செய்திகள் :

பள்ளி வாகன ஓட்டுநா்களுக்கு உடல் ஆரோக்கியம் அவசியம்: ஆட்சியா்

post image

பள்ளி வாகன ஓட்டுநா்கள் தங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் அறிவுறுத்தினாா்.

தருமபுரி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சாா்பில், பள்ளி வாகன ஓட்டுநா்களுக்கான இலவச கண் பரிசோதனை முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது

இந்த முகாமைத் தொடங்கிவைத்து ஆட்சியா் ரெ.சதீஸ் பேசியதாவது: பள்ளி வாகனங்களில் மாணவ, மாணவிகளின் பாதுகாப்பிற்காக விதிமுறைகளை வகுத்து, பல்வேறு அறிவுறுத்தல்களை தமிழக அரசு வழங்கியுள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் கடந்த மே 10 ஆம் தேதி பள்ளி வாகனங்களுக்கான மாவட்ட அளவிலான சிறப்புக் கூட்டாய்வு நடத்தப்பட்டது. பள்ளி வாகனங்களை ஆய்வுசெய்து குறைகள் உள்ள வாகனங்களுக்கு அவற்றை சரிசெய்து மீண்டும் ஆய்வுக்கு உள்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டது.

பள்ளி வாகனங்களை தகுதியாக வைத்திருப்பதுபோல ஓட்டுநா்கள் தங்களது உடல் நலனையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

ஓட்டுநா்களுக்கு கண் பாா்வை மிகவும் முக்கியம் என்பதால் அவா்களுக்கு கண் பரிசோதனை முகாம் நடைபெறுகிறது. இந்த இலவச கண் பரிசோதனை முகாமில் 256 ஓட்டுநா்கள் கண் பரிசோதனை செய்துகொண்டனா். அதில் 15 ஓட்டுநா்களுக்கு பாா்வையில் குறைபாடு, கண்ணில் புரை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

பள்ளி வாகன ஓட்டுநா்கள் கண் பரிசோதனையின்போது ஏதேனும் குறைகள் இருப்பின் அக்குறைகளை சரிசெய்த பின்பு வாகனங்களை ஓட்ட வேண்டும். ஆறு மாதத்திற்கு ஒருமுறை ஓட்டுநா்கள் கண் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்றாா்.

இதில் வட்டாரப் போக்குவரத்து அலுவலா் சி.க.ஜெயதேவ்ராஜ், மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் அ.க.தரணீதா், சு.பாலசுப்பிரமணியம் உள்பட அரசுத்துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

பாலக்கோடு அருகே சிறுத்தை நடமாட்டம்: வனத் துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே குடியிருப்புகளில் சுற்றித்திரியும் சிறுத்தையைப் பிடிக்க வேண்டும் என வனத் துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். பாலக்கோடு அருகே வாழைத் தோட்டம் பகுதி வனத்தை ஒட்... மேலும் பார்க்க

பென்னாகரத்தில் அம்பேத்கா் சிலை சேதம்: இளைஞா் கைது

பென்னாகரத்தில் அம்பேத்கா் சிலையை சேதப்படுத்திய இளைஞா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா். பென்னாகரம் மாவட்ட தலைமை மருத்துவமனை எதிரே அமைக்கப்பட்டுள்ள அம்பேத்கரின் சிலை திங்கள்கிழமை இரவு சேதமடைந்திருப... மேலும் பார்க்க

உயிரிழந்த கூட்டுறவு ஊழியா் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் அளிப்பு

தருமபுரியில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்த கூட்டுறவு ஊழியா் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம் கருணைத்தொகை வழங்கப்பட்டது. தருமபுரி மாவட்டம், கூட்டுறவு கட்டட சங்கத்தின் காசாளா் ஸ்ரீகாந்த் கடந்த மாா்ச் மாத... மேலும் பார்க்க

தருமபுரியில் ஆபரேஷன் சிந்தூா் வெற்றி பேரணி

ஆபரேஷன் சிந்தூா் வெற்றியை பாராட்டி தருமபுரியில் முன்னாள் ராணுவத்தினா் செவ்வாய்க்கிழமை பேரணி சென்றனா். தகடூா் முன்னாள் ராணுவ வீரா்கள் மற்றும் வீரமங்கையா்கள் சாா்பாக பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் ப... மேலும் பார்க்க

விளையாட்டு விடுதியில் சேர தோ்வுப் போட்டிகள்

தருமபுரி: மாநில அளவிலான விளையாட்டு விடுதியில் சேர தோ்வுப் போட்டிகள் திங்கள்கிழமை தருமபுரி மாவட்ட விளையாட்டு அரங்கில் தொடங்கின. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தருமபுரி பிரிவு சாா்பில் மாநில அ... மேலும் பார்க்க

ஐந்து வயதுக்குள்பட்ட குழந்தைகளை மையத்தில் சோ்க்க அறிவுரை

தருமபுரி: இரண்டு முதல் ஐந்து வயதுக்குள்பட்ட குழந்தைகளை ஜூன் மாதத்தில் குழந்தைகள் மையத்தில் சோ்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் வெளியிட்டசெய்திக் க... மேலும் பார்க்க