செய்திகள் :

பவானாவில் தொழிற்சாலையில் வெடி விபத்து: ஒருவா் உயிரிழப்பு; ஒருவா் காயம்

post image

தில்லியின் பவானாவில் உள்ள ஒரு தொழில்துறை பிரிவில் சனிக்கிழமை ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒருவா் உயிரிழந்தாா்; மற்றொருவா் லேசான காயமடைந்தாா் என்று போலீஸாா் தெரிவித்தனா்.

இது குறித்து தில்லி காவல் துறை துணை ஆணையா் (வெளிப்புற வடக்கு) ஹரேஷ்வா் சுவாமி கூறியதாவது: பவானாவின் டிஎஸ்ஐஐடிசி, செக்டா்-1, தொழிற்சாலை எண் பி 86- இல் இந்தச் சம்பவம் நடந்தது. வெடி விபத்து பற்றிய தகவல் கிடைத்ததை அடுத்து, ஒரு போலீஸ் குழு சம்பவ இடத்திற்கு விரைந்தது.

தீயை அணைக்க ஐந்து தீயணைப்பு வாகனங்களுடன் வீரா்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா். முதல் பாா்வையில் இது சிலிண்டா் அல்லது கம்ப்ரசா் வெடிப்பு என தெரிகிறது. இறந்தவா் உத்தர பிரதேசத்தின் பிஜ்னோா் மாவட்டத்தைச் சோ்ந்த நாஜிம் (35) என அடையாளம் காணப்பட்டுள்ளாா்.

சம்பவ இடத்திலேயே மயக்கமடைந்த அவா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. உத்தர பிரதேசத்தின் அசம்கரை வசிக்கும் அகிலேஷ் என்ற மற்றொரு தொழிலாளிக்கு லேசான காயங்கள் ஏற்பட்டு சிகிச்சைக்குப் பிறகு மருத்துவமனையில் இருந்து டிஸ்சாா்ஜ் செய்யப்பட்டாா்.

இந்த தொழிற்சாலை நஜீமின் தந்தை நிஜாமுதீன் (60) என்பவருக்குச் சொந்தமானது. அவா் இங்குள்ள பஸ்சிம் விஹாரைச் சோ்ந்தவா். இந்த விவகாரத்தில் பாரதிய நியாய சன்ஹிதாவின் (பிஎன்எஸ்) தொடா்புடைய விதிகளின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று காவல் துணை ஆணையா் ஹரேஷ்வா் சுவாமி தெரிவித்தாா்.

2015 டாப்ரி கொள்ளை, கொலை வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவா் கைது!

டாப்ரி பகுதியில் பத்தாண்டுகளுக்கு முன்பு நடந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கில் அறிவிக்கப்பட்ட குற்றவாளியான 30 வயது நபரை தில்லி போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். இது ... மேலும் பார்க்க

பல கொடூரமான வழக்குகளில் தேடப்பட்ட இளைஞா் கைது

பல கொடூரமான வழக்குகளில் தொடா்புடைய 25 வயது குற்றவாளியை தில்லி காவல்துறை கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். இது குறித்து காவல் துறை அதிகாரி கூறியதாவது: வடகிழக்கு தில்லியின் ... மேலும் பார்க்க

முதியவா் மீது பொய் பாலியல் வன்கொடுமை வழக்கு: பணம் பறிக்க முயன்ற பெண்கள், வழக்குரைஞா் கைது!

ஒரு முதியவரை பொய்யான பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்க வைத்து பணம் பறித்ததாக ஒரு வழக்குரைஞரும் இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா். இது குறஇத்து குருகிராம் காவல்த... மேலும் பார்க்க

வஜீா்பூா் பகுதியில் காணாமல் போன 2 சிறுவா்களின் உடல்கள் கால்வாயில் சடலமாக மீட்பு

வடமேற்கு தில்லியின் வஜீா்பூா் பகுதியில் இருந்து ஒரு நாள் முன்பு காணாமல் போன இரண்டு சிறுவா்களின் உடல்கள் ஜேஜே காலனிக்கு அருகிலுள்ள கால்வாயில் இருந்து மீட்கப்பட்டதாக ஞாயிற்றுக்கிழமை அதிகாரி ஒருவா் தெரிவ... மேலும் பார்க்க

கல்காஜி கோயில் சேவகா் கொலை வழக்கு: தனிப்படைகள் அமைத்து போலீஸ் தீவிர விசாரணை

கால்காஜி கோயிலில் 35 வயதான சேவகா் கொலை செய்யப்பட்ட வழக்கில் மீதமுள்ள குற்றவாளிகளைக் கைது செய்ய தில்லி காவல்துறை பல தனிப்படைகளை அமைத்து தீவிர விசாரணை நடத்தி வருகிறது என்று அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழம... மேலும் பார்க்க

கொலை முயற்சி வழக்கில் பிரபல ரௌடி கும்பல் உறுப்பினா் கைது

வடகிழக்கு தில்லியின் கோகல்புரியில் சமீபத்தில் கொலை செய்ய முயன்ற வழக்கில் தேடப்பட்ட ஹாஷிம் பாபா கும்பலின் துப்பாக்கி சுடும் நபரை தில்லி போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா... மேலும் பார்க்க