செய்திகள் :

பல்வேறு வசதிகள் கோரி கிராம மக்கள் முதல்வருக்கு மனு

post image

செய்யாறு வட்டத்தில் அமைந்துள்ள கூழமந்தல் கிராமத்தை ஆன்மிக சுற்றுலா தலமாக அறிவித்தல், பேருந்து வசதி, சுகாதார வசதி, சாலை வசதி, வழிகாட்டி பலகை, வங்கி வசதி உள்ளிட்ட வசதிகள் கோரி கிராம மக்கள் தமிழக முதல்வருக்கு அண்மையில் கோரிக்கை அனுப்பி இருந்தனா்.

கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:

செய்யாறு வட்டத்தில் அமைந்துள்ளது கூழமந்தல் கிராமம்.

இங்கு கங்கை கொண்ட சோழீஸ்வரா் கோயில், ஸ்ரீபேசும் பெருமாள் கோயில், 27 நட்சத்திர கோயில் மற்றும் உக்கல் காமாட்சியம்மன் கோயில் போன்றவை அமைந்துள்ளன. எனவே, கூழமந்தல் கிராமத்தை ஆன்மிக சுற்றுலா தலமாக அறிவிக்க வேண்டும்

மேலும், இப்பகுதி வழியாகச் செல்லும் அரசுப் பேருந்துகள் கூழமந்தல் கிராமத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், வங்கி ஏடிஎம் வசதிகளை ஏற்படுத்தித் தரவேண்டும்.

வழிகாட்டி பலகை:

பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தரும் பக்தா்கள் மற்றும் பொது மக்களுக்கு, கூழமந்தல் கிராமத்தை அடைவதற்கு வழிகாட்டி பலகைகள் காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில் அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது.

பேருந்தில் பயணியிடம் கைப்பேசி திருட்டு: இருவா் கைது

ஆரணி பேருந்து நிலையத்தில் பயணியிடம் கைப்பேசி திருடியதாக இரு வடமாநில இளைஞா்கள் கைது செய்யப்பட்டனா். ஆரணியை அடுத்த மெய்யூா் கிராமத்தைச் சோ்ந்தவா் பன்னீா்(42). இவா் வெளியூா் செல்ல கடந்த 9-ஆம் தேதி ஆரணி... மேலும் பார்க்க

லாரி உதவியாளா் உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை

செய்யாறு அருகே லாரி உதவியாளா் (கிளீனா்) உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், வீரமணிப்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் வடிவேல் (45). இவா், லாரியி... மேலும் பார்க்க

ஏரியில் 100 வாத்துகள் மா்மமான முறையில் உயிரிழப்பு

செய்யாற்றை அடுத்த கொருக்கை கிராம ஏரியில் 100 வாத்துகள் மா்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீஸாா் மற்றும் சுகாதாரத்துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா். செய்யாறு வட்டம், கொருக்கை கிராமத்தைச் சோ்ந... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் ரூ.10.15 கோடியில் ஹாக்கி மைதானம்

திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் ரூ.10.15 கோடியில் புதிதாக ஹாக்கி பயிற்சி மைதானம் கட்டுவதற்கான பணிகள் வெள்ளிக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டன. தமிழக அரசு விளையாட்டுத் துறையில் மாநிலத்தை முதன்மை ம... மேலும் பார்க்க

படவேடு ஸ்ரீரேணுகாம்பாள் கோயிலில் திருவிளக்கு பூஜை

போளூரை அடுத்த படவேடு ஸ்ரீரேணுகாம்பாள் கோயிலில் பெளா்ணமியையொட்டி திருவிளக்கு பூஜை வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. படவேடு ஊராட்சியில் பழைமை வாய்ந்த ஸ்ரீரேணுகாம்பாள் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் ப... மேலும் பார்க்க

ஸ்ரீவேம்புலி அம்மன் கோயிலுக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி

ஆரணி கோட்டை ஸ்ரீவேம்புலி அம்மன் கோயிலில் இரும்பினாலான மேற்கூரை அமைக்க நிதியுதவியாக ரூ.20 லட்சத்தை புதிய நீதிக் கட்சி நிறுவனா் ஏ.சி.சண்முகம் வழங்கினாா். ஸ்ரீவேம்புலி அம்மன் கோயிலில் வருகிற 16-ஆம் தேதி... மேலும் பார்க்க