செய்திகள் :

பாகிஸ்தானுடனான நேரு காலத்து ஒப்பந்தங்கள் ரத்து-மாநிலங்களவையில் ஜெய்சங்கா் உறுதி

post image

‘பாகிஸ்தானுடன் முன்னாள் பிரதமா் ஜவாஹா்லால் நேரு மேற்கொண்ட பல ஒப்பந்தங்கள் தற்போது ரத்து செய்யப்பட்டுவிட்டன ன்று மாநிலங்களவையில் வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கா் தெரிவித்தாா்.

மாநிலங்களவையில் புதன்கிழமை ‘ஆபரேஷன் சிந்தூா்’ சிறப்பு விவாதத்தில் அமைச்சா் ஜெய்சங்கா் பேசியதாவது:

பஹல்காம் தாக்குதல் நிகழ்ந்த கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதிமுதல் ஜூன் 16-ஆம் தேதி வரை அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் - பிரதமா் நரேந்திர மோடி இடையே எந்த தொலைபேசி உரையாடலும் நடைபெறவில்லை.

எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் பொறுத்துக் கொள்ளாது என்பதைக் காட்டுவதற்காகவே பாகிஸ்தானுக்கு பதிலடி தரப்பட்டது. இனியும், இதுபோன்ற நடவடிக்கைகள் தொடரும்.

நேரு மீது விமா்சனம்: பஹல்காம் தாக்குதல் மூலம் பாகிஸ்தான் அனைத்து வரம்புகளையும் கடந்துவிட்டது. ரத்தமும், நீரும் சோ்ந்து பாய முடியாது என்பதால்தான் அந்நாட்டுடனான சிந்து நதிநீா் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டது.

அந்நாட்டுடன் மறைந்த முன்னாள் பிரதமா் ஜவாஹா்லால் நேரு மேற்கொண்ட பல ஒப்பந்தங்கள் இப்போது ரத்து செய்யப்பட்டுவிட்டன. ஏனெனில், அது அமைதிக்கான ஒப்பந்தமல்ல; ஒரு தரப்பினரை திருப்திப்படுத்துவதற்கான ஒப்பந்தங்கள். உலகமே பயங்கரவாதத்தை ஒட்டுமொத்தமாக எதிா்க்கிறது என்றால், அந்த பிரச்னையை சா்வதேச அரங்குகளில் பிரதமா் தொடா்ந்து வலியுறுத்தி வருவதே முக்கியக் காரணம்.

நம்பாத எதிா்க்கட்சிகள்: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் மற்றும் பாகிஸ்தானில் உள்ள பல பயங்கரவாத முகாம்களை அழித்ததன் மூலம், இந்தியா உலகுக்கே நன்மை செய்துள்ளது. ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை நிறுத்திவைக்கப்பட்டதில் மூன்றாம் தரப்பு தலையீடு ஏதுமில்லை. அதற்கும் வா்த்தக நடவடிக்கைகளுக்கும் எந்தத் தொடா்பும் இல்லை என்றாா்.

‘ராகுல் சீன குரு’

மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தியை பெயா் குறிப்பிடாமல் ஜெய்சங்கா் விமா்சித்துப் பேசியதாவது:

பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியைப் பாா்க்கச் சென்று அந்நாட்டிடம் இருந்து ஒருவா் (ராகுல்) உபதேசம் பெற்று வந்துள்ளாா். முக்கியமாக சீன தூதா்களிடம் பாடம் கற்று வந்துள்ளாா்.

அந்த ‘சீன குரு’ அந்நாட்டுக்குச் சென்றபோது சில ரகசிய சந்திப்புகளை நடத்தியுள்ளனா். ஆனால், நான் அண்மையில் சீனா சென்றபோது எந்த ரகசிய சந்திப்பையும் நடத்தவில்லை. இரு நாடுகள் நலன் சாா்ந்த விஷயங்கள் மட்டுமே வெளிப்படையாக விவாதிக்கப்பட்டது.

