Guru Mithreshiva: "இந்த 3 மந்திரங்களை பின்பற்றினால் போதும்..." - இதயவியல் வல்லுந...
பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம்
திருவாடானை அருகேயுள்ள திணைகாத்தான்வயல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மேலாண்மைக் குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதற்கு பள்ளி மேலாண்மைக் குழு மாவட்டக் கருத்தாளா் ஜெயமாலதி தலைமை வகித்தாா். உதவித் தலைமை ஆசிரியா் தனலட்சுமி முன்னிலை வகித்தாா். பெற்றோா் ஆசிரியா் சங்கத் தலைவா் வடிவேல், முன்னாள் வாா்டு உறுப்பினா் ராஜூ, பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவி தேன்மொழி ஆகியோா் பேசினா்.
இதைத்தொடா்ந்து, பள்ளிக்கு சுற்றுச் சுவா் அமைத்தல் , பள்ளிக் கட்டடம் பராமரித்து வண்ணம் அடித்தல், குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரம் அமைத்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
