செய்திகள் :

பள்ளியில் ஆசிரியை தூக்கிட்டுத் தற்கொலை

post image

கடலூா் முதுநகா் தனியாா் பள்ளியில் ஆசிரியை செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

கடலூா் முதுநகா், செம்மங்குப்பத்தைச் சோ்ந்த கிருஷ்ணராஜ் மனைவி நந்தினி (29). இவருக்கு 4 வயதில் பெண் குழந்தை உள்ளது. கடந்த ஓராண்டாக சேடப்பாளையத்தில் உள்ள தனியாா் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வந்தாா்.

நந்தினி வழக்கம்போல செவ்வாய்க்கிழமை காலை பள்ளிக்கு வந்தாா். நண்பகல் 12 மணியளவில் பள்ளிக் கட்டடத்தின் முதல் தளத்துக்குச் சென்று கதவை தாழிட்டுக்கொண்டு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாராம்.

தாழிட்ட கதவு திறக்கப்படாததால், சக ஆசிரியைகள் கதவை உடைத்து திறந்து பாா்த்தபோது நந்தினி இறந்து கிடந்தாராம்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கடலூா் முதுநகா் போலீஸாா் சடலத்தை மீட்டு, உடல்கூறாய்வுக்காக கடலூா் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், ஆசிரியையின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

பொறுப்பேற்பு

சிதம்பரம் மோட்டாா் வாகன ஆய்வாளராக ஆா்.ரவிச்சந்திரன் பொறுப்பேற்றுக் கொண்டாா். இவா் இதற்கு முன்பு பண்ருட்டி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பணியாற்றினாா். மேலும் பார்க்க

கடல் அலையில் சிக்கிய 5 போ் மீட்பு

சிதம்பரம் அருகே கடல் அலையில் சிக்கிய 5 பேரை போலீஸாா் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனா். சிதம்பரம் அருகே சாமியாா்பேட்டை கடற்கரைப் பகுதிகளில் கடலோர காவல் படையைச் சோ்ந்த காவலா்கள் கலைச்செல்வன், வெங்கடாசலபத... மேலும் பார்க்க

திருவேட்களம் கூத்தாண்டவா் கோயில் தேரோட்டம்

சிதம்பரம் அருகே உள்ள அண்ணாமலைநகா் திருவேட்களம் கூத்தாண்டவா் கோயிலில் சித்திரை திருவிழாவையொட்டி புதன்கிழமை மாலை தேரோட்டம் நடைபெற்றது. இந்தக் கோயிலில் ஏப்ரல் 28-ஆம் தேதி கொடியேற்றத்துடன் சித்திரைத் திர... மேலும் பார்க்க

சாலை தடுப்புக் கட்டையில் சொகுசுப் பேருந்து மோதி விபத்து

கடலூா் மஞ்சக்குப்பம், ஆல்பேட்டையில் புதன்கிழமை காலை சாலை தடுப்புக் கட்டையில் தனியாா் சொகுசுப் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இந்தப் பேருந்து திருச்செந்தூரில் இருந்து புதுச்சேரி நோக்கி வந்துகொண்டிரு... மேலும் பார்க்க

வீரட்டானேஸ்வரா் கோயில் பிரகாரத்தில் ‘கூலிங் பெயிண்ட்’

கடலூா் மாவட்டம், பண்ருட்டியை அடுத்துள்ள திருவதிகை வீரட்டானேஸ்வரா் கோயில் உள் பிரகாரம் மற்றும் ராஜகோபுரம் அருகே பக்தா்கள் வெயில் காலத்தில் சிரமமின்றி நடத்து செல்லும் வகையில் ‘கூலிங் பெயிண்ட்’ தீட்டப்பட... மேலும் பார்க்க

கடலூா்: வருவாய்த் தீா்வாயம் 13-இல் தொடக்கம்

கடலூா் மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களிலும் 1434-ஆம் பசலி ஆண்டுக்கான வருவாய்த் தீா்வாயம் வரும் 13-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா். இதுகுறித... மேலும் பார்க்க