பாகிஸ்தான் - சிந்து நதி ஒப்பந்தம்: "நம் நாடு எப்படி அழிக்கப்பட்டது தெரியுமா?" - மோடி குற்றச்சாட்டு
பிரதமர் மோடி தற்போது தனது சொந்த மாநிலமான குஜராத்திற்குப் பயணம் மேற்கொண்டிருக்கிறார். அங்கே அவர் மக்கள் மத்தியில் பேசியதாவது...
"நான் இன்றைய தலைமுறையினரிடம் பேச விரும்புகிறேன். உங்களுக்கு நமது நாடு எப்படி அழிக்கப்பட்டது என்று தெரியுமா? 1960-ம் ஆண்டு சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நீங்கள் பார்த்தால், அதிர்ச்சி ஆகிவிடுவீர்கள்.
ஜம்மு & காஷ்மீரில் இருக்கும் மற்ற ஆறுகளில் அணை கட்டினால் சுத்தமாக இருக்காது என்று அப்போதே முடிவு செய்யப்பட்டது.
அங்கே தூர்வாருதலும் நடக்காது. இந்த அணையின் கீழ் இருக்கும் சுத்தம் செய்ய வேண்டிய கதவுகள், திறக்கப்பட மாட்டாது என்று அப்போதே கூறப்பட்டது.
அதே மாதிரி, 60 ஆண்டுகளுக்கு, அந்தக் கதவுகள் திறக்கப்படவில்லை. அதனால், 100 சதவிகித கொள்ளளவு கொண்ட நீர்த் தேக்கங்கள் தனது சக்தியை இழந்தன. இப்போது அது 2 - 3 சதவிகிதம்தான் உள்ளது.
என்னுடைய சக மக்களுக்குத் தண்ணீருக்கான உரிமை இல்லையா? நான் ஒன்றும் அதிகமாகச் செய்துவிட வில்லை. இப்போது சில அணைகளின் கதவுகள் திறக்கப்பட்டு, சுத்தம் செய்யப்பட்டுள்ளன.
அங்கே இருந்த குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன. இதுவே பாகிஸ்தானைப் பயம் கொள்ள வைக்கிறது" என்று கூறியுள்ளார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb