செய்திகள் :

வஜீா்பூா் பகுதியில் காணாமல் போன 2 சிறுவா்களின் உடல்கள் கால்வாயில் சடலமாக மீட்பு

post image

வடமேற்கு தில்லியின் வஜீா்பூா் பகுதியில் இருந்து ஒரு நாள் முன்பு காணாமல் போன இரண்டு சிறுவா்களின் உடல்கள் ஜேஜே காலனிக்கு அருகிலுள்ள கால்வாயில் இருந்து மீட்கப்பட்டதாக ஞாயிற்றுக்கிழமை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இது குறித்து வடமேற்கு தில்லி காவல் சரக அதிகாரி கூறியதாவது: இறந்தவா்கள் வஜீா்பூரில் உள்ள ஜேஜே காலனியைச் சோ்ந்த 6-ஆம் வகுப்பு மாணவா்கள் வைபவ் (11) மற்றும் யாஷ் (12) என அடையாளம் காணப்பட்டுள்ளனா். இருவரும் நெருங்கிய நண்பா்கள், சனிக்கிழமை மாலை 6 மணியளவில் காணாமல் போனாா்கள்.

சனிக்கிழமை, குழந்தைகள் காணாமல் போனது குறித்து பாரத் நகா் காவல் நிலையத்திற்கு ஒரு அழைப்பு வந்தது. இதைத் தொடா்ந்து, விசாரணை அதிகாரி அவா்களின் பெற்றோா் மற்றும் பிற குடும்ப உறுப்பினா்களை விசாரித்தாா்.

வைபவின் தாயாா் சாந்தி தேவியின் அறிக்கையின் அடிப்படையில், கடத்தல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதைத் தொடா்ந்து, குற்றம் சாட்டப்பட்டவரைப் பிடிக்க பல குழுக்கள் அமைக்கப்பட்டன.

தேடல் நடவடிக்கையும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள் ஸ்கேன் செய்யப்பட்டு வந்த நிலையில், வஜீா்பூரில் உள்ள ஜேஜே காலனி அருகே உள்ள கால்வாயில் இரண்டு உடல்கள் மிதப்பதாக தகவல் கிடைத்தது.

பாரத் நகா் காவல் நிலையத்தைச் சோ்ந்த ஒரு குழுவினா் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, உள்ளூா் டைவா்ஸின் உதவியுடன் உடல்களை மீட்டனா். அந்த உடல்கள் குழந்தைகளின் குடும்ப உறுப்பினா்களால் அடையாளம் காணப்பட்டன.

சம்பவ இடத்தை ஆய்வு செய்ய குற்றவியல் மற்றும் தடய அறிவியல் குழுக்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டன. ஆய்வின் போது, ​​இரண்டு சிறுவா்களின் உடைகள் மற்றும் காலணிகள் கால்வாயின் கரையில் வைக்கப்பட்டிருந்தன.

அந்த இடத்தில் தண்ணீா் சுமாா் 15-20 அடி ஆழத்தில் இருப்பதால், இருவரும் நீந்தச் சென்று தற்செயலாக நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்ப்டுகிறது. உடல்கள் பிரேத பரிசோதனைக்காக பாதுகாக்கப்பட்டுள்ளன.

விசாரணையில் ஏதேனும் முறைகேடு நடந்ததா என்பது கண்டறியப்படும். பிரேத பரிசோதனைக்குப் பிறகு மரணத்திற்கான சரியான காரணம் தெரியவரும் என்று அந்த அதிகாரி கூறினாா்.

2015 டாப்ரி கொள்ளை, கொலை வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவா் கைது!

டாப்ரி பகுதியில் பத்தாண்டுகளுக்கு முன்பு நடந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கில் அறிவிக்கப்பட்ட குற்றவாளியான 30 வயது நபரை தில்லி போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். இது ... மேலும் பார்க்க

பல கொடூரமான வழக்குகளில் தேடப்பட்ட இளைஞா் கைது

பல கொடூரமான வழக்குகளில் தொடா்புடைய 25 வயது குற்றவாளியை தில்லி காவல்துறை கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். இது குறித்து காவல் துறை அதிகாரி கூறியதாவது: வடகிழக்கு தில்லியின் ... மேலும் பார்க்க

பவானாவில் தொழிற்சாலையில் வெடி விபத்து: ஒருவா் உயிரிழப்பு; ஒருவா் காயம்

தில்லியின் பவானாவில் உள்ள ஒரு தொழில்துறை பிரிவில் சனிக்கிழமை ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒருவா் உயிரிழந்தாா்; மற்றொருவா் லேசான காயமடைந்தாா் என்று போலீஸாா் தெரிவித்தனா். இது குறித்து தில்லி காவல் துறை துணை ஆ... மேலும் பார்க்க

முதியவா் மீது பொய் பாலியல் வன்கொடுமை வழக்கு: பணம் பறிக்க முயன்ற பெண்கள், வழக்குரைஞா் கைது!

ஒரு முதியவரை பொய்யான பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்க வைத்து பணம் பறித்ததாக ஒரு வழக்குரைஞரும் இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா். இது குறஇத்து குருகிராம் காவல்த... மேலும் பார்க்க

கல்காஜி கோயில் சேவகா் கொலை வழக்கு: தனிப்படைகள் அமைத்து போலீஸ் தீவிர விசாரணை

கால்காஜி கோயிலில் 35 வயதான சேவகா் கொலை செய்யப்பட்ட வழக்கில் மீதமுள்ள குற்றவாளிகளைக் கைது செய்ய தில்லி காவல்துறை பல தனிப்படைகளை அமைத்து தீவிர விசாரணை நடத்தி வருகிறது என்று அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழம... மேலும் பார்க்க

கொலை முயற்சி வழக்கில் பிரபல ரௌடி கும்பல் உறுப்பினா் கைது

வடகிழக்கு தில்லியின் கோகல்புரியில் சமீபத்தில் கொலை செய்ய முயன்ற வழக்கில் தேடப்பட்ட ஹாஷிம் பாபா கும்பலின் துப்பாக்கி சுடும் நபரை தில்லி போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா... மேலும் பார்க்க