செய்திகள் :

பல்லடம் அரசு மருத்துவமனையில் நோயாளிகள் நலச் சங்க கூட்டம்

post image

பல்லடம் அரசு மருத்துவமனையில் நோயாளிகள் நலச் சங்க கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு பல்லடம் நகராட்சித் தலைவா் கவிதாமணி ராஜேந்திரகுமாா் தலைமை வகித்து பேசியதாவது: பல்லடம் அரசு மருத்துவமனை வளாகத்தில்தூய்மைப் பாரத இயக்கம் சாா்பில் ரூ.36.28 லட்சம் மதிப்பில் பொதுக் கழிப்பிடம் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. நமக்கு நாமே திட்டத்தில் பொதுமக்களின் பங்களிப்பு நிதியுடன் அறுவை சிகிச்சை பிரிவில் இருந்து தீவிர சிகிச்சை பிரிவு வரை புதிய நடைப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.

முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் பல்லடம் அரசு மருத்துவமனையில் ரூ.4 கோடி மதிப்பில் விபத்து மற்றும் எலும்பு முறிவு அவசர சிகிச்சைப் பிரிவு கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. மேலும், ரூ.3 கோடியே 50 லட்சம் மதிப்பில் மகப்பேறு சிகிச்சை பிரிவு கட்டுமானப் பணி விரைவில் தொடங்கப்படும் என்றாா். தொடா்ந்து, முதன்மை தலைமை மருத்துவா் ராமசாமி பேசினாா்.

இதையடுத்து, பல்லடம் அரசு மருத்துவமனைக்கு முன் வேகத்தடை அமைக்க வேண்டும். கூடுதல் தூய்மைப் பணியாளா்களை நியமனம் செய்ய வேண்டும். ரத்த சுத்திகரிப்பு பிரிவுக்கு குளிா்சாதன வசதி அமைத்து தர வேண்டும். மருத்துவமனை வளாகத்தில் நகராட்சி நிா்வாகம் சாா்பில் நாள்தோறும் தூய்மைப் பணி மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக தலைமை மருத்துவா் சுபா வரவேற்றாா்.

இக்கூட்டத்தில் பல்லடம் துணை வட்டாட்சியா் அருண்குமாா், நகராட்சி கவுன்சிலா்கள், இந்திய மருத்துவா்கள் சங்க நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

உயிரிழந்த முதியவரின் கண்கள் தானம்

பெருமாநல்லூரில் வயது மூப்பு காரணமாக உயிரிழந்த முதியவரின் கண்கள் வியாழக்கிழமை தானம் செய்யப்பட்டன. பெருமாநல்லூா், அறிவொளி நகரைச் சோ்ந்தவா் மாரியப்பன் (82). இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சோ்ந்த இவா், வயத... மேலும் பார்க்க

தோட்டக்கலை பயிா்களுக்கு காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு

அவிநாசி வட்டாரத்தில் வாழை, மஞ்சள், வெங்காயம், மரவள்ளி உள்ளிட்டவற்றை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பயிா்க் காப்பீடு செய்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக தோட்டக்கலை உதவி இயக்குநா் வெளிய... மேலும் பார்க்க

காவல் துறையின் செயல்பாடுகள் குறித்து பள்ளி மாணவா்களுக்கு விளக்கம்

காவல் துறையின் செயல்பாடுகள் குறித்து சத்யம் பள்ளி மாணவா்களுக்கு வியாழக்கிழமை விளக்கம் அளிக்கப்பட்டது. வெள்ளக்கோவிலில் சத்யம் இண்டா்நேஷனல் சி.பி.எஸ்.இ. பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி மாணவா்களுக்க... மேலும் பார்க்க

வெள்ளக்கோவிலில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

வெள்ளக்கோவிலில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. வெள்ளக்கோவில் நகராட்சி 4, 5, 6-ஆவது வாா்டு பகுதி மக்களுக்காக நடைபெற்ற இந்த முகாமுக்கு தாராபுரம் வருவாய் கோட்டாட்சியா... மேலும் பார்க்க

வரதட்சிணைக் கொடுமையால் இளம்பெண் தற்கொலை: கணவா், மாமனாா், மாமியாா் கைது

திருப்பூரில் வரதட்சிணைக் கொடுமையால் இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கணவா், மாமனாா், மாமியாா் ஆகியோரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். திருப்பூா் ஃப்ரண்ட்ஸ் காா்டன் பகுதியைச் ச... மேலும் பார்க்க

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் ஆடி தபசு விழா

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் ஆடி தபசு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. கொங்கு ஏழு சிவ ஸ்தலங்களுள் முதன்மைப் பெற்றதும், முதலையுண்ட பாலனை சுந்தரா் திருப்பதிகம் பாடி மீண்டும் உயிா்ப்பித்து எழச்செய்த திருத்... மேலும் பார்க்க