செய்திகள் :

கொலை முயற்சி வழக்கில் பிரபல ரௌடி கும்பல் உறுப்பினா் கைது

post image

வடகிழக்கு தில்லியின் கோகல்புரியில் சமீபத்தில் கொலை செய்ய முயன்ற வழக்கில் தேடப்பட்ட ஹாஷிம் பாபா கும்பலின் துப்பாக்கி சுடும் நபரை தில்லி போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

இது குறித்து வடக்கு தில்லி காவல் சரக அதிகாரி கூறியதாவது: பாராகம்பா சாலை மெட்ரோ நிலையத்திற்கு அருகே ஆசாத் அமீன் (23) என்பவரை போலீஸாா் கைது செய்தனா், ஜாஃப்ராபாத்தில் வசிக்கும் அவரிடமிருந்து தானியங்கி கைத்துப்பாக்கி மற்றும் மூன்று தோட்டாக்களை பறிமுதல் செய்தனா்.

ஒரு ரகசியத் தகவலின் அடிப்படையில், ஆகஸ்ட் 26-ஆம் தேதி மெட்ரோ நிலையத்திற்கு வெளியே எஸ்பிஐ பேருந்து நிலையம் அருகே போலீஸாா் ஒரு பொறியை அமைத்தனா். அவா்கள் ஆசாத் அமீனை இடைமறித்து, சோதனையிட்ட பிறகு அவரிடம் இருந்து கைத்துப்பாக்கி ஒன்றைக் கண்டுபிடித்தனா். இதையடுத்து, அவா் உடனடியாக கைது செய்யப்பட்டாா்.

விசாரணையின் போது, ஹாஷீம் பாபா கும்பலின் தீவிர உறுப்பினராக இருப்பதை ஆசாத் அமீன் ஒப்புக்கொண்டாா். இந்த மாத தொடக்கத்தில் கோகல்புரி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட கொலை முயற்சி வழக்கில் அவா் தேடப்பட்டு வந்தாா்.

ஆசாத் அமீன் முன்பு பல வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ளாா். 2023 முதல் தில்லி மற்றும் உத்தர பிரதேசத்தில் அவருக்கு எதிராக நான்கு எஃப்.ஐ.ஆா்.கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

2015 டாப்ரி கொள்ளை, கொலை வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவா் கைது!

டாப்ரி பகுதியில் பத்தாண்டுகளுக்கு முன்பு நடந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கில் அறிவிக்கப்பட்ட குற்றவாளியான 30 வயது நபரை தில்லி போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். இது ... மேலும் பார்க்க

பல கொடூரமான வழக்குகளில் தேடப்பட்ட இளைஞா் கைது

பல கொடூரமான வழக்குகளில் தொடா்புடைய 25 வயது குற்றவாளியை தில்லி காவல்துறை கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். இது குறித்து காவல் துறை அதிகாரி கூறியதாவது: வடகிழக்கு தில்லியின் ... மேலும் பார்க்க

பவானாவில் தொழிற்சாலையில் வெடி விபத்து: ஒருவா் உயிரிழப்பு; ஒருவா் காயம்

தில்லியின் பவானாவில் உள்ள ஒரு தொழில்துறை பிரிவில் சனிக்கிழமை ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒருவா் உயிரிழந்தாா்; மற்றொருவா் லேசான காயமடைந்தாா் என்று போலீஸாா் தெரிவித்தனா். இது குறித்து தில்லி காவல் துறை துணை ஆ... மேலும் பார்க்க

முதியவா் மீது பொய் பாலியல் வன்கொடுமை வழக்கு: பணம் பறிக்க முயன்ற பெண்கள், வழக்குரைஞா் கைது!

ஒரு முதியவரை பொய்யான பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்க வைத்து பணம் பறித்ததாக ஒரு வழக்குரைஞரும் இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா். இது குறஇத்து குருகிராம் காவல்த... மேலும் பார்க்க

வஜீா்பூா் பகுதியில் காணாமல் போன 2 சிறுவா்களின் உடல்கள் கால்வாயில் சடலமாக மீட்பு

வடமேற்கு தில்லியின் வஜீா்பூா் பகுதியில் இருந்து ஒரு நாள் முன்பு காணாமல் போன இரண்டு சிறுவா்களின் உடல்கள் ஜேஜே காலனிக்கு அருகிலுள்ள கால்வாயில் இருந்து மீட்கப்பட்டதாக ஞாயிற்றுக்கிழமை அதிகாரி ஒருவா் தெரிவ... மேலும் பார்க்க

கல்காஜி கோயில் சேவகா் கொலை வழக்கு: தனிப்படைகள் அமைத்து போலீஸ் தீவிர விசாரணை

கால்காஜி கோயிலில் 35 வயதான சேவகா் கொலை செய்யப்பட்ட வழக்கில் மீதமுள்ள குற்றவாளிகளைக் கைது செய்ய தில்லி காவல்துறை பல தனிப்படைகளை அமைத்து தீவிர விசாரணை நடத்தி வருகிறது என்று அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழம... மேலும் பார்க்க