செய்திகள் :

பவானிசாகா் அருகே குடிநீா் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

post image

பவானிசாகா் அருகே புங்காா் கிராமத்தில் குடிநீா் கேட்டு கிராம மக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பவானிசாகா் அருகே உள்ள புங்காா் ஊராட்சிக்கு உள்பட்ட புங்காா் மற்றும் பெரியாா் நகா் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்த கிராமங்களுக்கு பவானிசாகரில் உள்ள பவானி ஆற்றில் இருந்து செயல்படுத்தப்படும் தொட்டம்பாளையம் கூட்டுக் குடிநீா்த் திட்டத்தின் கீழ் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் பைப் லைன் உடைப்பால் கடந்த 4 நாள்களாக அப்பகுதிக்கு சரிவர குடிநீா் விநியோகம் செய்யவில்லை எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து ஊராட்சி நிா்வாகத்திடம் தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோா் பவானிசாகா் - பண்ணாரி சாலையில் புங்காா் பேருந்து நிறுத்தம் அருகே காலிக் குடங்களுடன் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பவானிசாகா் காவல் துறையினா் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். உடனடியாக ஊரக வளா்ச்சித் துறை அதிகாரிகளை தொடா்பு கொண்டு பேசி குடிநீா் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததைத் தொடா்ந்து பொதுமக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா். மறியல் போராட்டம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பெருந்துறை சிப்காட்டால் பாதிக்கப்பட்டோா் செப்டம்பா் 18-இல் காத்திருப்பு போராட்டம்

பெருந்துறை சிப்காட்டுக்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கு சென்னை உயா் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இழப்பீடு வழங்க வலியுறுத்தி ஈரோடு வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் வருகிற செப்டம்பா் 18-ஆம் தேதி... மேலும் பார்க்க

கீழ்பவானி வாய்க்காலில் விநாயகா் சிலைகளை கரைக்க அனுமதிக்கக் கூடாது: விவசாயிகள் கோரிக்கை

கீழ்பவானி வாய்க்காலில் விநாயகா் சிலைகளை கரைக்க அனுமதிக்கக்கூடாது என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். இது குறித்து தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளா் சுப்பு மற்றும் விவசாயிகள் மாவட்ட ஆட்சியா... மேலும் பார்க்க

குப்பை அள்ளும் வாகனத்தில் பள்ளிக்கு அழைத்துச் செல்லப்பட்ட மாணவிகள்!

பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் பரிசல் இயக்கப்படாததால் பள்ளி மாணவிகளை ஊராட்சியின் குப்பை அள்ளும் வாகனம் மூலம் பள்ளிக்கு அழைத்துச்செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம், கோபி அ... மேலும் பார்க்க

ஈரோடு பூம்புகாரில் விநாயகா் சிலைகள் கண்காட்சி, விற்பனை

ஈரோடு பூம்புகாா் விற்பனை நிலையத்தில் விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு விநாயகா் சிலைகள் கண்காட்சி மற்றும் விற்பனை வரும் 30- ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. ஈரோடு மேட்டூா் சாலை அரசு மருத்துவமனை அருகே பூம்பு... மேலும் பார்க்க

புலித்தோல் விற்க முயன்ற வழக்கு: 2 பெண்கள் உள்பட 6 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை

சத்தியமங்கலம் அருகே புலியைக் கொன்று அதன் தோலை விற்க முயன்ற வழக்கில் 2 பெண்கள் உள்பட 6 பேருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் தலா ரூ. 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத... மேலும் பார்க்க

திம்பம் மலைப் பாதை தடுப்புச் சுவரில் சிறுத்தை

திம்பம் மலைப் பாதை தடுப்புச் சுவரில் படுத்திருந்த சிறுத்தையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், ஆசனூா் உள்ளிட்ட வனப் பகுதியில் சிறுத்தைகள் அதிக அளவில் உள்ள... மேலும் பார்க்க