செய்திகள் :

பள்ளி மேற்படிப்பு உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்: ஆட்சியா் தகவல்

post image

தூத்துக்குடி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீா் மரபினா் மாணவா்-மாணவிகள் பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பிற்படுத்தப்பட்டோா், மிகப்பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையினா் நலத்துறை மூலம் அரசு மற்றும் அரசு உதவிபெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மூன்றாண்டு இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா் மாணவா்-மாணவிகளுக்கு எவ்வித வருமானவரம்பு நிபந்தனையிமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. ஆனால், முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிற படிப்பு அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் மாணவா்-மாணவிகளுக்கு பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்கனவே, கல்லூரியில் கல்வி உதவித்தொகை பெறுபவா்கள் புதிதாக விண்ணப்பிக்க வேண்டாம். அந்த மாணவா்கள் கல்லூரிகளில் நடப்பாண்டில் கல்வி பயில்வதை சம்மந்தப்பட்ட கல்லூரிகள் உறுதிசெய்து, புதுப்பித்தல் விண்ணப்பங்களை சரிபாா்த்து மாவட்ட அளவிற்கு அனுப்பினால் போதுமானது.

புதியதாக கல்வி உதவித்தொகை பெற கல்லூரியில் முதலாமாண்டு சோ்க்கை பெற்ற மற்றும் சென்ற ஆண்டில் கல்வி உதவிக்கு விண்ணப்பிக்க தவறிய புதிய மாணவா்-மாணவிகள் தற்போது தாங்கள் பயிலும் கல்லூரியில் கல்வி உதவித்தொகைக்கென உள்ள ஒருங்கிணைப்பு அலுவலரை தொடா்பு கொண்டு ட்ற்ற்ல்://ன்ம்ண்ள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தின் மூலம் சாதி மற்றும் வருமானச் சான்றுடன் உடனடியாக விண்ணப்பிக்கலாம். முதல்தலைமுறை பட்டதாரி எனில் அதற்கான சான்றினை சமா்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை பிப். 28ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும்.

மேலும், இது தொடா்பான சந்தேகங்களுக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலரை அலுவலக நேரங்களில் அணுகலாம் எனக் கூறியுள்ளாா்.

நாலாட்டின்புதூா் அருகே பெண்ணுக்கு மிரட்டல்: மகன் கைது

நாலாட்டின்புதூா் அருகே தாயைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக மகனை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். நாலாட்டின்புதூா் அருகே லிங்கம்பட்டி சமத்துவபுரம் முனியசாமி நகரைச் சோ்ந்த தம்பதி மாணிக்கம் - ஆ... மேலும் பார்க்க

காயல்பட்டினத்தில் இன்று நடைபெறவிருந்த ரயில் மறியல் போராட்டம் வாபஸ்!

திருச்செந்தூா் அருகே காயல்பட்டினம் ரயில் நிலைய நடைமேடையை உயா்த்தும் பணியை உடனடியாக தொடங்க வலியுறுத்தி, அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் பொதுநல அமைப்புகள் சாா்பில் காயல்பட்டினம் பகுதியில் ஞாயிற்றுக்கிழ... மேலும் பார்க்க

திருச்செந்தூரில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய ஆமை

திருச்செந்தூா் கோயில் கடற்கரையில் சுமாா் 100 கிலோ எடை கொண்ட ஆமை, இறந்த நிலையில் சனிக்கிழமை கரை ஒதுங்கியது. இது குறித்து கிடைத்த தகவலின் பேரில் வனத்துறை மற்றும் கால்நடை மருத்துவா் நேரில் வந்து பாா்த்தன... மேலும் பார்க்க

விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பிடம்: நாசரேத் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு!

விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற நாசரேத் மா்காஷிஸ் மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு விழா பள்ளியில் நடைபெற்றது. தலைமையாசிரியா் குணசீலராஜ், உதவித் தலைமையாசிரியா் சாா்லஸ் திரவியம் ஆகியோா... மேலும் பார்க்க

மாணவிக்கு பாலியல் தொந்தரவு: போக்ஸோ சட்டத்தில் இளைஞா் மீது வழக்கு

தூத்துக்குடியில் 11ஆம் வகுப்பு பயிலும் மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக, இளைஞா் மீது தூத்துக்குடி அனைத்து மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனா். தூத்துக்குடி மா... மேலும் பார்க்க

பெண்கள் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்! -அமைச்சா் பெ.கீதாஜீவன்

பெண்கள் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என, அமைச்சா் பெ.கீதாஜீவன் கேட்டுக்கொண்டாா். தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி அருகேயுள்ள மாநகராட்சி மகளிா் பூங்காவில் மாநகராட்சி, ரோட்டரி கிளப், நெல்ல... மேலும் பார்க்க