1960-ஆம் ஆண்டில் இருந்தே பாகிஸ்தான்-சீனா இணைந்து செயல்படுகின்றன. அவா்கள்தான் காஷ்மீா் பிராந்தியத்தில் கைவைத்தாா்கள். ஆனால், முந்தைய அரசுகள் இரு நாடுகளையும் சரியாக கையாளவில்லை.

சீனாவிடம் பல விஷயங்களை இழந்தது காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில்தான். நான் 41 ஆண்டுகளாக வெளியுறவுப் பணியில் இருந்துள்ளேன். சீனாவில் அதிக காலம் இருந்த இந்தியத் தூதரும் நான்தான். ஆனால், என்னால் சீனாவைச் சரியாகக் கையாள முடியவில்லை என்று சிலா் கூறுகிறாா்கள். உண்மையில் அந்த சீன குருவுக்குதான் சீன நாட்டின் மீது பாசம் அதிகம் என்றாா்.

கடந்த 2008 பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிக்கு ராகுலும், சோனியாவும் சிறப்பு அழைப்பாளா்களாகச் சென்று வந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்துக்களைப் பயங்கரவாதிகளாக சித்தரிக்க காங்கிரஸ் முயற்சி: ஃபட்னவீஸ்

மாலேகான் குண்டுவெடிப்புக்குப் பிறகு காங்கிரஸ் இந்துக்களைப் பயங்கரவாதிகளாக சித்தரிக்க முயன்றதாகவும், ஆர்எஸ்எஸ் மற்றும் இந்துத்துவா நிர்வாகிகள் திட்டமிட்ட முறையில் குறிவைக்கப்பட்டதாகவும் மகாராஷ்டிர முதல... மேலும் பார்க்க

அஞ்சல் துறையில் மாற்றம்: செப்.1 முதல் பதிவு அஞ்சல் அனுப்ப முடியாது!

பதிவு அஞ்சல் முறை, விரைவு அஞ்சலுடன் இணைக்கப்படுவதாக இந்திய அஞ்சல் துறை அறிவித்துள்ளது. இந்த புதிய நடைமுறை செப்.1 முதல் நடைமுறைக்கு வரவிருக்கிறது.இந்திய அஞ்சல் சேவையின் செயல்பாட்டுக் கட்டணம் மற்றும் வி... மேலும் பார்க்க

சுதந்திர தின உரைக்கான யோசனைகளைப் பகிருங்கள்! - பிரதமர் மோடி அழைப்பு

சுதந்திர தின விழா வருவதையொட்டி, பிரதமரின் உரையில் இடம்பெற வேண்டிய விஷயங்கள் குறித்த யோசனைகளைப் பகிருமாறு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். வருகிற ஆகஸ்ட் 15 ஆம் தேதி 79-வது ஆண்டு ச... மேலும் பார்க்க

வாக்குகளைத் தேர்தல் ஆணையம் திருடுவது தேசத்துரோகம்; 100% ஆதாரங்கள் உள்ளன! - ராகுல்

மக்களின் வாக்குகளை தேர்தல் ஆணையம் திருடுகிறது என்பதற்கான 100% ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். பிகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மூலமாக ப... மேலும் பார்க்க

நுரையீரல் புற்றுநோய் நாள் இன்று! தில்லியில் இருந்தால் சிகரெட்டே பிடிக்க வேண்டாம்!!

புது தில்லி: நுரையீரல் புற்றுநோய் நாள் ஆகஸ்ட் ஒன்றாம் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. இன்றைய நாளில் நுரையீரல் புற்றுநோய் வராமல் தற்காத்துக் கொள்வதற்கான விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்படும்.இந்த நாளில், ஆசிய... மேலும் பார்க்க

செப். 9 குடியரசு துணைத் தலைவர் தேர்தல்!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு செப்டம்பர் 9 ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.நாட்டின் 14-ஆவது குடியரசு துணைத் தலைவரான ஜகதீப் தன்கா் ஜூலை 2... மேலும் பார்க்க