செய்திகள் :

டிசம்பரில் இந்தியாவுக்கு வரும் மெஸ்ஸி..! தோனியுடன் விளையாடுகிறாரா?

post image

ஆர்ஜென்டீன கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி வரும் டிசம்பர் மாதம் இந்தியாவுக்கு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கால்பந்து உலகில் 8 முறை தங்கப் பந்து (பேலந்தோர்) வென்ற ஒரே வீரராக மெஸ்ஸி இருக்கிறார்.

மும்பையின் வான்கடே திடலில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள வரும் டிச.11ஆம் தேதி மெஸ்ஸி வருவதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவின் 7 நட்சத்திர கிரிக்கெட் வீரர்களுடன் மெஸ்ஸி இணைந்து கிரிக்கெட் விளையாட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

எங்கெல்லாம் மெஸ்ஸி வருவார்?

மும்பையை தவிர்த்து கொல்கத்தா, தில்லிக்கும் மெஸ்ஸி வரவிருக்கிறார். டிச.13 முதல் 15ஆம் தேதி வரை பல நிகழ்ச்சிகளில் மெஸ்ஸி கலந்துகொள்ளவிருக்கிறார்.

கொல்கத்தாவில் குழந்தைகளுக்கான கால்பந்து போட்டி உள்பட பல நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கின்றன.

இந்த நிகழ்வில் மமதா பானர்ஜி கலந்துகொள்கிறார். இவர் மெஸ்ஸியின் தீவிர ரசிகர்.

சமீபத்தில் மெஸ்ஸியின் கையெழுத்துப் பெற்ற ஜெர்ஸியை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.

2-ஆவது முறையாக இந்தியாவுக்கு வரும் மெஸ்ஸி

இந்தாண்டின் தொடக்கத்தில் கேரள அமைச்சர் மெஸ்ஸி அக்டோபர் அல்லது நவம்பரில் திருவனந்தபுரம் வருவதாகக் கூறப்பட்டிருந்தது.

நட்புறவான போட்டி ஒன்றில் மெஸ்ஸி பங்கேற்க இருந்தது. பின்னர், இந்த நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதற்கு முன்பாக மெஸ்ஸி 2011-இல் கொல்கத்தா வந்திருந்தார். தற்போது, இரண்டாவது முறையாக இந்தியாவுக்கு வரவிருக்கிறார்.

மெஸ்ஸியின் சாதனைகள்

38 வயதான மெஸ்ஸி 388 அசிஸ்ட்ஸ், 874 கோல்கள் அடித்துள்ளார். 8 பேலந்தோர், 6 ஐரோப்பியன் தங்கக் காலணிகள், 45 கோப்பைகளை வென்றுள்ளார்.

கடந்த 2022-இல் உலகக் கோப்பை வென்ற அவர் ஓராண்டில் 91 கோல்கள் அடித்து சாதனை நிகழ்த்தியுள்ளார்.

ndian football fans are in for a treat as legendary Argentine star Lionel Messi is set to visit Mumbai’s iconic Wankhede Stadium on December 14.

பறந்து போ படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

பறந்து போ படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.இயக்குநர் ராம் இயக்கத்தில் நடிகர்கள் சிவா, கிரேஸ் ஆண்டனி, அஞ்சலி, மிதுல் ரியான் நடிப்பில் வெளியான ‘பறந்து போ’ திரைப்படம... மேலும் பார்க்க

தேசிய விருது பெற்ற ஜி.வி.பிரகாஷ்! தனுஷுக்கு நன்றி!

2023 ஆம் ஆண்டில் வெளியான திரைப்படங்களுக்கான தேசிய விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டது. இவற்றில் சிறந்த இசையமைப்பாளராக ஜி.வி. பிரகாஷ் (வாத்தி படத்துக்காக) விருது பெற்றுள்ளார்.இரண்டாவது முறையாக தேசிய விருத... மேலும் பார்க்க

தி கேரளா ஸ்டோரி படத்திற்கு 2 தேசிய விருதுகள் அறிவிப்பு

கேரளத்தில் கடும் எதிா்ப்பு எழுந்ததி கேரளா ஸ்டோரி படத்திற்கு 2 தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிறந்த இயக்குநர் சுதிப்தோ சென் மற்றும் சிறந்த ஒளிப்பதிவு பிரசந்தனு மொஹபத்ரா ஆகிய பிரிவுகளில் விருதுகள... மேலும் பார்க்க

முதல்முறையாக தேசிய விருது: சிறந்த நடிகையாக ராணி முகர்ஜி!

சிறந்த நடிகைக்கான தேசிய விருது பாலிவுட் நடிகை ராணி முகர்ஜி தேர்வாகியுள்ளார். மத்திய அரசு வழங்கும் 71-ஆவது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.இந்தமுறை 2023 படங்களுக்கு விருதுகள் அளிக்கப்பட்டு... மேலும் பார்க்க

வாத்தி படத்துக்காக ஜி.வி. பிரகாஷுக்கு சிறந்த இசையமைப்பாளர் விருது!

இந்தியாவின் 71-ஆவது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழில் வாத்தி படத்துக்காக சிறந்த இசையமைப்பாளர் விருது ஜி.வி. பிரகாஷ் குமாருக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு 2022ஆம்... மேலும் பார்க்க