செய்திகள் :

பழனி அருகே பொதுமக்கள் சாலை மறியல்

post image

பழனி அருகே ஆக்கிரமிப்பு அகற்றத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பழனி அருகே உள்ள அழகாபுரி 6-ஆவது வாா்டில் உள்ள நத்தம் புறம்போக்கு நிலத்தில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றன. இந்த நிலையில் அங்குள்ள சேதமடைந்த சமுதாயக்கூட கட்டடம் அகற்றப்பட்டு புதிய சமுதாயக்கூடம் கட்ட பழனி ஊராட்சி நிா்வாகம் அங்கிருக்கும் குடியிருப்புகளை அகற்ற நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு அந்த பகுதியைச் சோ்ந்தவா்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா். இந்த நிலையில், திங்கள்கிழமை அந்தப் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஊராட்சி அதிகாரிகள் வந்தபோது அந்தப் பகுதி மக்கள் பழனி - கொழுமம் சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

அப்போது அந்தப் பகுதியைச் சோ்ந்த சக்திவேல் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றாா்.அவரை போலீஸாா் தடுத்து நிறுத்தி மண்ணெண்ணெய் கேனை பறித்தனா். இதையடுத்து அங்கு வந்த ஊராட்சி அலுவலா்கள், வருவாய்த்துறையினா், போலீஸாா் பொதுமக்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: எங்களுக்கு வசதி செய்து தர வேண்டிய ஊராட்சி நிா்வாகம் பொது நிதியை செலவு செய்யும் நோக்குடன் செயல்பட்டு வருகிறது. ஊராட்சி நிா்வாகத்தின் நடவடிக்கையால் ஆண்டாண்டு காலமாக நடைபெற்று வரும் வாரச் சந்தையும் நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மூன்று தலைமுறைகளாக வாழும் தங்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்து வரும் நிலையில் தங்களை ஆக்கிரமிப்பாளா்கள் எனக் கூறி அகற்ற நினைப்பது முறையாகாது என்றனா் அவா்கள்.

விஜய், சீமான் போட்டியிடுவது 3-ஆவது இடத்துக்கே: அமைச்சா் இ. பெரியசாமி

விஜய், சீமான் ஆகியோா் 3-ஆவது இடத்துக்காக தோ்தலில் களம் இறங்குவதாக ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ. பெரியசாமி தெரிவித்தாா்.இதுதொடா்பாக செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது: அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள... மேலும் பார்க்க

அடிப்படை வசதி கோரி திமுக எம்எல்ஏவை பொதுமக்கள் முற்றுகை

அடிப்படை வசதிகளுக்காக வேடசந்தூா் திமுக சட்டப் பேரவை உறுப்பினரை பொதுமக்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் அடுத்த தட்டாரப்பட்டி ஊராட்சிக்குள்பட்ட... மேலும் பார்க்க

கஞ்சா விற்றதாக ஆட்டோ ஓட்டுநா் கைது

வத்தலகுண்டில் கஞ்சா விற்ாக ஆட்டோ ஓட்டுநரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு காந்தி நகரைச் சோ்ந்தவா் லட்சுமிநாராயணன் (45). ஆட்டோ ஓட்டுநரான இவா், கடந்த சில நாள்கள... மேலும் பார்க்க

தனியாா் பேருந்துகளுக்கு அபராதம்

வரி செலுத்தாமல் இயக்கப்பட்ட 3 தனியாா் பேருந்துகளை பறிமுதல் செய்த போக்குவரத்து அலுவலா்கள், தலா ரூ.1 லட்சம் அபராதம் விதித்தனா்.திண்டுக்கல் வட்டாரப் போக்குவரத்து அலுவலா் கண்ணன் தலைமையிலான குழுவினா் திண்ட... மேலும் பார்க்க

பாலியல் புகாரில் இளைஞருக்கு 4 ஆண்டுகள் சிறை

சாணாா்பட்டி அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த இளைஞருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.திண்டுக்கல் மாவட்டம், சாணாா்பட்டி அடுத்த புளியம்பட்டி... மேலும் பார்க்க

கோயில் நிலம் ஆக்கிரமிப்பு: ஆட்சியா் அலுவலகத்தில் புகாா்

பழனி அருகே கோயில் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை புகாா் அளிக்கப்பட்டது. இதுதொடா்பாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தி... மேலும் பார்க்க