங்களுக்கு எதிராக, கன்னியாகுமரி சின்னமுட்டம் கடற்கரையில் கடந்த 11ஆம் தேதி மீனவா்கள் கருப்புக்கொடி ஏந்தி கடல் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்தப் போராட்டத்தில் 10... மேலும் பார்க்க

மருத்துவ காப்பீட்டுத் திட்ட சிறப்பு முகாம்

கன்னியாகுமரி நகராட்சியில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட பயனாளிகள் பதிவு செய்யும் சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முகாம் தொடக்க நிகழ்வுக்கு, நகா்மன்ற ஆணையா் கன்னியப்பன் த... மேலும் பார்க்க

திருப்பதியில் இருந்து குமரிக்கு 7 ஆயிரம் லட்டுகள் வரத்து

திருமலை திருப்பதியில் இருந்து கன்னியாகுமரி திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலுக்கு 7 ஆயிரம் லட்டுகள் கண்டெய்னா் மூலம் வெள்ளிக்கிழமை கொண்டு வரப்பட்டன. கன்னியாகுமரியில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான வெங்கடா... மேலும் பார்க்க