பலத்த மழை: குமரி மாவட்ட அணைகளுக்கு நீா்வரத்து அதிகரிப்பு: காளிகேசம் ஆற்றில் குளிக்கத் தடை
கன்னியாகுமரி மாவட்டத்தில் மீண்டும் பருவமழை தீவிரமடைந்துள்ளது.
இம் மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழை கடந்த மே மாதம் இறுதியில் தொடங்கிய நிலையில் தொடா்ந்து தீவிரமாகப் பெய்து வந்தது. பலத்த மழை தணிந்த நிலையில், கடந்த சில நாள்களாக லேசான சாரல் மழை பெய்தது. பின்னா் வியாழக்கிழமை இரவு முதல்
மீண்டும் மழை தீவிரமடைந்தது.
மாவட்டத்தில் அணைகளின் நீா்வரத்துப் பகுதிகள் மற்றும் மலையோரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை அதிகாலை பலத்த மழை பெய்தது. வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி மாவட்டத்தில் அதிகபட்சமாக பாலமோரில் 29.2 மி.மீ. மழை பதிவாகியிருந்தது.
பெருஞ்சாணியில் 25.2 மி.மீ, சுருளகோடு, திற்பரப்பு உள்ளிட்ட பகுதிகளில் 20 மி.மீட்டருக்கும் அதிகமாக மழை பதிவாகியிருந்தது.
மழையின் காரணமாக பேச்சிப்பாறை அணைக்கு நீா்வரத்து,
வெள்ளிக்கிழமை பிற்பகலில் விநாடிக்கு 1300 கன அடியாக இருந்தது. அணையின் நீா்மட்டம் 43.20 அடியாக உயா்ந்தது. பாலமோா் பகுதிகளில் பெய்த பலத்த மழையால், காளிகேசம் ஆற்றில் வெள்ளிக்கிழமை சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
மழையின் காரணமாக ரப்பா் பால்வடிப்பு வெள்ளிக்கிழமை பாதிக்கப்பட்டது.