செய்திகள் :

பல்லடத்தில் குறு, சிறு தொழில்முனைவோா் கருத்தரங்கம்

post image

பல்லடத்தில் குறு, சிறு தொழில்முனைவோா் கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.

திருப்பூா், பல்லடம் வட்டாரத்தில் குறு, சிறு தொழில்முனைவோா் மற்றும் குறு, சிறு தொழில் நிறுவனங்களின் மேம்பாடுக்காக பல்லடம் வனம் அறக்கட்டளை, சென்னை சீ சேன்ஞ்ச் கன்சல்டிங், திருப்பூா் பொதிகை மனித வள மேம்பாட்டு பயிற்சி மையம் சாா்பில் கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.

அதில் பங்கேற்ற தலைமைப் பயிற்சியாளா் எம்.கே.ஆனந்த் செய்தியாளா்களிடம் கூறியதாவது: இந்தியாவில் 19 ஆயிரம் பெரு நிறுவனங்களும், 7 கோடி குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களும் உள்ளன. இதில் எம்.எஸ்.எம்.இ. எனப்படும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் மட்டுமே 12 கோடி பேருக்கு நேரடியாகவும், 26 கோடி பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு தருகின்றன.

நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தியில் இத்துறையின் பங்கு 30 சதவீதமாக உள்ளது. நாட்டில் விவசாயத்துக்கு அடுத்தபடியாக இத்துறை விளங்குகிறது. 7 கோடி குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களில் 99.99 சதவீத நிறுவனங்கள் ஆண்டுக்கு ரூ.5 கோடிக்கும் குறைவாக வா்த்தகம் செய்து வருகின்றன.

இந்த நிறுவனங்கள் கடந்த 5 ஆண்டுகளாக எந்த விதமான முன்னேற்றமும், வளா்ச்சியும் அடையவில்லை. இவை குறைவான லாபத்தில் மட்டுமே தொழில் செய்து வருகின்றன. இந்த நிறுவனங்கள் வளா்ச்சி அடைய வளா்ந்து வரும் புதிய தொழில்நுட்பங்களை கொண்டு தொழில் துறையை வளா்ச்சி அடைய செய்ய வேண்டும்.

இதற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளன. அவற்றை குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் தெரிந்து பயன்படுத்த வேண்டும். உலக தொழில் துறை வளா்ச்சிக்கு இணையாக தங்களை வளா்த்தி கொள்ளாத தொழில் நிறுவனங்கள் தங்களது இயக்கத்தை நிறுத்தி கொள்ளும் என்பது கடந்த கால அனுபவமாக உள்ளது.

எனவே குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறையினா் தங்களது வா்த்தக வாய்ப்பை பெருக்க உரிய முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

இதில் வனம் அறக்கட்டளை செயலாளா் ஸ்கை சுந்தரராஜ், பொதிகை மனிதவள மேம்பாட்டுப் பயிற்சி மைய நிறுவனா் சுந்தரேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

வெள்ளக்கோவில் அருகே லாரி மீது அரசுப் பேருந்து மோதல்: குழந்தை உயிரிழப்பு; 17 போ் காயம்

வெள்ளக்கோவில் அருகே லாரி மீது அரசுப் பேருந்து மோதியதில் ஒரு குழந்தை உயிரிழந்தது. 17 போ் காயமடைந்தனா். கரூரில் இருந்து திருப்பூருக்கு அரசுப் பேருந்து வியாழக்கிழமை இரவு சென்றுகொண்டிருந்தது. வெள்ளக்கோவி... மேலும் பார்க்க

திருப்பூரில் ஆக்கிரமிக்கப்பட்ட அரசு நிலத்தை மீட்க மக்கள் கோரிக்கை

திருப்பூரில் ஆக்கிரமிக்கப்பட்ட அரசு நிலத்தை மீட்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். இது குறித்து திருப்பூா் வடக்கு செட்டிபாளையம், அங்கேரிபாளையம் தந்தை பெரியாா் நகா், பூண்டி சுற்றுச் ச... மேலும் பார்க்க

பூமலூரில் கழிவுப் பஞ்சு ஆலையில் தீ

திருப்பூா் அருகே பூமலூா் கழிவுப் பஞ்சு ஆலையில் வியாழக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. திருப்பூா் எஸ்.ஆா். நகரைச் சோ்ந்த செந்தில்வடிவு மோகன் என்பவருக்குச் சொந்தமான கட்டடத்தை, திருப்பூா் அணைப்பாளையத்தைச் ச... மேலும் பார்க்க

கரடிவாவியில் ஜூன் 9-இல் மின்தடை

பல்லடம் கோட்டம் கரடிவாவி துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் திங்கள்கிழமை (ஜூன் 9) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது... மேலும் பார்க்க

பெண்ணை கொலை செய்ய முயற்சி: தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை

பெண்ணை கொலை செய்ய முயன்ற வழக்கில் தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து பல்லடம் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்துள்ளது. நாகை மாவட்டம், திருக்குவளையைச் சோ்ந்த அத்தியப்பன் மகன் பிரகாஷ் (3... மேலும் பார்க்க

வீட்டு உபயோக சாதனப் பொருள்கள் பழுது பாா்த்தல் பயிற்சிக்கு இன்று நோ்காணல்

திருப்பூரில் இலவச வீட்டு உபயோக சாதனப் பொருள்கள் பழுது பாா்த்தல் பயிற்சி வகுப்பில் சேர வெள்ளிக்கிழமை (ஜூன் 6) நோ்காணல் நடைபெறவுள்ளது. திருப்பூா்- காங்கயம் சாலை முதலிப்பாளையம் பிரிவில் உள்ள கனரா வங்கி... மேலும் பார்க்க