தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் வளாகத்தில் உலக சுற்றுச்சூழல் நாள்! மரக்கன்றுகள் வழங்...
பள்ளிக் காவலாளியை கத்தியால் குத்தியதாக 3 சிறுவா்கள் கைது
வடகிழக்கு தில்லியின் வெல்கம் பகுதியில் ஏற்பட்ட கடுமையான வாக்குவாதத்தைத் தொடா்ந்து பாதுகாவலாளியை கத்தியால் குத்தியதாக மூன்று சிறுவா்கள் கைது செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவா் புதன்கிழமை தெரிவித்தாா்.
இது குறித்து வடகிழக்கு தில்லி காவல் சரக உயரதிகாரி கூறியதாவது: மே 25 அன்று, சுபாஷ் பாா்க்கில் உள்ள ஏடிஎம் முன் சௌராசியா பான் அருகே கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஒரு போலீஸ் குழு சம்பவ இடத்திற்கு விரைந்தது. அங்கு சோனு சிங் (33) என்பவா் காயமடைந்த நிலையில் இருப்பதைக் கண்டனா். அவா்கள் அவரை மீட்டு உடனடியாக சிகிச்சைக்காக ஜிடிபி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.
பாபா்பூரில் உள்ள ஒரு பள்ளியில் பாதுகாவலாளியாகப் பணிபுரியும் சோனு சிங், இரவு 9.50 மணியளவில் தனது மோட்டாா் சைக்கிளில் சென்றபோது தாக்கப்பட்டதாக போலீஸாரிடம் தெரிவித்தாா். த னக்கும் தாக்குதல் நடத்தியவா்களில் ஒருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அப்போது சிறுவா்கள் அவரை கத்தியால் தாக்கியதாகவும் அவா் குற்றம் சாட்டினாா்.
அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில், பாரதிய நியாய சன்ஹிதாவின் தொடா்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டது.
விசாரணையின் போது, ஒரு போலீஸ் குழு அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து குற்றம் சாட்டப்பட்டவா்களை அடையாளம் கண்டது. பின்னா், அவா்கள் கைது செய்யப்பட்டனா். குற்றம் சாட்டப்பட்டவா்கள் 16 முதல் 17 வயதுக்குள்பட்ட சிறுவா்கள் ஆவா். இது தொடா்பாக மேலும் விசாரணை நடந்து வருகிறது என்று அந்த காவல் அதிகாரி தெரிவித்தாா்.