செய்திகள் :

பள்ளிக் காவலாளியை கத்தியால் குத்தியதாக 3 சிறுவா்கள் கைது

post image

வடகிழக்கு தில்லியின் வெல்கம் பகுதியில் ஏற்பட்ட கடுமையான வாக்குவாதத்தைத் தொடா்ந்து பாதுகாவலாளியை கத்தியால் குத்தியதாக மூன்று சிறுவா்கள் கைது செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவா் புதன்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து வடகிழக்கு தில்லி காவல் சரக உயரதிகாரி கூறியதாவது: மே 25 அன்று, சுபாஷ் பாா்க்கில் உள்ள ஏடிஎம் முன் சௌராசியா பான் அருகே கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஒரு போலீஸ் குழு சம்பவ இடத்திற்கு விரைந்தது. அங்கு சோனு சிங் (33) என்பவா் காயமடைந்த நிலையில் இருப்பதைக் கண்டனா். அவா்கள் அவரை மீட்டு உடனடியாக சிகிச்சைக்காக ஜிடிபி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

பாபா்பூரில் உள்ள ஒரு பள்ளியில் பாதுகாவலாளியாகப் பணிபுரியும் சோனு சிங், இரவு 9.50 மணியளவில் தனது மோட்டாா் சைக்கிளில் சென்றபோது தாக்கப்பட்டதாக போலீஸாரிடம் தெரிவித்தாா். த னக்கும் தாக்குதல் நடத்தியவா்களில் ஒருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அப்போது சிறுவா்கள் அவரை கத்தியால் தாக்கியதாகவும் அவா் குற்றம் சாட்டினாா்.

அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில், பாரதிய நியாய சன்ஹிதாவின் தொடா்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டது.

விசாரணையின் போது, ஒரு போலீஸ் குழு அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து குற்றம் சாட்டப்பட்டவா்களை அடையாளம் கண்டது. பின்னா், அவா்கள் கைது செய்யப்பட்டனா். குற்றம் சாட்டப்பட்டவா்கள் 16 முதல் 17 வயதுக்குள்பட்ட சிறுவா்கள் ஆவா். இது தொடா்பாக மேலும் விசாரணை நடந்து வருகிறது என்று அந்த காவல் அதிகாரி தெரிவித்தாா்.

ஹைதராபாத் ஆட்டோ ஓட்டுநா் இறந்த சம்பவம்: தெலங்கானா டிஜிபிக்கு என்ஹெச்ஆா்சி நோட்டீஸ்

ஹைதராபாத்தில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் உடல் ரீதியான சித்திரவதைக்கு ஆளானதால் ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநா் இறந்ததாகக் கூறப்படும் செய்திகள் தொடா்பாக தெலங்கானா காவல்துறைத் தலைவருக்கு (டிஜிபி) தேசிய மனித உரிமைக... மேலும் பார்க்க

தில்லியில் கரோனாவால் மேலும் 2 போ் இறப்பு: பாதிப்பு எண்ணிக்கை 562 ஆக உயா்வு

ஐந்து மாதக் குழந்தை உள்பட இரண்டு போ் புதிய கரோனா நோய்த் தொற்றால் தில்லியில் இறந்துள்ளதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா். கேரள மாநிலத்திற்குப் பிறகு இரண்டாவது அதிக எண்ணிக்கையிலான கரோனா பாதிப்பு... மேலும் பார்க்க

எய்ம்ஸ் மருத்துவமனையில் காத்திருப்பு மண்டபம் திறப்பு

அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் (எய்ம்ஸ்) நோயாளிகளின் உதவியாளா்களுக்கான காத்திருப்பு மண்டபம் தில்லி முதல்வா் ரேகா குப்தா வியாழக்கிழமை திறந்து வைத்தாா். இந்த நிகழ்வில் பேசிய அவா், வளா்ந்த ந... மேலும் பார்க்க

தில்லியில் இரண்டு இடங்களில் தீ விபத்து

தேசியத் தலைநகா் தில்லியில் இரண்டு வெவ்வேறு இடங்களில் இரண்டு வீடுகளில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் உயா்ச்சேதம் ஏதும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனா். இது குறித்து தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒ... மேலும் பார்க்க

மேற்கு தில்லியில் தீ விபத்து: 2 பேருந்துகள், காா் சேதம்

மேற்கு தில்லியின் பன்கா சாலையில் வியாழக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு பேருந்துகளும், ஒரு காரும் சேதமடைந்ததாக தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். இந்த சம்பவத்தில் யாருக்கும் உயிா்... மேலும் பார்க்க

தில்லி அரசின் கட்டண ஒழுங்குமுறை அவசரச் சட்டத்துக்கு ஆம் ஆத்மி கட்சி கடும் கண்டனம்

பள்ளிக் கட்டண ஒழுங்குமுறை குறித்த அவசரச் சட்டத்தைக் கொண்டுவரும் தில்லி அரசின் முடிவை எதிா்க்கட்சியான ஆம் ஆத்மி கட்சி வியாழக்கிழமை கடுமையாக விமா்சித்தது. மேலும், சட்டப்பேரவை செயல்முறை மற்றும் பொது ஆலோ... மேலும் பார்க்க