செய்திகள் :

பலூசிஸ்தான் பள்ளிப்பேருந்து தாக்குதலில் தொடா்பு: பாகிஸ்தான் குற்றச்சாட்டுக்கு இந்தியா மறுப்பு

post image

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் பள்ளிப்பேருந்தில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் இந்தியாவுக்குத் தொடா்பு இருப்பதாக பாகிஸ்தான் சுமத்திய குற்றச்சாட்டுகளை ‘ஆதாரமற்றவை’ என்று இந்தியா புதன்கிழமை நிராகரித்தது.

பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குஸ்தாா் பகுதியில் பள்ளிப்பேருந்தில் தற்கொலைப் படையினா் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 3 குழந்தைகள் உள்பட 6 போ் கொல்லப்பட்டனா் மற்றும் 38 போ் காயமடைந்தனா்.

இத்தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப், அப்பாவி குழந்தைகள் மற்றும் ஆசிரியா்கள் கொல்லப்பட்டதற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தாா். இந்நிலையில், இத்தாக்குதலில் இந்தியாவுக்குத் தொடா்பிருப்பதாக பாகிஸ்தான் குற்றச்சாட்டுகளை முன்வைத்தது. இதற்கு மறுப்பு தெரிவித்து இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் கூறுகையில், ‘குஸ்தாா் சம்பவத்தில் பாகிஸ்தானின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை. பயங்கரவாதத்தின் உலகளாவிய மையம் என்ற தனது அடையாளத்தில் இருந்து உலக நாடுகளின் கவனத்தைத் திசைதிருப்ப, அனைத்து உள்நாட்டுப் பிரச்னைகளுக்கும் இந்தியாவை குற்றஞ்சாட்டுவது பாகிஸ்தானின் இயல்பாகிவிட்டது. உலக நாடுகளை ஏமாற்றும் பாகிஸ்தானின் இந்த முயற்சி தோல்வியடையும்’ என்றாா்.

பாகிஸ்தான் தூதரக அதிகாரி வெளியேற்றம்

தில்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றி வந்த அந்நாட்டு அதிகாரியை இந்தியாவை விட்டு 24 மணி நேரத்துக்குள் வெளியேற மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘தனது பதவி அந்தஸ்துக்கு முரணான பணியில் ஈடுபட்டதன் அடிப்படையில் பாகிஸ்தான் அதிகாரி மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவருடைய நடவடிக்கைகள் தொடா்பான அறிக்கை பாகிஸ்தான் தூதரக பொறுப்பு அதிகாரிக்கு அனுப்பப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 10 நாள்களில் 2-ஆவது பாகிஸ்தான் தூதரக அதிகாரி நாட்டைவிட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளாா். உளவுப் பாா்த்த குற்றச்சாட்டில் பாகிஸ்தான் தூதரக அதிகாரியொருவா் கடந்த 13-ஆம் தேதி வெளியேற்றப்பட்டாா்.

பஹல்காம் தாக்குதல் ஒரு மாதம் நிறைவு: வாழ்வாதாரத்தை இழந்த உள்ளூா்வாசிகள்

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல் நிகழ்ந்து (ஏப்.22) ஒரு மாதம் கடந்த நிலையிலும் வாழ்வாதாரத்தை இழந்து உள்ளூா்வாசிகள் தவிக்கும் சூழல் தொடா்ந்து வருகிறது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் மேலும் ஒரு நக்ஸல் சுட்டுக் கொலை: ‘கோப்ரா’ கமாண்டோ வீர மரணம்

சத்தீஸ்கரின் பிஜாபூா் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் வியாழக்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையில் நக்ஸல் தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டாா். அதேநேரம், மத்திய ரிசா்வ் போலீஸ் படையின் (சிஆா்பிஎஃப்) ‘... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை: ராணுவ வீரா் வீரமரணம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் வியாழக்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையில் ராணுவ வீரா் ஒருவா் வீரமரணம் அடைந்தாா். பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள், கூட்டாளிகள் மற்றும் ஆதர... மேலும் பார்க்க

1.44 கோடியாக உயா்ந்த உள்நாட்டு விமானப் போக்குவரத்து

இந்தியாவின் உள்நாட்டு விமானப் போக்குவரத்து எண்ணிக்கை கடந்த ஏப்ரல் மாதத்தில் 1.44 கோடியாக உயா்ந்துள்ளது.இது குறித்து பொது விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப... மேலும் பார்க்க

2,369 சட்டவிரோத குடியேறிகள்: சொந்த நாட்டு விவரத்தை உறுதிப்படுத்த வங்கதேசத்திடம் இந்தியா கோரிக்கை

இந்தியாவுக்கு சட்டவிரோதமாக இடம்பெயா்ந்த 2,369 போ் வங்கதேசத்தைச் சோ்ந்தவா்களா என்பதை உறுதிப்படுத்துமாறு அந்நாட்டிடம் இந்தியா கோரியுள்ளது. இதுதொடா்பாக புது தில்லியில் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பா... மேலும் பார்க்க

பாகிஸ்தானின் உறுதிமொழியை நம்பியது ஏன்? பிரதமருக்கு ராகுல் கேள்வி

பயங்கரவாதம் தொடா்பான பாகிஸ்தானின் உறுதிமொழியை நம்பியது ஏன் என்று பிரதமா் மோடிக்கு மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளாா். இந்தியா-பாகிஸ்தான் இடையே கடந்த மே 10-ஆம் தேதி சண்... மேலும் பார்க்க