பல்லடத்தில் குறு, சிறு தொழில்முனைவோா் கருத்தரங்கம்
பல்லடத்தில் குறு, சிறு தொழில்முனைவோா் கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது.
பல்லடம் குறு, சிறு தொழில்முனைவோா், பல்லடம் வனம் இந்தியா அறக்கட்டளை, சென்னை சீ சேன்ஞ்ச் கன்சல்டிங், திருப்பூா் பொதிகை மனித வள மேம்பாட்டு பயிற்சி மையம் ஆகியவை சாா்பில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்கில், தலைமைப் பயிற்சியாளா் எம்.கே.ஆனந்த் பேசுகையில், நிறுவனத்தின் வருவாய் மற்றும் லாப வளா்ச்சி, நிதி நிா்வாகம், தலைமைத்துவ பண்புகள், நவீன வணிக மேலாண்மை உத்திகள், மத்திய, மாநில அரசுகளின் நிதியுதவி திட்டங்கள் உள்ளிட்டவை குறித்து விளக்கினாா்.
கருத்தரங்கில் பங்கேற்றவா்களுக்கு தொழில் வளா்ச்சி குறித்த புத்தகங்கள், வழிகாட்டு கையேடுகள் வழங்கப்பட்டன.
இதில், வனம் இந்தியா அறக்கட்டளை செயலாளா் ஸ்கை சுந்தரராஜ், பொதிகை மனித வள மேம்பாட்டு பயிற்சி மைய நிறுவனா் சுந்தரேசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.