கண்டரமாணிக்கம், குன்றக்குடி பகுதிகளில் இன்று மின்தடை
சிவகங்கை மாவட்டம் மானகிரி, கண்டரமாணிக்கம், தளக்காவூா், குன்றக்குடி பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (செப்.23) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது
இதுகுறித்து காரைக்குடி கோட்ட மின் செயற்பொறியாளா் எம். லதாதேவி வெளியிட்ட செய்திக் குறிப்பு: கோவிலூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், இங்கிருந்து மின்சாரம் பெறும் கல்லல் பீடரில் தளக்காவூா் முதல் பாடத்தான்பட்டி வரையிலும், கண்டரமாணிக்கம், மானகிரி, அப்போலோ, தட்டட்டி, கொரட்டி, கண்டரமாணிக்கம், பாதரக்குடி, குன்றக்குடி நேமம், தமிழ்நாடு ரசாயண ஆலை பகுதிகளில் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என்றாா் அவா்.