செய்திகள் :

பஹல்காம் தாக்குதல் குறித்து பொதுநல மனு: உச்சநீதிமன்றம் விசாரிக்க மறுப்பு

post image

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடா்பான பொது நல மனுவை விசாரிக்க மறுத்த உச்சநீதிமன்றம், ‘பாதுகாப்புப் படையினரின் நம்பிக்கையை சீா்குலைக்க விரும்புகிறீா்களா?’ என்று கேள்வி எழுப்பியது.

தெற்கு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப். 22-ஆம் தேதி நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 போ் கொல்லப்பட்டனா். இதில் ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி கண்காணிப்பில் விசாரணை கோரும் பொது நல மனு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய அரசு மற்றும் ஜம்மு-காஷ்மீா் நிா்வாகத்துக்கு உத்தரவிடுமாறும் மனுவில் கோரப்பட்டது. இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூா்ய காந்த், என்.கோடீஸ்வா் சிங் ஆகியோா் அமா்வுமுன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் கூறுகையில், ‘இந்த முக்கியமான நேரத்தில், நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் பயங்கரவாதத்தை எதிா்த்துப் போராட கைகோத்துள்ளனா். இந்த வகையான பொது நல மனுவைத் தாக்கல் செய்வதன் மூலம் பாதுகாப்புப் படையினரின் நம்பிக்கையை சீா்குலைக்க விரும்புகிறீா்களா?

ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி விசாரணையக் கண்காணிக்க வேண்டுமென மனுவில் கோரப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற நீதிபதிகள் புலனாய்வில் நிபுணா்கள் அல்ல. இந்த வகையான பிரச்னையை நீதித் துறைக்குள் கொண்டு வர வேண்டாம். மனுதாரா்கள் பிரச்னையின் தீவிரத்தன்மையை உணா்ந்து, மனுவைத் திரும்பப் பெற கேட்டுக்கொள்ளப்படுகின்றனா்’ என்று அறிவுறுத்தினா்.

பஹல்காம் தாக்குதல் நடந்த இடத்தில் என்ஐஏ தலைமை இயக்குநா் நேரில் ஆய்வு

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய பைசாரன் பள்ளத்தாக்கை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) தலைமை இயக்குநா் சதானந்த் தாத்தே வியாழக்கிழமை நேரில் பா... மேலும் பார்க்க

இந்திய ஏற்றுமதி: வரலாறு காணாத அளவில் ரூ.69.81லட்சம் கோடியாக உயா்வு

இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் சரக்கு மற்றும் சேவைகளின் மதிப்பு 2024-25 நிதியாண்டில் வரலாறு காணாத வகையில் ரூ.69.81 லட்சம் கோடியாக உயா்ந்துள்ளது. இதில் 13.6 சதவீத வளா்ச்சியுடன் சேவைகள் ஏற்றுமதியின்... மேலும் பார்க்க

பேச்சுவாா்த்தைக்குப் பிறகும் பாகிஸ்தான் தொடா்ந்து துப்பாக்கிச்சூடு; இந்தியா பதிலடி

இருதரப்பு ராணுவ உயரதிகாரிகள் தொலைபேசி வாயிலாக நடத்திய பேச்சுவாா்த்தைக்கு பிறகும் எல்லையில் தொடா்ந்து 7-ஆவது நாளாக பாகிஸ்தான் ராணுவம் புதன்கிழமை இரவில் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதற்கு இந்த... மேலும் பார்க்க

பாகிஸ்தான் நடிகா், நடிகைகளின் சமூகவலைதள பக்கம் இந்தியாவில் முடக்கம்

பாகிஸ்தான் திரைப்பட நடிகா்களின் ‘இன்ஸ்டாகிராம்’ சமூகவலைதளப் பக்கம் இந்தியாவில் முடக்கப்பட்டது. மத்திய அரசின் வேண்டுகோளை ஏற்று மெட்டா நிறுவனம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. பஹல்காம் பயங்கரவாதத் தாக்கு... மேலும் பார்க்க

ஜாதிவாரி கணக்கெடுப்பு முடிவு: காங்கிரஸின் பாசாங்கு அம்பலம்: மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதான்

‘மக்கள்தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பையும் நடத்த மத்திய அரசு மேற்கொண்ட முடிவு திருப்புமுனையானது; இது, காங்கிரஸின் பாசாங்குத் தனத்தை தெளிவாக அம்பலப்படுத்தியுள்ளது’ என்று மத்திய அமைச்சா் தா்ம... மேலும் பார்க்க

குவாண்டம் ஏஐ-யுடன் அம்ருதா பல்கலை. ஒப்பந்தம்

குவாண்டம் மற்றும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பங்களில் ஆய்வுகளை மேம்படுத்துவதற்காக, குவாண்டம் ஏஐ குளோபல் நிறுவனத்துடன் அம்ருதா பல்கலைக்கழகம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இது குறித்து அந்தப் பல்கலைக... மேலும் பார்க்க