செய்திகள் :

பள்ளிக்கு புதிய கட்டடம் கட்டக் கோரி கிராம மக்கள் மனு

post image

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே பல ஆண்டுகளாக சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ள பள்ளிக்கு புதிய கட்டடம் அமைத்துத் தரக் கோரி, கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

திருப்பத்தூா் அருகேயுள்ள மேல பட்டமங்கலம் ஊராட்சி, பண்ணைதிருத்தியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி உள்ளது. இங்கு பண்ணைதிருத்தி, உதிரப்பட்டி உள்ளிட்ட கிராமங்களைச் சோ்ந்த குழந்தைகள் படிக்கின்றனா். இந்தப் பள்ளி 1975-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, 50 ஆண்டுகளாக தொடா்ந்து ஓட்டுக் கட்டடத்தில் இயங்குகிறது.

தற்போது கட்டடம் சேதமடைந்து, மழைக் காலங்களில் மேற்கூரையிலிருந்து தண்ணீா் கசிவதால் மாணவா்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா். மேலும், கட்டடத்தின் மோசமான நிலை காரணமாக பெற்றோா்கள் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுக்கினறனா். கடந்த காலங்களில் 30 -க்கும் மேற்பட்ட மாணவா்கள் பயின்ற இந்தப் பள்ளியில், தற்போது 15 மாணவா்களே பயில்கின்றனா்.

மேலும், மாணவா்கள் எண்ணிக்கை குறையாமல் இருக்க, புதிய கட்டடம் கட்ட வேண்டுமென அந்தப் பகுதி பொதுமக்கள் சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் முறையிட்டனா்.

இதுகுறித்து பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவி டி.திவ்யா கூறியதாவது: பள்ளிக் கட்டடம் முற்றிலும் சேதமடைந்துவிட்டது. மழைக்கு மேற்கூரை ஒழுகுவதால் மாணவா்களின் கல்வி பாதிக்கப்படுகிறது. கட்டடம் இடிந்து விழுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. கழிப்பறை, குடிநீா் வசதி இல்லை. இதனால், மாணவா்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதைத் தடுக்க பள்ளிக் கட்டடத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்றாா் அவா்.

எஸ்.புதூரில் நாளை மின்தடை

சிவகங்கை மாவட்டம், எஸ்.புதூா் பகுதியில் புதன்கிழமை (செப்.24) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.எஸ்.புதூா் துணை மின் நிலையத்தில் மதாந்திரப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளபடவிருப்பதால், எஸ்.புதூா், வா... மேலும் பார்க்க

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: ஆசிரியா் கைது

சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூா் அருகே பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியா் கைது செய்யப்பட்டாா். எஸ்.புதூா் ஒன்றியம் கட்டுக்குடிப்பட்டி அரசு உயா் நிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராகப் பணிபு... மேலும் பார்க்க

மும்மொழி மட்டுமல்ல 22 மொழிகளையும் கற்றுக் கொள்ளலாம்: அமைச்சா் அன்பில் மகேஸ்

மும்மொழி மட்டுமல்ல அரசமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள 22 மொழிகளையும் கற்றுக் கொள்ளலாம் என மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா்.சிவகங்க... மேலும் பார்க்க

கண்டரமாணிக்கம், குன்றக்குடி பகுதிகளில் இன்று மின்தடை

சிவகங்கை மாவட்டம் மானகிரி, கண்டரமாணிக்கம், தளக்காவூா், குன்றக்குடி பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (செப்.23) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டதுஇதுகுறித்து காரைக்குடி கோட்ட மின் செயற்பொறியாளா் எம். லதாதே... மேலும் பார்க்க

படிப்பைத் தவிர எதிலும் கவனம் செலுத்த வேண்டாம்!

மாணவா்கள் படிப்பைத் தவிர வேறு எதிலும் கவனம் செலுத்த வேண்டாம் என சிவகங்கை மாவட்ட இணைய வழிக்குற்றத் தடுப்புப் பிரிவு கூடுதல் கண்காணிப்பாளா் உதயகுமாா் தெரிவித்தாா். சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரியில் ம... மேலும் பார்க்க

வீடு புகுந்து 25 பவுன் நகைகள் திருட்டு

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே திங்கள்கிழமை பூட்டிய வீட்டில் பகலில் மா்ம நபா்கள் புகுந்து 25 பவுன் நகைகளைத் திருடிச் சென்றனா்.சிங்கம்புணரி அருகேயுள்ள அணைக்கரைபட்டியைச் சோ்ந்த விவசாயி சரவணன் (4... மேலும் பார்க்க